Saturday, February 9, 2008

*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*

ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.

மக்கள்ஸ்.. வணக்கம்..
வேலை பளுவால கொஞ்சம் லேட்டானாலும் , வந்துட்டோம்ல்ல.. மறுபடியும் மொக்கையோட... ஹிஹி... (நாங்களு்ம் அடங்க மாட்டோம்ல்ல..:P :)))) 

ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.

இயற்க்கையான டைம் மிஷினினுல நாம எல்லாருமே பயணம் செய்திருக்கிறோம்.செய்துக்கொண்டிருக்கிறோம்ன்னு நான் சொன்னா நம்புவிங்களா?..

இது என்ன யதார்த்தமில்லாத கூற்றுன்னு நீங்க சொல்லறது எனக்கு புரியுது.
ஃபிளாஸ்பேக்கைத்தான் டைம்மிஷின்னு ஜல்லியடிக்கிறேன்னு நீங்க நெனச்சா,மன்னிச்சுக்கோங்க..விடயம் அதுவும் இல்லை..

மாறாத/ நிலையானதுன்னு நாம நெனச்சிக்கிட்டிருந்த காலமும்கூட (Time) சுருங்கவும்,நீளவும் கூடிய ஒன்றுதுதான் என்று மாஅறிவியலார் திரு.ஜன்ஸ்டின் ஜயா அவர்கள் தன்னோட ரிலேட்டிவிட்டி தியரியின் மூலமாக நிருபித்து,அகிலத்தின் நான்காம் பரிமாணமாய் அதை சேர்த்தப் போது, உலகம் எதிர்கொண்ட வியப்பும்,சந்தேகமும் கலந்த உணர்வைத்தான் நீங்கள் இப்போது உணர்கிறிர்கள். இந்த உலகில் விந்தைகளுக்கு பஞ்சமே இல்லை. இப்போது புதிதாய் வந்துள்ள ஸ்டிங் தியரியும் கூட ஆர்வத்தை தூண்டும் 
வகைதான்.

சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.
நாம் இப்போது எந்த காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்?..
கலியுக காலம்..ஹிஹி.. இல்லைங்க தாத்தா/பாட்டி
கீ.பி 2008 நோ நோ.. ஃபிரண்ஸ்...

 நாம் ஒவ்வொருவரும்,மொத்தமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

ஹிஹி.. தலையில பாதி முடிய பிய்த்து கொண்டிருப்பீர்களே?,.,. மிச்சம் வையுங்க.. மற்ற பதிவுகளுக்காக.. P ..ஓகே.. விஷயத்துக்கு வருவோம்.
இந்த விந்தையை புரிந்துக்கொள்ள, அதற்க்கு முன் ஒரு விடயம் தெரிந்துக் கொள்ளலாம்..

சாதாரண தூரத்தை நாம் அளக்க மீட்டர்,அதைவிட தூரம் என்றால் கிலோ மீட்டர்,மைல் போன்ற அளவைகளைப் பயன்படுத்துகிறோம்.இந்த பரந்த அண்டவெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள அளவுகள் மிகப் பிரமாண்டமானவை. அவற்றை அளக்க இதே அளவுகளை உபயோகப் படுத்துவோமானால்.. அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டத்திற்க்கே,அளவு மிகச் சாதாரணமாக 40 இலக்கங்களைத் தாண்டும். நம்மில் பலபேருக்கு ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்ன்னு கேட்டாலே.. விரல்விட்டு எண்ணத் துவங்குவோம். இதுல 40 இலக்க எண்கள் என்றால்..ஹிஹி..

இதுவரை உலகில் கண்டுப்பிடிக்கப்பட்டதிலேயே மிக வேகமாய் பயணிக்கக் கூடியது ஓளி (லைட் [the speed of light = 299 792 458 m / s]).(ரேடியோ வேவ்ஸ்ம் கிட்டத் தட்ட ஒளியின் வேகம் தான். ஆனால் அதை மிஞ்சுவதில்லை)
அது ஒரு வருடத்தில் 9,460,800,000,000 kilometers கிட்டத் தட்ட 10 டிரில்லியன் கிலோமீட்டர்கள் பயணிக்கும். இந்த மகாதூரத்தை, 1 ஓளிஆண்டு(லைட் இயர்)ன்னு அளக்கலாம்.


