Saturday, December 1, 2007

கொலை செய்ய லைசென்ஸ்? -டாக்டர்கள் ஜாக்கிரதை.

பக்கத்து வீட்டுக்காரனை நம்பி பக்கெட்டை குடுத்து வைக்காதவன் கூட டாக்டரை நம்பி தன் உயிரையே ஒப்படைக்கிறான்.அந்த காலத்துல டாக்டரெல்லாம் தெய்வம் மாதிரி.நோயாளியின் நலத்தை மட்டுமே அடிப்படையா நெனச்சு வேலை செய்வாங்க.. இப்ப எல்லாமே வியாபாரமாயிடுச்சு. அவசியமில்லா டெஸ்டுகள்.
தேவையில்லா ஆப்ரேஷன்கள்ன்னு வர்ரவங்கள மொத்தமா போண்டியாக்குற வேலைதான் நடக்குது.

இதெல்லாம் தனியார் மருத்துவ கல்லூரிகள்,தனியார் மருத்துவமனைகள் போன்ற பணமும் , பணம் சார்ந்த விசயங்களும்  வந்ததுக்கப்பறமுன்னு தோனுது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப ,மருத்துவ வசதிக்கு தனியார் அவசியமென்றாலும் அதுவே மக்கள் நலனுக்கு எதிரா செயல்படற அளவு மாறிட்டாக்கா..

ஒரே நோயுக்கு நகரத்துல உள்ள பத்து மருத்துவமனைகளும் பத்து விதமான சிகிச்சையை குடுக்க பரிந்துரைக்கிறாய்ங்க..எல்லாரும் ஒரே மாதிரியா படிச்சிட்டு வந்தவிங்க தான பின்ன ஏன் இம்புட்டு வேறுபாடு?.
அந்த பத்துல எது நல்லதுன்னு ஒரு முடிவுக்கு வந்து எல்லாரும் செய்யலாமில்லையா?.பெரும்பாலான சிகிச்சைகள் பணம் பிடுங்குவதை குறிக்கோளாக கொண்டவை.

ஒரே வெரலின் நுனியில வெட்டுப்பட்ட ஒரு நண்வருக்கு ,ஒரு இளம் டாக்டர் குடுத்த கொலைவெறி பரிந்துரையை பாருங்க..(புதுவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை).கேட்ட எனக்கே குலை நடுங்க்கிவிட்டது..

நோயாளியின் இடுப்பை கிழித்து , காயமடைந்த கையில் உள்ள நான்கு விரல்களையும் சேர்த்து சொருகி,அதை தைத்து விடுவாரம். பதினைந்து நாட்களுக்கு கையை அசைக்காமல் இருக்க கையை உடம்போடு சேர்த்து கட்டுப்போட்டு விடுவாராம்.
வெட்டுப்பட்ட இடத்தில திசு வளர்ந்ததும் விரல்களை உருவி வெளியே எடுத்து ஆப்பரேஷன் செய்து பழையபடி கொண்டு வந்து விடுவாராம்.
பாதி நகம் அளவு விரலில் வெட்டுப்பட்டதுக்கு ,எதுக்கு நல்லா இருக்குற வயத்த கிழிக்கனும்?அதுவும் கிட்னி இருக்குற இடத்துல..நாளு வெரல பதினைஞ்சு நாளுக்கு சொருகி வைச்சாக்கா.. இன்பெக்ஸன் ஆகாதா?பின்விளைவுகள் வராதா?. இதுல முக்கியம் உயிரா? விரலின் அழகா?.
வலியினால் வந்த நோயாளிக்கு அதை மட்டும் சரி செய்யாம தனக்கு பணம் வர, இதைப்போன்ற விபரீதமான ஆலோசனைகளை சொல்லுவது ஏன்?.,

விசாரிச்சிப்பாத்தாக்கா.. அந்த டாக்டரோட அப்பா.. அவர பணம் குடுத்து படிக்க வைச்சி, இந்த ஆஸ்பத்தரியையும் பிரமாண்டமா கட்டிக்குடுத்துட்டாராம்.
மற்ற இடங்களில் போதிய வேலை செய்து அனுபவமில்லாத மருத்துவர் ,ஆராய்ச்சி நிலையில் இருக்குற முறைகளை வெளி நாட்டு மேகஸீன்களில் படிச்சிட்டு தானும் அதெல்லாம் செஞ்சிப்பாக்கனும்மின்னு ஆர்வக்கோளாருல ,மருத்துவமனையின் பிரமாண்டத்தை நம்பி ஏமாற்ந்து வர்ர பொதுமக்களை "பரிசோதனை எலி"யா பயன்படுத்தராரு. வெற்றியடைஞ்சிட்டாக்கா அது சாதனை,நோயாளிக்கு பிரச்சனை ஆயிட்டாக்கா அது தெய்வச்செயல்.ஒடனே அரசு மருத்துவ மனைக்கு கொண்டு போவ சொல்லிடுவாய்ங்க. என்ன கொடுமைங்க இது?..

மிரண்டு போன நண்பர் , டிஸ்கவுண்டு குடுக்கரதா மேலும் கட்டாயப்படுத்துன கொலைகாரனிடமிருந்து (அப்படித்தான சொல்ல வேண்டியிருக்கு?)தப்பிச்சி ஒரு அரசு மருத்துவ மனைக்கு வந்து கட்டு போட்டிருக்கார்.இப்போ நண்பர் விரலுல லேசான தழும்புடன் சுகமா இருக்கார்.வேலைக்கும் போக ஆரம்பிச்சிட்டாராம்.

சாதாரண பிரச்சனைகளோட வர்ரவிங்களை, நிரந்தர நோயாளிகளா மாத்துற வேலையைத்தான் இன்றைய பல மருத்துவமனைகள் செய்கின்றன.
இப்பெல்லாம் அடிக்கடி "விசயத்துக்காக வந்த நோயாளி , தவரான சிகிச்சையால் இறந்து விட்டார்ன்னு டாக்டருக்கெதிரான போராட்டங்கள மக்கள் செய்வதும். நீதிமன்றங்கள் மருத்துவர் நஷ்ட ஈடு(?) தர பரிந்துரைப்பதையும் அடிக்கடி பத்திரிக்கைகளில் காணலாம்.மாறிவரும் மருத்துவத்துறையின் அவலத்துக்கு இதுவே சாட்சி..

தங்கள் பணியின் புனிதத் தன்மையை உணர்ந்து சேவை ஆற்றும் மருத்துவர்கள் இப்பவும் இருக்காய்ங்க.. நம்ம டெல்ஃபின் அக்கா மாதிரி..

பணம் குடுத்து படிச்சிட்டு வரும் அவசர குடுகைகள், தாங்கள் விளையாடுவது சோதனை எலியோட இல்லை.. நம்மை மாதிரி ஒரு மனித உயிரோடு, அவர்களுக்கும் நம்மை மாதிரி ஒரு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை.அலட்சியம், விரைவில் பணம் பண்ணும் ஆசை.

அவர்கள் சாதனை செய்யனுமின்னாகா அவிங்க குடும்பத்த சேந்தவிங்களை கொண்டு சோதனை செய்யலாமே?..தன்னை முழுசா கடவுள் மாதிரி நம்பி வந்த நோயாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்வது என்ன நியாயம்?.மனப்பாறை சிறுவனை விட்டு ஆப்பரேஷன் செய்ய வைச்ச டாக்டருக்கு அவர் பையனை விட்டே ஒரு ஆப்பரேஷன் செய்யனுமின்னு தோனுது.

அவரு அதை சாதனையா நெனச்சு வெளியே சொல்லியில்லாட்டி யாருக்குமே தெரிஞ்சியிருக்காது. இது போல எத்தனை முறை நடந்து அது தோல்வில முடிஞ்சிருக்கோ?அவருக்குதேன் வெளிச்சம். சில பேரு இப்ப பின்விளைவுகள் இருக்கறதா சொல்லி புகார் குடுத்திருக்கராய்ங்க...(அதுல பாவம் ஒரு பெண் ,தவரான சிகிச்சையால இளம் வயசுலயே தன்னோட வாழ்க்கையையே தொலைச்சு ,வேறு மறுத்துவமனைக்கு மாற்றப்பட்டாய்ங்க..)

திறமை, அனுபவமற்ற ஒரு மருத்துவரை உருவாக்குதென்பது, கொலைசெய்ய லைசென்ஸ் கொடுப்பதைப் போன்றது.பாதிப்பு உடனே இல்லையெனிலும்,பின்விளைவுகள் நிச்சயமுங்க..இதனால பாதிக்கப்போவது நம்மோட சந்ததிகள்தான்னு நெனைக்குபோது ரொம்ப கஷ்டமாயிருக்கு..


மருத்துவதுறையில், சில பணக்கார மருத்துவமனைகள் வெளி நாட்டினரையும் கவரும் வகையில சாதனைகள் செய்யும் இந்தக்காலகட்டத்தில்..
அதைப்பார்த்துவிட்டு அரைக்குறை அறிவோட,அவசியமான வசதிகள் இல்லாம..,சொந்த மருத்துவமனை உள்ளதே கொலைசெய்ய ஒரு லைசென்சாக எடுத்துக்கிட்டு ,மக்களை சோதனை எலியா பயன்படுத்தரவிங்களை கட்டுப்படுத்துவது ரொம்ப அவசியமுங்க...

இந்த காலத்துல குருன்னு சொல்லற வாத்தியாரக்கூட மதிக்கறதில்ல.. மருத்துவர்கள் மேல ஏதோ கொஞ்சம் மரியாதை இருக்கு.. உங்க அக்கம் பக்கத்து வீட்டுல இருக்கறவிங்க "டாக்டர் ஜயா",டாக்டர் அம்மா"ந்னு மரியாதையா குடுக்கரதை பாத்துப்புட்டு தரையில கால் படாம பறக்காதிங்க..
அந்த மரியாதையை பாக்கும்போது ,நீங்க செய்ய வேண்டிய சேவையும், கடமையும் தான் உங்களூக்கு மனசுக்கு வரனுங்க்கோ..