அதாவது 20 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்துல உள்ள ஒரு பொருள்(அடேங்கப்பா..), 2 ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குன்னு எளிமையா சொல்லலாம்.

இல்லை..இல்லை கிட்டத் தட்டல்லாம் வேண்டாம். நாங்கெல்லாம் கணக்குல புலின்னு சொல்லிக்கறவங்களுக்காக..
a light second is 186,000 miles (300,000 kilometers). A light year is the distance that light can travel in a year, or:
186,000 miles/second * 60 seconds/minute * 60 minutes/hour * 24 hours/day * 365 days/year = 5,865,696,000,000 miles/year
A light year is 5,865,696,000,000 miles (9,460,800,000,000 kilometers).

ஓகே இப்போ நம்ம டைம் மிஷின் மேட்டருக்கு வருவோம்..

நாம எந்த காலகட்டத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கோம்ன்னு எப்படி நிர்ணயம் செய்வது?.. நம்மைச் சுற்றி உலகத்துல,உள்ள காட்சிகள் எந்த காலத்தை சேர்ந்தவையா இருக்கோ?.. அந்தக் காலகட்டத்தில் நாம இருக்கோம்ன்னு ஒத்துக்கலாமா?..

டைம் மிஷினுல இருந்து இறங்கிய உடன் சுற்றி இருக்குற பொருட்கள் எல்லாம் பழங்காலத்துல இருந்ததா, நாம கேள்விப் பட்ட மாதிரி இருந்தா,நாம காலப் பயணம் செய்தோம்ன்னு ஒத்துக்கலாம்ல்லையா?.. ஒருவேளை வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த பொருட்களை ஒரே சமயத்துல பாத்திங்கனா?..என்னன்னு முடிவு செய்விங்க?..ஹிஹி.. நாம வாழ்ந்துக்கொண்டிருக்குற உலகமும் இப்படிப்பட்ட கலவை கால காட்சிகளை கொண்டது தானுங்க...



ஆரோக்கியமான வெறும் கண்களால் நாம எவ்வளவு தூரம் உள்ள பொருள் வரை பார்க்க முடியும்ன்னு நெனைக்கறிங்க?..

ஒரு கிலோ மீட்டர்?..
ரெண்டு கிலோ மீட்டர்.?. ஹிஹி.. ரொம்ப கஞ்ஜுஸா இருக்கிங்களே..
அருகில இருக்குற நிலா,சூரியன் துவங்கி ,பல ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குற நட்சத்திரங்களைக் கூட நாம வெறுங்கண்களால் பார்க்க முடியுமுங்க..ஹிஹி.. அதாவது நம்மோட பார்வைத் திறன் நம்மோட கண்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நாம் பார்க்கும் பொருள் வெளியிடும் அல்லது எதிரொலிக்கும் ஒளியின்,நம்மை வந்தடையும் அளவைச் சார்ந்தது.


இரவில் நாம் தொலைநோக்கி/வெறும் கண்களால் காணும் ஒவ்வொரு நட்சத்திரங்கள்/குழுமங்கள் ..பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவை..விண்வெளியின் பிரமாண்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்ன்னா,
தமிழில் விண்ணியல் எழுதும் விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கு 
சென்று பாருங்கள்.


உதாரணத்திற்க்கு
The Crab supernova remnant is about 4,000 light-years away.
The Andromeda Galaxy is 2.3 million light-years away.