இப்பெல்லாம் மருத்துவ மாணவர்கள் போராட்டங்களை பார்க்கும் போது சிரிப்பு வருது..

மொட்டையடிக்கும் போராட்டம்,தூக்கு மாட்டும் போராட்டம் & சடலம் போல படுத்து போராட்டம்.. என்னாது இது?.. நீங்க்கெல்லாம் வருங்கால தெய்வமாகி,எங்களுக்கு வைத்தியம் பாத்தாக்கா இப்பிடிதேன் நடக்குமின்னு சிம்பாலிக்கா சொல்லறிங்களோ?..படிப்புக்கேத்த மெச்சுரிட்டி வேண்டாம்? நாளைக்கி மருத்துவமனையில ஏதாவது சின்ன பிரச்சனை வந்தாக்கூட பாதி ஆப்பரேஷனுல விட்டுட்டு ஸ்டெய்க் பண்ணிவிங்க போலயிருக்கே...
இப்பவே உங்க சொந்த தேவைகளை இம்புட்டு முன்னிறுத்தி பாக்கறீங்கன்னாக்கா.,. நோயாளிக்கு ஆபத்துன்னாக்கா நேரம், காலம் , இடம் பாக்காம பொது சேவை செய்ய மனம் வேண்டிய மருத்துவ துறைக்கு வந்து என்னா செய்யப்போறிங்கன்னு நெசமா புரியலை...
புனிதமான மருத்துவ துறையில் புக முயலும் அரசியலை அனுமதிக்க வேணாமுங்க.. யாரோ சொல்லறதைக்கேட்டு உணர்ச்சி வசப்படாதிங்க.. டாக்டர்களுக்கு பொறுமையும்,சகிப்புத்தன்மையும் ரொம்ப அவசியம். அதனாலதேன் இந்த படிப்புக்கு அம்புட்டு மதிப்பு.
ஒரே வருஷந்தானே... அதுவும் சம்பளத்தோட பயிற்ச்சி.. கரும்பு தின்ன கூலியும்.

மாணவர்களின் சிரமத்த விட ,மக்களோட உயிரை நெனச்சுப்பாக்கும்போது ,பயிற்சி டாக்டர்களின் ,பயிற்ச்சி காலத்தை உயர்த்துவது தப்பேயில்லேன்னு தோனுது.364 1/4  நாட்களில ஒரு பொடலங்காயும் நஷ்டமாவப்போறதில்ல.. அதுவும் அரசாங்க பணத்துல படிச்சிட்டு...

அப்பத்தேன் ,படிச்சி கிழிச்ச உடன் அப்பா காசுல ஒரு ஆஸ்பத்தரி கட்டி கொலைய ஆரம்பிக்க துடிக்கும் சில இளம் தெய்வங்களுக்கு ,அட்லிஸ்ட் உண்மையான மருத்துவர்களோட மேற்பார்வையில் கொஞ்சம் அனுபவம் கெடைக்கும்.


நாங்களும் டென்சனாவோமில்ல...

 
 

84 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

நான் தான் ரெண்டாவது :))

போய் போஸ்ட படிச்சிட்டு வர்றேன் :)

said...

இந்த பதிவுக்கு கமெண்ட் போடறதுக்கு நான் சரியான ஆள் இல்லை.. ஜலதோஷம், ஜூரம்னு சின்ன விஷயத்துக்கு மாத்திரை சாப்பிட சொன்னாலே அவ்ளோ கஷ்டப்பட்டு மாத்திரை சாப்ட்டு உயிர் வாழனுமான்னு கேள்வி கேக்கற ஆள் நான். [உனக்கென்ன ஏதாவது ஒன்னுன்னு நீ படுத்துட்டா உனக்காக எல்லா வேலையும் செஞ்சு அல்லாடறது நான் தானேன்னு எங்கம்மா சொல்ற டயலாக் எல்லாம் இங்க சொல்லனுமா என்ன :P]

said...

சமூகசேவை மனப்பான்மை உள்ளவர்களே மருத்துவர் ஆக தகுதி படைத்தவர்கள் பணம் சம்பாஅதிக்கும் நோக்குடன் மருத்துவராக யாரும் வரவேண்டாம் பணம் சம்பாதிக்க எவள்வோ படிப்புகள் உள்ளன பணமெ குறிக்கோளாய் உள்ள ஒருவனால் நோயாலிக்கு சாவுதான் நிச்சயம் நல்வாழ்வு இல்லை நகரவாழ்வையும் எடுத்ததும் கொள்ளை பணம் சம்பாதிக்கும் ஆசையுடம் கொடிபிடிக்கும் மானவர்களால் யாருக்கு நன்மை அனைவருக்கும் தீமையே

said...
This comment has been removed by the author.
said...

Romba Saridhan..

said...

மருத்துவர்களுக்கு ஒரு சில்ல நிபந்தனைகளை அரசு விதிக்கவேண்டும்.
1. டிரைவிங் லைசன்ஸ்க்கு இருப்பது போன்று ஒரு மருத்துவரின் சிகிச்சையில் தவறாக செய்து இறந்த நோயாளின் என்னிக்கை 5 ஐத் தாண்டும் போது அவருக்கு அவருடைய மருத்துவப்பட்டம் பறிக்கப்படவேண்டும். அதனுடன் தேவைப்படின் சிறைதண்டனையும் அளிக்கவேண்டும்.
2. 5 ஆண்டுக்கு ஒரு முறை 6 மாதம் திறனாய்வு பயிர்ச்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் அப்போது புதிய மருத்துவமுறைகளை அப்டேட் செய்ய வேண்டும் திறனாய்வு தேர்வில் தோல்வியுற்ற மருத்துவர்களை தகுதியிழந்தவர்களாக கருதி பட்டம் பரிக்கப்படவேண்டும்.
3. ஆபத்துகாலத்தில் வரும் நோயாளிக்கு பனம் இல்லை என்று கூறி எந்த மருத்துவமனையும் நிராகரித்தால் அந்த மருத்துவமனைக்கு அங்கிகாரம் ரத்து செய்யப்படவேண்டும் மருத்துவர் நிராகரித்தால் சிகிச்சை அளிக்காமல் நோயாளி உயிர் இழந்தால் அந்த மருத்துவரை கொலை குற்றவாலிக்கு இனையாக கருதி சிறைதண்டனை அளிக்கவேண்டும்.

said...

வாங்க டெல்ஃபின் அக்கா...

// delphine said...

ரசிகரே! நன்றி..ஆனால் இந்த கட்டுரையை படித்து நம் மக்களின் கருத்து என்ன என்பதை பார்த்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன். நீங்கள் எழுதியிருப்பது அப்பட்டமான உண்மை.//

பல வருடங்களாய் மருத்துவத்துறையில சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றிய சீனியரான ,நீங்க இந்த இடுகைப்பத்தி கருத்த சொல்லறது எம்புட்டு பொருத்தம்...
நீங்க வந்து "சொன்னது சரியாத்தேன் இருக்கு"ன்னு வெரிஃபை செஞ்சி சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.வருகைக்கும் , பாராட்டுக்கு நன்றிகள்.
அதுபோலவே என்னோட கருத்துல தவறு இருந்து அதை ,விசயம் தெரிஞ்ச நீங்க சுட்டிக்காட்டினாக்கா.. சந்தோஷத்தோட தெரிஞ்சிக்கவும் ஆவலா இருக்கேன்.

said...

//பணம் குடுத்து படிச்சிட்டு வரும் அவசர குடுகைகள், தாங்கள் விளையாடுவது சோதனை எலியோட இல்லை.. நம்மை மாதிரி ஒரு மனித உயிரோடு, அவர்களுக்கும் நம்மை மாதிரி ஒரு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை.அலட்சியம், விரைவில் பணம் பண்ணும் ஆசை.
//

nachunu soneenga! nalla alasalaana pathivu! puthi vara vendiyavangalukku varumo varaadho, vara vechida mattom!

said...

//நாங்களும் டென்சனாவோமில்ல...//
athu! ivanungala ellam sue pannai nadu roadukku iluthu vitta thaan adanguvaanunga!

said...

// G3 said...

நான் தான் ரெண்டாவது :)) //

இப்பிடி துறுதுறுன்னு ரொம்ப வேகமா இருக்கறதுல எப்பவுமே G3 தாங்க ஃபர்ஸ்ட்..:P

[ஆமா.. எப்பவுமே கணிணி பக்கத்துலயே இருப்பீங்களா?..]

// போய் போஸ்ட படிச்சிட்டு வர்றேன் :) //

ஆஹா.. இன்னும் பதிவையே படிக்கலியா?..

அப்ப கோலம் போட்டுட்டுதேன் புள்ளி வைப்பிங்க போல ...ஹிஹி..:)))

said...

// G3 said...

இந்த பதிவுக்கு கமெண்ட் போடறதுக்கு நான் சரியான ஆள் இல்லை.. ஜலதோஷம், ஜூரம்னு சின்ன விஷயத்துக்கு மாத்திரை சாப்பிட சொன்னாலே அவ்ளோ கஷ்டப்பட்டு மாத்திரை சாப்ட்டு உயிர் வாழனுமான்னு கேள்வி கேக்கற ஆள் நான்.//

அடடா.. நீங்களும் நம்ம கட்சிதேன் போலருக்கு..ஹிஹி..:D

// [உனக்கென்ன ஏதாவது ஒன்னுன்னு நீ படுத்துட்டா உனக்காக எல்லா வேலையும் செஞ்சு அல்லாடறது நான் தானேன்னு எங்கம்மா சொல்ற டயலாக் எல்லாம் இங்க சொல்லனுமா என்ன :P]//

ஆக உங்க வேலைகளை நீங்களே செஞ்சிக்கிறிங்கன்னு எங்கள நம்பச் சொல்லறிங்களா?..ஹிஹி..:)))

வருகைக்கும் ரொம்ப நன்றிகள் காயத்திரி...:D

said...

// புரட்ச்சி தமிழன் said...

சமூகசேவை மனப்பான்மை உள்ளவர்களே மருத்துவர் ஆக தகுதி படைத்தவர்கள் பணம் சம்பாஅதிக்கும் நோக்குடன் மருத்துவராக யாரும் வரவேண்டாம் பணம் சம்பாதிக்க எவள்வோ படிப்புகள் உள்ளன பணமெ குறிக்கோளாய் உள்ள ஒருவனால் நோயாலிக்கு சாவுதான் நிச்சயம் நல்வாழ்வு இல்லை நகரவாழ்வையும் எடுத்ததும் கொள்ளை பணம் சம்பாதிக்கும் ஆசையுடம் கொடிபிடிக்கும் மானவர்களால் யாருக்கு நன்மை அனைவருக்கும் தீமையே//
நம்ம டாக்டர் அக்கா எதிர்பார்த்த சரியான கருத்த சொல்லி அவிங்ககிட்டயே "சபாஷ் "வாங்க்கிட்டீங்க.. சோ நோ அப்பீல். கலக்கிட்டிங்க..
கருத்து நச்சுன்னு இருக்குங்க புரச்சி தமிழரே...வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்..

said...

// delphine said...

சமூகசேவை மனப்பான்மை உள்ளவர்களே மருத்துவர் ஆக தகுதி படைத்தவர்கள்///
yes Sir! you are right!!//

நன்றிகள் அக்கா.. எதிர்பார்த்த சரியான பதில் கிடைத்ததில் சந்தோஷம் தானே..:P

said...

// Vani said...

Romba Saridhan..//

நால்வருகைகள் வாணி மேடம். கருத்துக்கு நன்றிகள்.

said...

// புரட்ச்சி தமிழன் said...

மருத்துவர்களுக்கு ஒரு சில்ல நிபந்தனைகளை அரசு விதிக்கவேண்டும்.
1. டிரைவிங் லைசன்ஸ்க்கு இருப்பது போன்று ஒரு மருத்துவரின் சிகிச்சையில் தவறாக செய்து இறந்த நோயாளின் என்னிக்கை 5 ஐத் தாண்டும் போது அவருக்கு அவருடைய மருத்துவப்பட்டம் பறிக்கப்படவேண்டும். அதனுடன் தேவைப்படின் சிறைதண்டனையும் அளிக்கவேண்டும்.
2. 5 ஆண்டுக்கு ஒரு முறை 6 மாதம் திறனாய்வு பயிர்ச்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் அப்போது புதிய மருத்துவமுறைகளை அப்டேட் செய்ய வேண்டும் திறனாய்வு தேர்வில் தோல்வியுற்ற மருத்துவர்களை தகுதியிழந்தவர்களாக கருதி பட்டம் பரிக்கப்படவேண்டும்.
3. ஆபத்துகாலத்தில் வரும் நோயாளிக்கு பனம் இல்லை என்று கூறி எந்த மருத்துவமனையும் நிராகரித்தால் அந்த மருத்துவமனைக்கு அங்கிகாரம் ரத்து செய்யப்படவேண்டும் மருத்துவர் நிராகரித்தால் சிகிச்சை அளிக்காமல் நோயாளி உயிர் இழந்தால் அந்த மருத்துவரை கொலை குற்றவாலிக்கு இனையாக கருதி சிறைதண்டனை அளிக்கவேண்டும்.//

அவ்வ்வ்வ்வ்.......

எனக்கு ஏதோ இந்தியன் தாத்தாவும்,அன்னியனும் ஒன்னா பேசுற மாதிரியே இருக்கு... நடைமுறைக்கு ஏற்றதாக படவில்லை என்பது என்னோட தாழ்மையான கருத்து..

ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில்,விபத்தில் காயம்பட்டவரை கொண்டு போனால்.. ஆயிரம் ஃபார்மாலிடிக்ஸ்,போலிஸ் கேஸ் என்று இருந்ததால, சமயத்துல தைரியமா சிக்கிச்சை துவங்க முடியாம இருந்தாங்க..

அதை உணர்ந்து இப்பத்தேன் அரசாங்கம் ,விதிகளை கொஞ்சம் தளர்த்தியிருக்கு...

இப்போ போய் ஆள் இறந்தால் மருத்துவ பதவி போகுனுன்னு சொன்னாக்கா.. எல்லைகோட்டு நிலமையில இருக்குற நோயாளிகளை காப்பாற்ற நல்ல டாக்டர்கள் முயர்ச்சி எடுப்பதைக்கூட இது தடுத்துவிடுமுன்னு தோனுதுங்க..

//திறனாய்வு பயிர்ச்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் அப்போது புதிய மருத்துவமுறைகளை அப்டேட் செய்ய வேண்டும்//

இது ரொம்ப சரியான யோசனைங்க... அவ்வப்போது வரும் புதிய மருத்துவமுறைகளில் பயிற்ச்சியும்,விழிப்புணர்ச்சியும் அவசியம்.

சாதனைகள் புரியும் சில தனியார் மருத்துவமனைகள், புதிய விசயங்களை கான்ஃபிரன்ஸ்,விசிட்டிங் எக்ஸ்பர்ட் டாக்டர்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக தொடர்ந்து தங்களது மருத்துவர் குழுவை அப்டேட் செய்கின்றன. அவற்றின் வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணமுன்னு தோனுது.
இதை எல்லாரும் பின்பற்றலாமே..

நீங்க சொன்ன மாதிரி தனியார் நடத்தும் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போய் அங்கு உள்ள நோயாளிகளின் சூழல்,வழங்கப்படும் மருத்துவமுறைகள் போன்றவற்றை ஆய்வு செய்து சான்று கொடுக்க..
"பறக்கும் ஒரு மருத்துவர் குழ"ுவை ,மருத்துவதுறை அமைத்தாலே பெரும்பாலான தவறுகள் தவிர்க்கப் படுமுன்னு தோனுது.

said...

வாங்க டிரிம்ஸ் மாம்ஸ்..

// //பணம் குடுத்து படிச்சிட்டு வரும் அவசர குடுகைகள், தாங்கள் விளையாடுவது சோதனை எலியோட இல்லை.. நம்மை மாதிரி ஒரு மனித உயிரோடு, அவர்களுக்கும் நம்மை மாதிரி ஒரு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை.அலட்சியம், விரைவில் பணம் பண்ணும் ஆசை.
//
nachunu soneenga! nalla alasalaana pathivu! puthi vara vendiyavangalukku varumo varaadho, vara vechida mattom!//


//நாங்களும் டென்சனாவோமில்ல...//
athu! ivanungala ellam sue pannai nadu roadukku iluthu vitta thaan adanguvaanunga!// //

சரியா சொன்னிங்க... எல்லாம் இடையில அரசியல்வாதிங்க மாணவர்களை குழப்புறதால வந்ததுன்னு தோனுது..
மாணவர்களுக்கு சரியா வழிகாட்ட அரசியல் தொடர்பில்லாத மருத்துவ ஆசிரியர்கள் அமைப்பு ஒன்று இல்லாதது பெரிய குறைதான்.

வருகைக்கும் , ஆதரவுக்கும் ரொம்ப நன்றிகள் உங்களுக்கு...

Anonymous said...

ஆமோதிக்கிறேன்.

said...

//தப்பிச்சி ஒரு அரசு மருத்துவ மனைக்கு வந்து கட்டு போட்டிருக்கார்.//

முதலில் அரசு மருத்துவமணைக்கு வரவேண்டியது தானே :) :)

//அவர்கள் சாதனை செய்யனுமின்னாகா அவிங்க குடும்பத்த சேந்தவிங்களை கொண்டு சோதனை செய்யலாமே?..//
இது குறித்து எனக்கு தெரிந்த சம்பவம்
http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_24.html

//அதுவும் சம்பளத்தோட பயிற்ச்சி.. கரும்பு தின்ன கூலியும்.//
There are more issues in this than what you think. Please see http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html

Please note that there is a similar scheme in Tamil Nadu which no one opposes. In Tamil Nadu doctors are posted after PG
1. With Full Pay
2. Permanent Jobs

No one opposes that

The present scheme gives 1/3rd of pay and a contract job. That is the reason for opposition.

//அப்பத்தேன் ,படிச்சி கிழிச்ச உடன் அப்பா காசுல ஒரு ஆஸ்பத்தரி கட்டி கொலைய ஆரம்பிக்க துடிக்கும் சில இளம் தெய்வங்களுக்கு ,அட்லிஸ்ட் உண்மையான மருத்துவர்களோட மேற்பார்வையில் கொஞ்சம் அனுபவம் கெடைக்கும்.//

You should understand that there are two categories of medical students

Category I
1. Sons of doctors
2. Sons of Judges, IAS Officers, Politicians

Category II
1. Sons of teachers and middle class families

You seem to direct your anger at Category I, while totally ignoring the plea of Category II.

What Category II asks is a permanent job.

Please read this post http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html and then keep in mind that doctors are already working in government after completing PG and then if you have any doubts, I am ready to clear.

said...

//1. டிரைவிங் லைசன்ஸ்க்கு இருப்பது போன்று ஒரு மருத்துவரின் சிகிச்சையில் தவறாக செய்து இறந்த நோயாளின் என்னிக்கை 5 ஐத் தாண்டும் போது அவருக்கு அவருடைய மருத்துவப்பட்டம் பறிக்கப்படவேண்டும். அதனுடன் தேவைப்படின் சிறைதண்டனையும் அளிக்கவேண்டும்.//
The rule is already there..only you are not aware of that... (of course majority of public do not know anything about the medical field)...

said...