உதாரணமாக நீங்கள் 10 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மின்னும் ஒரு நட்சத்திரத்தின் ஒளியைக் காண்கிறிர்கள் என்றால்.. அந்த ஒளி நட்சத்திரத்திலிருந்து உங்களை அடைய 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதுன்னு அர்த்தம்.. அப்படியென்றால் நீங்கள் இப்போது பார்க்கும் அந்த நட்சத்திரம்/அதன் ஒளி இப்போதைய நட்ச்சத்திரத்தினுடையதல்ல ..பத்து வருடம் முந்தைய நட்சத்திரத்தைத் தான் இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஒருவேளை நீங்கள் தொலைநோக்கி வழியாக Andromeda Galaxyயை பார்க்க வாய்ப்புக் கிடைத்தால்... நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 2.3 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அதன் வடிவம் தான்.இப்போது உண்மையிலேயே அங்கே பல மாறுதல்கள் நடந்து விட்டிருக்கலாம்.. ஏன்?இன்னொரு நட்சத்திர வெடிப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கலாம்.. அந்த ஒளி நம்மை வந்தடைய/நாம் காண, இன்னும் 2.3 மில்லியன் வருடங்கள் ஆகும். அதற்க்குள் நம்சூரியன் சிகப்பு நட்சத்திரமாகி தனது இறுதிகாலத்தை நெருங்கி,அதீத வெப்பத்தால் பூமியை எரித்துவிட்டிருக்கும்..மாற்றமடைந்த மனித சந்ததிகள் தொலைதூர கிரகங்களுக்குத் தாவியிருப்பார்கள்...

இல்லையென்றால்..இப்போது, அங்கும் பூமியைப்போல ஒரு சூழல் கிரகம் உருவாகி உயிர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.. அவை இந்த வினாடி,நம் பூமியைப் பார்க்க நம்மைப்போலவே முயன்றுக்கொண்டிருக்கலாம்.. அவைகள் பார்க்கும் போது, 2.3 மில்லியன் வருடத்திற்க்கு முந்தைய சூரிய மண்டலம் தான் தெரியும் .(அப்போது சூரிய மண்டலமே முழுமையாக உருவாகியிருக்க வில்லை.. நம்ம பூமி உருவாவதற்க்கு முந்தைய கால நட்சத்திர கூட்டத்தை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்க முடிவது, விசித்திரமாக இருக்கு இல்லையா?).

இவ்வளவு ஏன்? நமது மிக அருகில் உள்ள நடுத்தர வயசு நட்சத்திரமான சூரியனின் ஒளி நம்மை வந்தடைய முழுமையாக எட்டரை
நிமிடங்கள் ஆகின்றது. நாம் பார்க்கும் சூரியன் எட்டரை நிமிடத்திற்க்கு முந்தையது. உதாரணத்திற்க்கு சூரியன் திடீரென மறைந்துவிட்டால் எட்டரை நிமிடங்கள் கழித்து தான் நாம் அதை உணர முடியும்..

எனவே.. நம் பூமியைச் சுற்றி நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் ஒளியும் அல்லது பொருளும் வேவ்வேறு காலகட்டத்தை சார்ந்தவை


ஏன்? பூமியிலும் கூட,மழை சமயத்தில் நம்மிலிருந்து 680.58 மீட்டர் உயரத்தில் இடி இடித்தால், அந்த இடிச் சப்தத்தை 2 வினாடிகள் தாமதமாக உணர்கிறோம். (speed of sound at sea level = 340.29 m / s).

நம் பக்கத்திலேயே உக்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவரின் வார்த்தைகள் கூட,இந்த கணப் பொழுதைச் சேர்ந்தவை அல்ல.. வினாடியின் மிகச்சிறிய அளவுக்கு முந்தையது.

தூரத்தில் கேற்க்கும் கோவில் மணியோசையை விட,அதே சமயத்தில் பல கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும் ஒருவர் அலைபேசியில் பேசுவது விரைவாக வந்தடையும்.ஆனால் ஜ.எஸ்.டி கால்களில்,ரேடியோ வேவ்ஸ் வெவ்வேறு மூலைகளில் உள்ள தொலைத் தொடர்பு செயற்க்கைக் கோள்களுக்கிடையேயான தூரங்களை கடக்க வேண்டியிருப்பதால்..தூரம் 300,000 kilometersஜ எட்டினால் 1 வினாடி தாமதம் இருக்கும்.

எனவே நம்மைச் சுற்றியுள்ள நாம் காணும், அண்டவெளி இப்போதைய காலத்தைச் சேர்ந்தது இல்லை.வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கலவையான காட்சிகளைத் தான் நாம் இப்போது கண்டுக்கொண்டிருக்கிறோம்.