// 5 ஆண்டுக்கு ஒரு முறை 6 மாதம் திறனாய்வு பயிர்ச்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் அப்போது புதிய மருத்துவமுறைகளை அப்டேட் செய்ய வேண்டும் திறனாய்வு தேர்வில் தோல்வியுற்ற மருத்துவர்களை தகுதியிழந்தவர்களாக கருதி பட்டம் பரிக்கப்படவேண்டும்.
//
The first sensible point you have written this evening...

Right now there are 1.7 lakh "quacks" practising - including nurses, pharmacists, tailors... First arrest them.....
--
What you have suggested is similar to what Ram Jeth Malani tried to bring for lawyers in 2000..
I welcome this

said...

//ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில்,விபத்தில் காயம்பட்டவரை கொண்டு போனால்.. ஆயிரம் ஃபார்மாலிடிக்ஸ்,போலிஸ் கேஸ் என்று இருந்ததால, சமயத்துல தைரியமா சிக்கிச்சை துவங்க முடியாம இருந்தாங்க..

அதை உணர்ந்து இப்பத்தேன் அரசாங்கம் ,விதிகளை கொஞ்சம் தளர்த்தியிருக்கு...//
"தளர்த்தியிருக்கு..." I am not sure of this.. The rules have in fact become more "rigid"... Supreme Court has categorically said that AR Entry and Police Intimation can be done after treatment... That is if a person come to a doctor with a bullet injury (for example) the doctor has to first remove the bullet and then only inform the police....

//இப்போ போய் ஆள் இறந்தால் மருத்துவ பதவி போகுனுன்னு சொன்னாக்கா.. எல்லைகோட்டு நிலமையில இருக்குற நோயாளிகளை காப்பாற்ற நல்ல டாக்டர்கள் முயர்ச்சி எடுப்பதைக்கூட இது தடுத்துவிடுமுன்னு தோனுதுங்க..//

Bitter, but true.... No one will treat dangerously ill patients...

//திறனாய்வு பயிர்ச்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் அப்போது புதிய மருத்துவமுறைகளை அப்டேட் செய்ய வேண்டும்//
Excellent Idea.... before embarking on this, should not we prevent tailors, nurses, pharmacists, health inspector, vhns etc practising medicine.....

Should not the government crackdown on the quacks.....

That is you want a person who has already passed MBBS to pass again after five years... This is a very good idea... but there are persons who are practising who have not even entered medical college... no one is taking action against them....

So even if the rule comes, who is to take action against a doctor who has not "renewed" his degree as we have a state that no action is taken against persons who has not got a degree in first place :) :) :)

A public movement is needed for this

said...

//(mediclaims)..//

Madam, I disagree with you ... Mediclaims are only for "Bigggg" hospitalisations....

For example, if a person wants to get treated for Malaria or Typhoid Mediclaim is "practically" useless...

Added to this 99% of Medical Insurances don't cover pregnancy.....

Hence, the best option is for the "middle class" (blogging class) to come to government hospitals... Only if the middle class comes to government institutions and question the Class IV workers and write few complaints regarding the sanitation, GH will improve...

ரசிகரே
By the way, அரசு மருத்துவமணைகளில் உங்கள் சிறுநீரகம் திருடு போகாது.... தேவைக்கு அதிகமான வைத்தியம் யாரும் தர மாட்டார்கள் :) :) :)

said...

The difference between compulsary rural service for UGs and compulsary rural service for PGs.
http://bruno.penandscale.com/2007/11/comparing-compulsary-1-year-service-for.html

Please note that no one is opposing the later. Please understand the difference

said...

டாக்டர் விஜயை பற்றி தவறாக எழுதப்பட்ட இந்த பதிவை நான் கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்

இவன்

கம்பவுன்ட்ர்
டாக்டர் விஜய் க்ளினிக்
கோடம்பாக்கம்

said...

//
உனக்கென்ன ஏதாவது ஒன்னுன்னு நீ படுத்துட்டா உனக்காக எல்லா வேலையும் செஞ்சு அல்லாடறது நான் தானேன்னு எங்கம்மா சொல்ற டயலாக்
//
சைக்கிள் கேப்பில் ஹெலிகாப்டர் ஓட்ட நினைக்கும் G3 யை வன்மையாக கண்டிக்கிறேன்!!

said...

//
உனக்கென்ன ஏதாவது ஒன்னுன்னு நீ படுத்துட்டா உனக்காக எல்லா வேலையும் செஞ்சு அல்லாடறது நான் தானேன்னு எங்கம்மா சொல்ற டயலாக்
//
இல்லைனா மட்டும் என்னமோ வீட்டுல எல்லா வேலையும் செஞ்சிடறாப்புல எதுக்கு இந்த பில்டப்பெல்லாம் நமக்கு!!

said...

\\மனப்பாறை சிறுவனை விட்டு ஆப்பரேஷன் செய்ய வைச்ச டாக்டருக்கு அவர் பையனை விட்டே ஒரு ஆப்பரேஷன் செய்யனுமின்னு தோனுது.\\

ரொம்ப சரியா சொன்னீங்க ரசிகன்!

100% சமூக சேவை மனப்பான்மை இல்லீனா கூட பரவாயில்லீங்க,
பணம் மட்டுமே குறிக்கோளா இல்லாம, மருத்துவர்கள் மனிதாபிமானத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டாலே போதும்!

said...

former perisident apj abdul kalam told in ramachandra medical college speech medical college students redy to serve villages any one think abdul kalam telling wrong

said...

//medical college students redy to serve villages any one think abdul kalam telling wrong//

Medical college students are ready to serve villages as Medical Officers and not as contract labourers....

Please read this post http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html and then keep in mind that doctors are already working in rural areas after completing PG and then if you have any doubts, I am ready to clear.

DO read the comments at the above post

said...

நீங்க இதுல இரண்டு விஷயத்தை சொல்லியிருக்கீங்க.

முதல் நிகழ்வான தரக்குறைவான மருத்துவர்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. ஆனால், பல சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதைய்யும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது நிகழ்வான மருத்துவ மாணவர்கள் போராட்டம்பற்றிய என் கருத்து சற்று வேறுபடுகிறது.

படிப்பை மட்டுமே முடித்துவிட்டு, துளிக்கூட அனுபவமில்லாத பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை கிராமத்துக்கு அரசு அனுப்பும் இந்தச் செயல் சிறிதும் முறையற்றது.

கிராமப்புற மக்கள் என்ன கினிபிக்குகளா?[[guinea pigs]

கிராம சேவைக்குத் தேர்ந்த மருத்துவர்களை அனுப்ப வக்கில்லாத மத்திய அரசும், அதை செய்ய இயலாத மாநில அரசும், இப்படி மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையிலும், அப்பாவி மக்களைப் பலிகடா ஆக்கும் செயலிலும் , விளையாடுவது கண்டிக்கத் தக்கது.

நிலைமையின் தீவிரம் புரியாமல், சிலர் இங்கு எழுதிவருவது வேதனை அளிக்கிறது.

அரசுப்பணி நிரந்தரமாக வேண்டுமா, .. முதல் இரு ஆண்டுகள் ஒரு சீனியர் மருத்துவரின் மேற்பார்வையில் பனி புரிந்த பின், வேலையில் சேர்ந்த மூன்றாம் ஆண்டு, கண்டிப்பாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விடுப்பு ஏதும் எடுக்காமல், "எந்தக் கொம்பனாயிருந்தாலும்", ஓராண்டு பணி புரிந்தே ஆக வேண்டும்; பின்னர்தான் பணி நிரந்தரமாக்கப்படும் என ஒரு கட்டாய சட்டம் கொண்டுவர தைரியம் இருக்கிறதா இந்த அரசுகளுக்கு?

பிறகு பேசட்டும் இவர்கள்!

இன்னொரு விஷயம். கிராம மக்களும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உயிர்களுக்கு உத்திரவாதம் கிடைக்கும்!

said...

நம்ம மருத்துவத்துறையின் அவலத்தை அப்படியே கொத்து பரோட்டா போட்டுட்டீங்க ....என்னதான் எழுதினாலும் யாரும் திருந்தமாட்டார்கள்...நம்ம ஆதங்கத்தை அப்பப்போ கொட்டிக்க வேண்டியதுதான்...

said...

15 வயது சிறுவனை ,சிசேரியன் சிகிச்சை செய்ய வைத்து கின்னஸில் இடம் பிடிப்பேன் என்று மார் தட்டிய நாடு நம் நாடு....

said...

goma said

//நம்ம மருத்துவத்துறையின் அவலத்தை அப்படியே கொத்து பரோட்டா போட்டுட்டீங்க ....என்னதான் எழுதினாலும் யாரும் திருந்தமாட்டார்கள்...நம்ம ஆதங்கத்தை அப்பப்போ கொட்டிக்க வேண்டியதுதான்...//

நிதர்சனமான உண்மை. அதை நானும் வழிமொழிகிறேன்.

said...

அனுராதாவின் பதிவுக்கு என்னோட லிஸ்ட்லே லிங்க் கொடுத்திருக்கேன். பல மாதங்களாய் எழுதி வருகிறார்.

said...

ரசிகன்.. தங்கள் நல்ல மனம் வாழ்க. நல்ல பதிவிற்கு நன்றி.

சில மருத்துவர்களை தெய்வமாக நினைக்கத் தோன்றுகிறது. சில மருத்துவரை - 'இதயம்' இல்லாத மனிதர்களாகவே கருதத்தோன்றுகிறது.

உயிருக்குப் போராடும் தன் மகளின் சிகிச்சைக்காக 'இந்தியன்' தாத்தா, மருத்துவரிடம் கெஞ்சும் போது நமக்கெல்லாம் அந்த சுயநல மருத்துவ மிருகத்திடம் கோபம்தான் வருகிறது.

மருத்துவமும் ஒரு தொழில்தானே.. மருத்துவரும் இன்றைய சமூகத்தின் ஒரு அங்கம்தானே. இன்றைய சந்தைப்பொருளாதார-தாராளமய வியாபாரச் சூழலில், எல்லாமே மாறிக்கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர்களது மனோபாவத்தை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க எதிர்பார்க்க முடியும் என்பது தெரியவில்லை.

சரி, புதிய சட்டம் இயற்றி எல்லாவற்றையும் சீர் செய்யலாம் என்றால், இதுவரை இயற்றிய சட்டங்களையே அமுல்படுத்த அரசாங்கம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கக் காணோமே.. யாரைக் குறை சொல்ல...

என்னதான் இருந்தாலும், +2வரை எல்லாரை மாதிரியும் சிந்தித்துவிட்டு, மருத்துவக்கல்லூரியில் நுழைந்தவுடன் வேறுமாதிரி சிந்திக்கத் துவங்கும் மாணவனைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

said...

நல்லவேளை அந்த நபருக்கு கால் விரல்களில் அடிபட வில்லை, அடி பட்டு இருந்தா? அவ்வ்வ்வ்:(

said...

///நாங்களும் டென்சனாவோமில்ல...///

நீங்க டென்சன் ஆனா பிளட் பிரஷர் ஏறும் அதை செக் செய்ய ஒரு 1000 ரியால், தூக்கம் வராது அதை சரி செய்ய ஒரு 500 ரியால் இப்படி பல லிஸ்ட் இருக்கு வசதி எப்படி?:)))))

said...

// சுப.செந்தில் நாதன் said...

ஆமோதிக்கிறேன்.//

நன்றிகள் சுப.செந்தில் நாதன்

said...

// delphine said...

ரசிகன்,
Taking treatment in a private nursing has become very expensive. The doctors charge exorbitant rates...
what I would advice is 'better get yourself insured...(mediclaims)..

நீங்க சொல்லறது சரியான வழிக்காட்டுதல்தான் டெல்ஃபின் அக்கா.. நாங்கூட கூடிய சீக்கிறம் குடும்த்தாருக்கும் சேத்து மருத்துவ காப்பீடு எடுத்துடறேன்.வரும்முன் அறிவுறைக்கு மிகவும் நன்றிகள்..

// எனக்கு நேரமின்மையால் மருத்துவ காப்பீடுகள் பற்ரி எழுத முடியாமல் பாதியிலே நிற்கிறது.:(// //
நேரம் கெடைக்கும் போது மிகவும் பயனுள்ள இவற்றின் அவசியங்கள்,முறைகள் பற்றி எழுதுங்களேன்.. எங்க எல்லாருக்கும் ரொம்ப உபயோகமா இருக்குமில்ல...

said...

நல் வருகைகள்.. புருனோ சார்..

இந்த விசயத்தை பற்றி எம்புட்டு சூப்பரா அனாலியஸ்ஸிஸ் செஞ்சியிருக்கீங்க..
வியப்பாயிருக்கு.. எத்தனை மேற்கோள்கள்?..ஆழமான சிந்தனை?.திர்க்கமான கருத்துக்கள்,
புள்ளி விபரங்கள்,மருத்துவ ,சட்ட முறைகளில் ஆழ்ந்த அனுபவம் புரிகிறது.கலக்கிட்டீங்க...

எங்களுக்கு தெரியாத பல விசயங்களையும் குடுத்திருக்கீங்க.. உங்களோட பார்வையை ஆணித்தரமா சொல்லற விதத்துல உங்க தனித்தன்மை தெரியுது..கருத்தை ஆராய்ச்சியே பண்ணிட்டிங்க..சூப்பர்..

சுட்டிகள் எல்லாமே.. உபயோகமானவை..

வருகைக்கும் விவாதத்தில் புதிய கோணத்தை எடுத்து வைத்ததுக்கும் , மேலதிக நடைமுறை விபரங்களுக்கும் உங்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்..

நன்றிகள்..

said...

// மங்களூர் சிவா said...

டாக்டர் விஜயை பற்றி தவறாக எழுதப்பட்ட இந்த பதிவை நான் கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்
இவன்
கம்பவுன்ட்ர்
டாக்டர் விஜய் க்ளினிக்
கோடம்பாக்கம//

அவ்வ்வ்வ்வ்வ்..... ஏன் ? இன்னும் மங்களுரில் பிராஞ்ச் துவங்கலியா?.மாமே....

said...

//
ரசிகன் said...
அவ்வ்வ்வ்வ்வ்..... ஏன் ? இன்னும் மங்களுரில் பிராஞ்ச் துவங்கலியா?.மாமே....

//
முதலில் ஸ்ரேயாவிற்கு ஒரு சின்ன ஆப்பரேசன் செய்ய வேண்டும் அது வரை எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

ஒன்லி அட் கோடம்பாக்கம்.

said...

// மங்களூர் சிவா said...

சைக்கிள் கேப்பில் ஹெலிகாப்டர் ஓட்ட நினைக்கும் G3 யை வன்மையாக கண்டிக்கிறேன்!!//

கண்டிங்க.. கண்டிங்க..
( இதுக்கும் ,நமக்கும் நெசமாவே எந்த சம்பந்தமுமில்லேங்க..ஜி3 ஆரம்பத்திலேயே சொல்லிப்புட்டேன்.ஆமா.:D )


// இல்லைனா மட்டும் என்னமோ வீட்டுல எல்லா வேலையும் செஞ்சிடறாப்புல எதுக்கு இந்த பில்டப்பெல்லாம் நமக்கு!!//

வரும்போதே வீட்டுல சொல்லிப்புட்டு வந்துட்டிங்களா? மாமே..ஹிஹி...


வருகைக்கும், தானா வந்து மாட்டிக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றிகள் சிவா..ஹிஹி....

said...

முதலில் ஸ்ரேயாவிற்கு ஒரு சின்ன ஆப்பரேசன் செய்ய வேண்டும் அது வரை எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

ஆஹா.. எல்லாம் வெவரமாத்தேன் இருக்கிங்க..
ஆனாக்கா ஸ்ரேயா கோசல் விவகாரமின்னாக்கா..
எங்க குசம்பன்,ஆயில்யன்,நானு எல்லார் கிட்டையும்
பர்மிஷன் வாங்கனுங்க்கோ..:))))

said...

//
ஸ்ரேயா கோசல் விவகாரமின்னாக்கா..
எங்க குசம்பன்,ஆயில்யன்,நானு எல்லார் கிட்டையும்
பர்மிஷன் வாங்கனுங்க்கோ..:))))
//
அவருக்கு இல்லை ஸ்ரேயாவுக்குதான்.

said...

//
ஸ்ரேயா கோசல் விவகாரமின்னாக்கா..
எங்க குசம்பன்,ஆயில்யன்,நானு எல்லார் கிட்டையும்
பர்மிஷன் வாங்கனுங்க்கோ..:))))
//
குசம்பன்,ஆயில்யன் ஒகே
அது என்ன தொடுப்பு நானு ??

said...

வாங்க மாஸ்டர் திவ்யா.. ( கல்யாண அட்வைசுல எக்ஸ்பர்டுல்ல..ஹிஹி...)

// 100% சமூக சேவை மனப்பான்மை இல்லீனா கூட பரவாயில்லீங்க,
பணம் மட்டுமே குறிக்கோளா இல்லாம, மருத்துவர்கள் மனிதாபிமானத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டாலே போதும்! //

நச்சுன்னு சொன்னிங்க... உங்கள முழுமையா ஆமோதிக்கிறேனுங்க..
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்.

said...

//
வரும்போதே வீட்டுல சொல்லிப்புட்டு வந்துட்டிங்களா? மாமே..ஹிஹி...

வருகைக்கும், தானா வந்து மாட்டிக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றிகள் சிவா..ஹிஹி....
//
நாங்கல்லாம் யாரு தலைல இடியே விழுந்தாலும் 'பூ'னு தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்போம்.

said...

// மங்களுர் மாம்ஸ்..

குசம்பன்,ஆயில்யன் ஒகே
அது என்ன தொடுப்பு நானு ??//

ஒங்களுக்கு தெரியாதா.. தென் கத்தாருக்கு நிர்வாகி நாந்தேன்..
நீங்க வேணுமின்னாக்கா குசும்பன் (நிர்வாகி அமிரகம் ),கடகம் (வட கத்தார் நிர்வாகி)கிட்ட கேட்டுப்பாருங்க..
இது தெரியாததால மங்களுர் கிளைக்கு கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

said...

// மங்களூர் சிவா said...

நாங்கல்லாம் யாரு தலைல இடியே விழுந்தாலும் 'பூ'னு தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்போம்.//

அவ்வ்வ்வ்....

அதானே யாரு தலையில இடியே விழுந்தாலும் நமக்கென்ன ஆச்சி..இல்ல..ஹிஹி...

said...

//
ரசிகன் said...
ஒங்களுக்கு தெரியாதா.. தென் கத்தாருக்கு நிர்வாகி நாந்தேன்..
//
அப்டியா என்கிட்டே இதை சொல்லவே இல்லையே கள்ளி ஷ்ரேயா கோசல்.

said...

வாங்க மாஸ்டர் திவ்யா.. ( கல்யாண அட்வைசுல எக்ஸ்பர்டுல்ல..ஹிஹி...)

// 100% சமூக சேவை மனப்பான்மை இல்லீனா கூட பரவாயில்லீங்க,
பணம் மட்டுமே குறிக்கோளா இல்லாம, மருத்துவர்கள் மனிதாபிமானத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டாலே போதும்! //

நச்சுன்னு சொன்னிங்க... உங்கள முழுமையா ஆமோதிக்கிறேனுங்க..
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்.

said...

// ஜெயம் said...

former perisident apj abdul kalam told in ramachandra medical college speech medical college students redy to serve villages any one think abdul kalam telling wrong//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள் ஜெயம் சார்.. கனவு கானரதே அவிருக்கு வேலையா போச்சு..
நிறைவேத்தரவிங்க.., நாமல்ல...

குறிப்பு : புருனோ சாரும் உங்க கருத்துக்கு போட்ட பதில படிச்சுட்டு தோனறத பகிர்ந்துக்கோங்களேன்..

said...

// Dr. delphine said...