எனவே நாம் வாழும் பால்வெளி மண்டலமே ஒரு இயற்க்கை டைம்மிஷின்/கால இயந்திரம்ன்னு சொல்லிக்கலாமா?..ஹிஹி..



"பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் " பதிவிலிருந்து ஒரு இடுகை.

74 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

Wow! actualla ithu pathi naan kooda onnu eluthalamnu irundhen! chumma supera eludhi asathiteenga
juper!

said...

ithu extra!

Anonymous said...

மிக நன்றாக கூறியுள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பணி

Anonymous said...

Ooo this is real?. amazing.

said...

ஸ்ரீ கலக்கல். இதைப்பத்தி அடிக்கடி பேசுவோம். பதிவையும் பெருசாக விடாமல் செம இண்ட்ரெஸ்டிங்க சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்.

said...

அப்போ இனி நீங்க மொக்கைப்பதிவர் இல்லையா? :P

said...

Romba complexana concept, ivalavu simplea sollitanga.. You are qualified for Higher secondary physics master.

Sridhar H

said...

அருமையான பதிவு... ரொம்ப விறுவிறுப்பா இருந்தது :))))

இது மாதிரி இன்னும் நெறய எழுதுங்க :)))

said...

//நந்து f/o நிலா said...
அப்போ இனி நீங்க மொக்கைப்பதிவர் இல்லையா? :P
//

அவரு எப்ப மொக்கை பதிவராக இருந்தார்? அவரு படா சீரியஸ் பதிவருங்கோ!!!


நிறைய புள்ளி விவரங்களை கொடுத்து இருக்கீங்க அருமையாக இருக்கு.

said...

//பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் "//

இந்த எச்சரிக்கையையும் மீறி படிச்சேன். கொஞ்சம் தலை சுத்துது மாம்ஸ்.
இன்னொரு வாட்டி படிச்சி பாக்கறேன். அப்போவும் சரியா புரியலைனா
//நந்து f/o நிலா said...

ஸ்ரீ கலக்கல். இதைப்பத்தி அடிக்கடி பேசுவோம். பதிவையும் பெருசாக விடாமல் செம இண்ட்ரெஸ்டிங்க சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்//
நாளைக்கு நைட் ஆரம்பிச்சி கோவா போறதுக்குள்ள இவர ஒரு வழி பண்ணி தெரிஞ்சிக்கிறேன். :P

said...

//பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் "//

தலைல முடிதான் இருக்கு மூளை இல்லை அதனால புரியலை!!

said...

2வது வாட்டி கொஞ்சம் பொறுமையா படிச்சேன். அட!.. எவ்வளவு சுவாரஸ்யமான உண்மை. இதை பத்தின அடிப்படை சிந்தனை கூட இல்லாம தேமேனு வாழ்ந்த்துட்டு இருக்கோம். நாம டைம் மெஷின்ல பயணம் பண்றோமோ இல்லையோ.. ஆனா ஒரு மாய உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம். ஸோ..வான் வெளியில நாம பாத்துட்டு இருக்கிறது பழய நட்ச்சத்திரங்களோட கலர் ஜெராக்ஸ். வான் வெளி ஒரு மியூசியம்னு சொல்லலாம். அப்டி தானே.

//மங்களூர் சிவா said...
தலைல முடிதான் இருக்கு மூளை இல்லை அதனால புரியலை!!//
சிவா மாம்ஸ்.. இன்னொரு வாட்டி படிங்க. நீங்க சொன்ன ரெண்டுமே இல்லாத எனக்கே புரியுது. உங்களுக்கு புரியாதா என்ன? உபயோகமான பதிவு. இன்னொருக்கா படிங்கோ.

said...

எனக்கு பியத்துக் கொள்ள அவ்வளவாய் முடியில்லை.
இருந்தாலும் நீங்கள் சொல்லியுள்ள விதம் சிந்திக்க தூண்டுகிறது. நல்ல பதிவு.

said...