ரசிகன்,
Taking treatment in a private nursing has become very expensive. The doctors charge exorbitant rates...
what I would advice is 'better get yourself insured...(mediclaims).

Dr.புருனோ Bruno said...

Madam, I disagree with you ... Mediclaims are only for "Bigggg" hospitalisations....

For example, if a person wants to get treated for Malaria or Typhoid Mediclaim is "practically" useless...

Added to this 99% of Medical Insurances don't cover pregnancy.....

Hence, the best option is for the "middle class" (blogging class) to come to government hospitals... Only if the middle class comes to government institutions and question the Class IV workers and write few complaints regarding the sanitation, GH will improve...

Dr. delphine said...

Excuse me Dr. Bruno,
Mediclaims cover most of the hospitalisation , if they are really genuine. It does cover for malaria and for any viral fever if substantiated with reports. Its not meant for BIGGGGG hospitalisation..but its definitely very useful in very many diseases.//

தெளிவான விளக்கங்களுக்கும,் அறிவுறுத்தல்களுக்கும் ரொம்ப நன்றிகள் டெல்ஃபின் அக்கா & புருனோ சார்...

said...

நல்வருகைகள் வி.எஸ்.கே ...

// பல சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதைய்யும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.//

நானும் இதை ஆமோதிக்கிறேனுங்க... இடுகை கூட இது பொதுவா எல்லா டாக்டர்களையும் சுட்டிடக்கூடாதுன்னுத்தேன்..// தங்கள் பணியின் புனிதத் தன்மையை உணர்ந்து சேவை ஆற்றும் மருத்துவர்கள் இப்பவும் இருக்காய்ங்க.. நம்ம டெல்ஃபின் அக்கா மாதிரி..// என்று குறிப்பிட்டிருக்கிறேனுங்க...

said...

// வி.எஸ்.கே ...said..
// படிப்பை மட்டுமே முடித்துவிட்டு, துளிக்கூட அனுபவமில்லாத பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை கிராமத்துக்கு அரசு அனுப்பும் இந்தச் செயல் சிறிதும் முறையற்றது.//
// இன்னொரு விஷயம். கிராம மக்களும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உயிர்களுக்கு உத்திரவாதம் கிடைக்கும்!// //

நண்பரே.. உங்களைப்போலவே.. நிறைய பேர் கேட்டதால,பதிவுல பதில் சொல்லறேன்னு உறுதி குடுத்திருக்கேன்.. நேரம் கெடைச்சாக்கா பதில் இடுகை.. போடறேனுங்க...

said...

தயவு செய்து மத்தவிங்க " என் கேள்விக்கு ,என்ன பதில் ?"ன்னு திட்டாதிங்க..நாளைக்கு நிச்சயமா நேரம் ஒதுக்கிடறேனுங்க..ஹிஹி...

said...

தயவு செய்து மத்தவிங்க " என் கேள்விக்கு ,என்ன பதில் ?"ன்னு திட்டாதிங்க..நாளைக்கு நிச்சயமா நேரம் ஒதுக்கிடறேனுங்க..ஹிஹி...

தயவு செய்து மத்தவிங்க " என் கேள்விக்கு ,என்ன பதில் ?"ன்னு திட்டாதிங்க..நாளைக்கு நிச்சயமா நேரம் ஒதுக்கிடறேனுங்க..ஹிஹி...

தயவு செய்து மத்தவிங்க " என் கேள்விக்கு ,என்ன பதில் ?"ன்னு திட்டாதிங்க..நாளைக்கு நிச்சயமா நேரம் ஒதுக்கிடறேனுங்க..ஹிஹி...

said...

//Excuse me Dr. Bruno,
Mediclaims cover most of the hospitalisation , if they are really genuine.//

Q.1. What about Pregnancy......
:) :) :) :) :)

Q.2.I had severe LRI.

I took Cap Amoxy, Tab Cipro, Tab Avil Tab para for 5 days.

It cost me about Rs 150.
Now how to get this by Mediclaim...

said...

About Mediclaims, my main problem with those insurances are

1. They exclude Pregnancy. Why ???

2. They are useless for most of our "health Seeking behaviour"

For example, an average person takes treatment from a doctor 300 to 400 times in his life time

He gets admitted once or twice

What is the use of mediclaim if it does not address 99% of "health seeking behaviour"
---
And why most medical insurances exclude Pregnancy / LSCS
---

said...

//புரட்ச்சி தமிழன் said...
இந்த அவசரத்தில் ஆப்ரேசன் தியேட்டர்ல போய் எவனையும் கொன்றுடாதிங்க உனக்கு பனம் தான் வேனும்னா ஏன் டாக்ட்டருக்கு படிக்கிற

இவலோ அவசரமும் வெறித்தனமும் உள்ள ஆள் நல்ல வைத்தியம் பார்ப்பர்னு நெனைக்கிறீங்க நாட்டுக்கு பஞ்சம்முனே வச்சிக்கோயா ஏன் மாதம் 8000 ரூபாயில உன் குடும்பம் ஒரு வருஷம் ஒருவருஷம் சாப்பிட முடியாதா அப்பைடி என்னய்யா சாப்பிடுவீங்க

பனம் பணம் வேற எதுக்கு தான் இந்த குதி குதிக்கரீங்க டாக்ட்டர் பட்டம் வாங்கனும்னா எவ்லோ கஷ்ட்டப்படனும் தெறியாதா அத நீங்க நல்ல படிக்கரீங்கலோ இல்ல சேசிங் பன்றீங்களோ உங்களுக்கு தற்றாங்க

நான் 1999 ல BE ECE முடிச்சேன் எரிக்ஸன்ல 33000 சம்பலத்துல வேலபாக்குறேன் அரசாங்கத்திற்க்காக சேவை என்றால் ஒருவருடம் என்ன இரண்டு வருடம் இலவசமாம் withthout pay தயார் நீங்க ரெடி பன்னுங்க இப்போ நான் திரிபுராவில இருக்கேன் அடுத்தவாரம் மேகலாயாவில இருப்பேன் போதுமா//

8000 ரூபாய் கூட வேண்டாம், இலவசமாகவே வேலை செய்கிறேன் என்று கூறிய புரட்சித்தமிழனுக்கு எங்களின் வணக்கம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சம்பளம் வாங்காமல் இரண்டு வருடங்கள் வேலை செய்ய ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களில் உள்ளவர்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்ய சம்மதித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

என்று பணியில் சேர்கிறீர்கள் என்று கூற முடியுமா ??

The following are the institutions in your district. Please tell which is convenient for you. I can give you a job in any of these for one / two year WITH NO PAY. Also tell when you can join there.


GH in Salem District
METTUR DAM
ATTUR
OMALUR
SANKARI
YERCAUD
EDAPADI
GANGAVALLI
JALAKANDAPURAM
VEMBADITHALAM

PHCs in Salem District
VALAVANTHI
NAGALUR
KARIPATTI
MASINAICKENPATTI
VALAISAYUR
ACHANKUTTAIPATTI
ARUNUTHUMALAI
BELUR
VALAPADY
THIRUMANUR
ARIYAPALAYAM
PEDHANAICKENPALYAM
YETHAPUR
THUMBAL
KARUMANDURAI
MALLIAKARAI
THENNANKUDIPALAYAM
KOTHAMPADI
KEERIPATTI
MANJINI
THALAIVASAL
SIRUVACHUR
VEERAGANUR
SATHAPADI
KATTUKOTTAI
GOODAMALAI
THAMMAMPATTI
PACHAMALAI
SENDARAPATTI
VADUGAPATTI
KEDAIYUR
ARASIRKAMANI
THEVUR
CHINNAGOUNDANUR
CHITHOOR
CHETTIMANKURICHI
NANGAVALLI
KOMBURANKADU
SANTHAITHANAPATTI
KOLATHUR
SATHIYANAGAR
MECHERI
KUTTAPATTI
VELLAR
KADAYAMPATTI
K.N.PUDUR
ONDIVEERANUR
SARAKKAPILLAIYUR
KARUPPUR
PAGALPATTI
THOLASAMPATTI
VELLALAPATTI
KANNANKURICHI
SIVADHAPURAM
SARKARKOLLAPATTI
PANAMARATHUPATTI
MALLUR
KONDALAMPATTI
NAINAMPATTI
ELAMPILLAI
POOLAVARI
VEERAPANDI
MAC DONALDS CHOULTRY
E.KATTUR
VAIGUNDAM
KONGANAPURAM
VELLALAPURAM
THARAMANGALAM
K.R.THOPPUR
SEDAPATTI

said...

ம்ம்ம்ம் ரசிகன், படிவில் சொல்லப்பட்டது உண்மையா அல்லது Exaggerated version ஆ ?? இருக்கட்டும் அது ஒரு பக்கம்.

அரசும் சற்றே சிந்திக்க வேண்டும். புதியதாய் எதை கொண்டு வந்தாலும் அதை அவர்களிடம் கலந்தாலோசித்து பின் செய்யலாமே. தன்னிச்சையாக செய்வதுதான் பிரச்னை என நினைக்கிறேன்.

Anonymous said...

Dr.புருனோவின் விளக்கங்கள் அருமை.

Anonymous said...

Why medicine has to be a noble..i think its just like any other craft..where the peron who learnt it expects roi..i think there is nothing wrong in it.. if you witness the amount of effort it takes to become a doc and the respect they get,you will be ashamed to see the numbers in ur paycheck man....

said...

வாங்க கோமதி அக்கா..
// நம்ம மருத்துவத்துறையின் அவலத்தை அப்படியே கொத்து பரோட்டா போட்டுட்டீங்க ....என்னதான் எழுதினாலும் யாரும் திருந்தமாட்டார்கள்...நம்ம ஆதங்கத்தை அப்பப்போ கொட்டிக்க வேண்டியதுதான்//

ரொம்ப சரியா சொன்னிங்க.. இயலாமை தான நமக்கு முடிவுல..

// 15 வயது சிறுவனை ,சிசேரியன் சிகிச்சை செய்ய வைத்து கின்னஸில் இடம் பிடிப்பேன் என்று மார் தட்டிய நாடு நம் நாடு....//
அதுவும் இத்தனை கண்டனங்களுக்கு பிறகும் அந்த டாக்டர் தான் செய்தது சரியென்றும்,பொறாமையால் மற்றவர்கள் குற்றம் சுமத்துவதாகவும் பேட்டி அளித்துள்ளார்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அக்கா..

said...

// புதுகைத் தென்றல் said...

goma said

//நம்ம மருத்துவத்துறையின் அவலத்தை அப்படியே கொத்து பரோட்டா போட்டுட்டீங்க ....என்னதான் எழுதினாலும் யாரும் திருந்தமாட்டார்கள்...நம்ம ஆதங்கத்தை அப்பப்போ கொட்டிக்க வேண்டியதுதான்...//

நிதர்சனமான உண்மை. அதை நானும் வழிமொழிகிறேன்.//


நானுந்தானுங்க..ஹிஹி..வருகைக்கு நன்றிகள் தென்றல்..
ஆமா ஆஷிக் அம்ருதா எப்பிடியிருக்காங்க?.

said...

வாங்க வேதா..வாங்க

// மருத்துவர்களை தெய்வமாக மதிக்கும் மக்கள் இருக்கிறார்கள் ஆனா அவங்க தெய்வம் மாதிரி நடந்துக்கொள்கிறார்களா? :( .//..

சபாஷ். சரியான கேள்வி..

// நல்ல வேளை எங்க குடும்ப மருத்துவர் ரெம்ப நல்லவரு :) அவரை மாதிரியே நல்ல மருத்துவர்களை தான் அவரு எங்களுக்கு சிபாரிசும் பண்ணுவாரு அதனால நான் தப்பிச்சேன்.//

நீங்க அதிர்ஷ்டசாலிங்க.. ஒரு அவசரம் வர்ர வரை காத்திருக்காம இப்பவே அருகில இருக்குற நல்ல டாக்டர்கள் ஒன்னுக்கு ரெண்டா தெரிஞ்சி வைச்சிகிறது நல்லதுன்னு தோனுது. அப்பத்தேன் அவசரத்துல இதுபோன்ற ஆபத்தானவிங்ககிட்ட போய் மாட்டிக்கிட்டு முழிக்கிறத தவிர்க்கலாம்..
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள் வேதா...

said...

// கீதா சாம்பசிவம் said...

அனுராதாவின் பதிவுக்கு என்னோட லிஸ்ட்லே லிங்க் கொடுத்திருக்கேன். பல மாதங்களாய் எழுதி வருகிறார்.//

நன்றிகள் கீதா அக்கா.. உங்கள் பதிவில் சுட்டி கிடைத்தது.கஷ்டமாயிருந்துது அவிங்க வேதனைகள்.

said...

வாங்க இளவரசரே....நல்வருகைகள்..

// சில மருத்துவர்களை தெய்வமாக நினைக்கத் தோன்றுகிறது. சில மருத்துவரை - 'இதயம்' இல்லாத மனிதர்களாகவே கருதத்தோன்றுகிறது.//
நச்சுன்னு இருக்குங்க.. வார்த்தைகள்..

// உயிருக்குப் போராடும் தன் மகளின் சிகிச்சைக்காக 'இந்தியன்' தாத்தா, மருத்துவரிடம் கெஞ்சும் போது நமக்கெல்லாம் அந்த சுயநல மருத்துவ மிருகத்திடம் கோபம்தான் வருகிறது. //

சில இடங்களில் இது உண்மையிலேயே நடக்கும் நிதர்சனங்கரதுதேன் வேதனை..

// மருத்துவமும் ஒரு தொழில்தானே.. மருத்துவரும் இன்றைய சமூகத்தின் ஒரு அங்கம்தானே. இன்றைய சந்தைப்பொருளாதார-தாராளமய வியாபாரச் சூழலில், எல்லாமே மாறிக்கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர்களது மனோபாவத்தை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க எதிர்பார்க்க முடியும் என்பது தெரியவில்லை.//
யோசிக்க வேண்டிய விசயந்தானுங்க...

// சரி, புதிய சட்டம் இயற்றி எல்லாவற்றையும் சீர் செய்யலாம் என்றால், இதுவரை இயற்றிய சட்டங்களையே அமுல்படுத்த அரசாங்கம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கக் காணோமே.. யாரைக் குறை சொல்ல...//
இதுவும் சரிதேன்.. ஓட்டுக்காக கொள்கைகளையே மாற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுவதுதானே அரசாங்கம்.

// என்னதான் இருந்தாலும், +2வரை எல்லாரை மாதிரியும் சிந்தித்துவிட்டு, மருத்துவக்கல்லூரியில் நுழைந்தவுடன் வேறுமாதிரி சிந்திக்கத் துவங்கும் மாணவனைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமாகத்தான் இருக்கிறது.//

மிக ஆழமா யோசிச்சிருக்கிங்க..நண்பரே.. மனோதத்துவ முறைப்படியும் புதிராக உள்ள விசயம் இது.
பள்ளியில் படிக்குபோது இருக்கும் குணம் ,தகுதி (என நினைத்துக்கொள்கின்ற)கிடைத்த பிறகு மொத்தமாய் மாறி விடுகிறது தான்..அருமையான சிந்தனை.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

said...

// குசும்பன் said...

நல்லவேளை அந்த நபருக்கு கால் விரல்களில் அடிபட வில்லை, அடி பட்டு இருந்தா? அவ்வ்வ்வ்:(//

ஹா..ஹா...... குசும்பரே.. உங்களுக்கு மட்டுந்தேன் இங்கன தோனுது.. வி.வி.சி..
எப்பிடி?.. இதெல்லாம்?.. என்ன இருந்தாலும் நம்ம "ஸிரேயா கோசல்" சங்கத்து பிரசிடண்டு ஆச்சே..
சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

said...

// குசும்பன் said...

///நாங்களும் டென்சனாவோமில்ல...///

நீங்க டென்சன் ஆனா பிளட் பிரஷர் ஏறும் அதை செக் செய்ய ஒரு 1000 ரியால், தூக்கம் வராது அதை சரி செய்ய ஒரு 500 ரியால் இப்படி பல லிஸ்ட் இருக்கு வசதி எப்படி?:)))))//

மாம்ஸே இது என்னோட வசதிய பொருத்ததில்ல.. என்னோட கம்பெனியோட வசதிய பொருத்ததுங்க்கோ..
பில்லு கொடுத்தா, பணம் கொடுக்கும்..(புல்லு கொடுத்த பாலு கொடுக்கும்-பாட்டோட சேத்து பாடவும்)ஹிஹி..

said...

// மங்களூர் சிவா said...

//
ரசிகன் said...
ஒங்களுக்கு தெரியாதா.. தென் கத்தாருக்கு நிர்வாகி நாந்தேன்..
//
அப்டியா என்கிட்டே இதை சொல்லவே இல்லையே கள்ளி ஷ்ரேயா கோசல்.// //

அவிங்க கிட்டயே கேட்டேனே ,ரசிகர்கள் கிட்ட மட்டுந்த்தேன் சொல்லுவாய்ங்களாம் (என்னிய மாதிரி).. (இதுல உள் குத்து இல்லே மாமே..ஹிஹி..)

said...

// புருனோ Bruno said...

//Excuse me Dr. Bruno,
Mediclaims cover most of the hospitalisation , if they are really genuine.//

Q.1. What about Pregnancy......
:) :) :) :) :)

Q.2.I had severe LRI.

I took Cap Amoxy, Tab Cipro, Tab Avil Tab para for 5 days.

It cost me about Rs 150.
Now how to get this by Mediclaim...//

உங்கள் பல கேள்விகளுக்கு மருத்துவ காப்பீட்டை பற்றி ஆழமாக தெரிஞ்சவிங்கதான் பதில் சொல்ல முடியுங்க.. டாக்டர்.

said...

// The following are the institutions in your district. Please tell which is convenient for you. I can give you a job in any of these for one / two year WITH NO PAY. Also tell when you can join there.//

டாக்டர் புருனோ அவர்களே .. எப்படி உங்களால இந்த அளவு ஆளுமைத்தன்மையோடு ஆணித்தரமாய் தர்கிக்க முடிகிறது. உங்களோட ஆழமான துறை அனுபவமும்,போது அறிவும்தேன் முக்கிய காரணமுன்னு தோணுது.

நன்றிகள் புதிய கோணத்தில கருத்துக்களுக்கு..

said...

// cheena (சீனா) said...

ம்ம்ம்ம் ரசிகன், படிவில் சொல்லப்பட்டது உண்மையா அல்லது Exaggerated version ஆ ?? இருக்கட்டும் அது ஒரு பக்கம்.

அரசும் சற்றே சிந்திக்க வேண்டும். புதியதாய் எதை கொண்டு வந்தாலும் அதை அவர்களிடம் கலந்தாலோசித்து பின் செய்யலாமே. தன்னிச்சையாக செய்வதுதான் பிரச்னை என நினைக்கிறேன்.//

வாங்க சீனா சார்...ரொம்ப காலமாச்சே,நம்ம வீட்டுக்கு வந்து..
வந்ததுமில்லாம சரியான கருத்தை சொன்னிங்க...
// அரசும் சற்றே சிந்திக்க வேண்டும். புதியதாய் எதை கொண்டு வந்தாலும் அதை அவர்களிடம் கலந்தாலோசித்து பின் செய்யலாமே. தன்னிச்சையாக செய்வதுதான் பிரச்னை என நினைக்கிறேன்.///
பல போழுதுகளில் சரியான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தாமல் தன்னிச்சையா அரசாங்கம் முடிவெடுப்பதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம்.
ரொம்ப சரியா சொன்னிங்க..

said...

// சுப.செந்தில் நாதன் said...

Dr.புருனோவின் விளக்கங்கள் அருமை.//

நல் வருகைகள் சுப.செந்தில நாதன்.
கருத்துக்கு நன்றிகள்.

said...

// Anonymous said...

Why medicine has to be a noble..i think its just like any other craft..where the peron who learnt it expects roi..i think there is nothing wrong in it.. if you witness the amount of effort it takes to become a doc and the respect they get,you will be ashamed to see the numbers in ur paycheck man...//

நண்பர் பொன்சித்திரவேல் ,QP,Refinery அவர்களே.. நல்வருகைகள்.நீங்கள் முன்னமே எனக்கு அறிவித்துவிட்டமையால் தங்கள் பின்னூட்டத்தை கண்டுகொள்ள முடிந்தது.. "நிக் நேம்" என்ற பிரிவை பயன்படுத்தி தங்கள் பெயரையும் வெளியிட முடியும்.

ரொம்ப சரியான சிந்தனை..டாக்டருக்கு படிக்கின்றவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்து வந்துவிடவில்லை..
சரியான பயிற்ச்சி இருந்தால் யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ள முடியும். உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.மற்ற எல்லா பணிகளையும் விட உயிர்காக்கும் தொழிலில் அதிக சேவை மனப்பான்மையும்,சகிப்புத்தன்மையும் வேண்டிவருவதால் தான் அந்த சேவைக்கு மக்கள் மனதில் மதிப்பு இருக்கிறது என்று தோன்றுகின்றது.

ஆனால் பல மாணவர்கள் பணம் காய்க்கும் மரமாகவே மருத்துவத் துறையை நினைத்து நாடுவது வேதனைக்குறிய விசயம்.

வருகைக்கும் ,பின்னூட்ட கருத்துக்கும் நன்றிகள் நண்பரே..

said...

//உங்களோட ஆழமான துறை அனுபவமும்,போது அறிவும்தேன் முக்கிய காரணமுன்னு தோணுது.//
May be another reason. I have no private practice :)

//உங்கள் பல கேள்விகளுக்கு மருத்துவ காப்பீட்டை பற்றி ஆழமாக தெரிஞ்சவிங்கதான் பதில் சொல்ல முடியுங்க.. டாக்டர்.//
Not really.

Mediclaims are only for BIGG Hospitalisation

FOr simple illness like Cold etc, these claims are not useful

ANd most of the Mediclaims do not cover pregnancy or LSCS.
----
Mediclaims are useful for Bye Pass or Liver Transplant. But what to do for cough and Cold.
----
For this the middle class to visit the government Hospitals. Only when the middle class uses a service, it will improve
----

said...

@ Everyone : Thanks for your comments

News
1. Strike Withdrawn
2. Tamil Nadu Government is going to appoint doctors from Employment Exchange in place of vacancies. This is a very good move

said...

// புருனோ Bruno said...

News
1. Strike Withdrawn
2. Tamil Nadu Government is going to appoint doctors from Employment Exchange in place of vacancies. This is a very good move//

நாளுபேரு நல்லாயிருந்தாக்கா ஓகேதான்.. ஆனா இது இன்னும் வாக்குறுதி ஸ்டேஜில தான் இருக்குங்கறத மறக்க கூடாதில்ல...
நன்றிகள் டாக்டர் புருனோ..

said...

//ஆனா இது இன்னும் வாக்குறுதி ஸ்டேஜில தான் இருக்குங்கறத மறக்க கூடாதில்ல...//

அடுத்த கட்டத்திற்கு (Stage) வந்தாச்சு !!!!

கடந்த இரு நாட்களாக சென்னையில் மருத்துவர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வுகள் நடந்தது.
---

பொதுவாக தமிழ்நாடு மருத்துவப்பணிகளின் (Tamil Nadu Medical Services) மருத்துவர்களின் நியமனம் அரசு தேர்வாணையம் மூலகமவே நடக்கும். RNTCP, TANSACS போன்ற நியமணங்கள்தான் Employment Exchange மூலம் நடக்கும். இதனால் சிறு குழப்பம் ஏற்பட்டு விட்டது. உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு வேறு (http://www.doctorsandlaw.com/2007/09/extension-of-joining-time-illegal.html) அனைத்து இடங்களும் நிரப்பப்படுவதில் சில சிக்கல்கல்.

ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் மருத்துவர்களின் பணியிடம் நிரப்பப்படுவது வாக்குறுதி நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு வந்து விட்டது.

said...

ரசிகன்,

நீங்கள் சொன்ன பிறகு தான் இப்பதிவைப்பார்த்தேன், நடைமுறையினை வைத்து தெளிவாக , மருத்துவ மாணவர்களின் செயல்பாடை நன்றாக விமர்சித்துள்ளீர்கள்!

பலரும் இங்கே கருத்து சொல்லிவிட்டார்கள், மேலும் நானும் என்பதிவில் தேவையான அளவு சொல்லி இருக்கிறேன், மேலும் கொஞ்சம் வலியுறுத்த இருவர்களின் பின்னூட்டத்திற்கு எனது பதில் இங்கே.

// வி.எஸ்.கே ...said..
// படிப்பை மட்டுமே முடித்துவிட்டு, துளிக்கூட அனுபவமில்லாத பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை கிராமத்துக்கு அரசு அனுப்பும் இந்தச் செயல் சிறிதும் முறையற்றது.//

ம்ம் 1 வருசம், உள்ளுறை மருத்துவராக பயிற்சி எடுக்கிறார்கள். பின்னர் தான் கிராமத்திற்கு செல்கிறார்கள்.

வழக்கமாக 51/2 வருசம் படித்த மருத்துவர்கள் யாரும் மருத்துவம் பார்ப்பதே இல்லையா. கல்லூரி விட்டு வெளியில் வந்த நாளே சிலர் கடைய தொறந்துடுராங்களே.சாதாரணமாக பதிவு பெற்று தான் மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும்.

சரி அப்படியே பதிவு பெற்று 5 1/2 வருசம் படித்தவர்கள் தொழில் செய்யவில்லையா என்ன?

கிராமத்திற்கு போக சொன்னா அப்போ மட்டும் அனுபவம் போதாதுனு ஒரு சப்பைக்காரணமா?

நீங்க சொல்வது மக்கள் மேல் கொண்ட கருணைப்போல தெரியலையே!

----
புருனோ
வழக்கம் போல இங்கேவும் பேசி இருக்கார், நானும் என் பதிலை தருகிறேன்.

//Please note that there is a similar scheme in Tamil Nadu which no one opposes. In Tamil Nadu doctors are posted after PG
1. With Full Pay
2. Permanent Jobs

No one opposes that

The present scheme gives 1/3rd of pay and a contract job. That is the reason for opposition.//

உங்கள் கூற்றுப்படி pg, படித்தபிறகே முழு சம்பளத்தில் , நிரந்தரமாக அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் நியமிக்கப்படூகிறார்களா, உறுதியா சொல்ல முடியுமா?

mbbs படித்தவர்கள் நியமிக்கப்படவே இல்லையா?

எனது பதிவில் நான் ஒரு அரசு ஆணையை எடுத்துப்போட்டுள்ளேன், அதையும் பாருங்கள்,

//TERMS AND CONDITIONS FOR APPOINTMENT OF CONTRACT MEDICAL OFFICERS

1. The appointment is purely on contract basis. The period of contract shall initially be for one year from the date of joining. The contract may however be extended, further at the discretion of the District Level Committee depending upon the performance and need.//

//He / She shall be paid a consolidated sum of Rs.8,000/- (Eight thousand only)//

//The Medical Officers working on contract are not eligible to apply for Post Graduate course as a Service candidate.//

இதில் இருப்பது அனைத்தும் தற்போதைய கிராமப்புற சேவையை ஒத்ததே.

மேல் விவரங்களுக்கு...
http://vovalpaarvai.blogspot.com/2007/12/2.html


இனி வேறென்ன சொல்ல!

said...

தாமதமாக கவனித்ததுக்கு மன்னிக்கவும் வெளவால் அவர்களே..

ஒவ்வொரு வாதத்திற்க்கும் பொருத்தமான விளக்கங்கள்.
நன்றிகள் வெளவால் தெரியாத மேலதிக விபரங்களுக்கு.. இதற்க்கு டாக்டர்.புருனோவோ இல்லை டெல்ஃபின் அக்காவோ துறை சார்ந்த வல்லுனர்களோ தான் பதில் கூற முடியும்..

said...

ரசிகன்,

தாமதம் ஆனாலும் படித்தீர்களே அது போதும்.

எப்போதுமே அரசு ஒரு திட்டம் தீட்டும் முன்னர், அதுக்கு முன்னர் இப்படி எதாவது இருக்கா, எப்படி ஊதியம் நிர்ணயிப்பது என்று எல்லாம் யோசிக்காமலா இருக்கும்.

ஏற்கனவே 8000 ரூபாய்க்கு மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள், எனவே அதே திட்டத்தை மாணவர்களுக்கு கொண்டு வந்தார்கள்.

இந்த ஆண்டு தான் 2004 இல் 8000 க்கு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 13,500 சம்பளம் உயர்த்தப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் 8000க்கு அரசில் அவர்கள் வேலை செய்தார்களே, அப்போது எல்லாம் வேலைக்கே போகாமல் சம்பளம் குறைவென்று போராட்டம் நடத்தவில்லையே ஏன்? (அப்படி 8000க்கு பல pg படித்தவர்களும் வேலை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இதனை கலைஞர் பெருமையாக ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் சொன்னார்.மருத்துவர்களுக்கு செய்த நன்மையாக!

அப்படி இருக்க இந்த மாணவர்களும் 8000 க்கு ஒத்துக்கொண்டு கிராமத்திற்கு போனால் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக ஊதிய உயர்வு தருவார்களே!

போகாமலே பத்தலைனு சொல்வது ஏன்? நான் கேட்பது லாஜிக்கா இருக்கா இல்லையா?