:)

//தூரம் 300,000 kilometersஜ எட்டினால் 1 வினாடி தாமதம் இருக்கும்.
//


பூமியோட சராசரி சுற்றளவு நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர்தான் அப்படின்றதால எங்க இருந்து பேசுனாலும் இந்த தாமதம் இருக்காது.


ஒரு வேளை நிலாவில் இருந்து யாராச்சும் பேசுனாங்கன்னா 1 நிமிடம் தாமதம் ஆகும். 384,403 km.

said...

எங்க ஸ்கூல் பிஸிக்ஸ் மாஸ்டர் பரவாயில்லை!!!! இப்பிடியா ரத்த இழப்புக்கு வழி பார்க்கிறது?????
அன்புடன் அருணா

said...

//தலைல முடிதான் இருக்கு மூளை இல்லை அதனால புரியலை!!//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

said...

// Dreamzz said...

Wow! actualla ithu pathi naan kooda onnu eluthalamnu irundhen! chumma supera eludhi asathiteenga
juper!//

வாங்க டிரிம்ஸ் மாம்ஸ்... அப்போ லேட்டா வந்தாலும் நான் முந்திக்கிட்டேனா?.:). அவ்வ்வ்வ்வ்..... ஜாலி..:))))
உங்களோட “மனிதனுக்குள்” பதிவு அருமையா இருந்தது..நன்றிகள் மாம்ஸ்:)

said...

// Dreamzz said...

ithu extra!//

ஹிஹி.. எக்ஸ்ராவுக்கு ஒரு எக்ஸ்ட்ரா நன்றி...:))))))

said...

//scssundar said...

மிக நன்றாக கூறியுள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பணி//

நன்றி scssundar, எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்கள் ஆதரவுத் தான்:)

said...

// Anonymous said...

Ooo this is real?. amazing.//

ஆமாம் நண்பரே, விந்தையான ஆனால் நிஜம்தான்.. நம்புங்கள்.. ஹிஹி..

said...

//நந்து f/o நிலா said...

ஸ்ரீ கலக்கல். இதைப்பத்தி அடிக்கடி பேசுவோம். பதிவையும் பெருசாக விடாமல் செம இண்ட்ரெஸ்டிங்க சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி அங்கிள்..
இன்னும் நம்ம பதிவு செயின் ஒன்னு உங்கக்கிட்ட பாக்கி இருக்குதே?/.,.
நிலா செல்லம் சொல்லலியா (கடிக்கலியா?..)ஹிஹி./..

said...

// ரசிகன் said...

/./நந்து f/o நிலா said...

அப்போ இனி நீங்க மொக்கைப்பதிவர் இல்லையா? :P//
அவ்வ்வ்... அங்கிள்.. நான் இன்னும் அந்த அளவு பக்குவம் அடைய வில்லை.. மொக்கையே நமக்கு நிரந்தரம்..ஹிஹி..:))))))

said...

//
// ஸ்ரீதர் said...

Romba complexana concept, ivalavu simplea sollitanga.. You are qualified for Higher secondary physics master.

Sridhar H//
வாங்க நண்பரே.. என்னுடைய பேரை கேற்க்கும் போது ஏதோ இனம்புரியாத ஒரு அந்நியோன்யம்.. பின்ன 27 வருஷமா கேட்டுக்கிட்டிருக்கேன்ல்ல.. ஹிஹி... பாராட்டுக்களுக்கு நன்றிகள்.. ஆமாம்.. Higher secondary மாணவர்கள் மேல உங்களுக்கு ஏன் இம்புட்டு கொலைவெறி.. :P
ஹா..ஹா.. வருகைக்கு நன்றி...//

said...

//ஜி said...

அருமையான பதிவு... ரொம்ப விறுவிறுப்பா இருந்தது :))))

இது மாதிரி இன்னும் நெறய எழுதுங்க :)))//

வருகைக்கு ரொம்ப் நன்றி ஜி அவர்களே...
மொக்கைக்கு நேரம் இல்லாத போது, என்னோட மற்ற பதிவுகளிலிருந்து இதுப்போன்ற குழப்ப இடுகைகளை மீள் பதிவு செய்ய முயலுகிறேன்.:)))

said...

// குசும்பன் said...

//நந்து f/o நிலா said...
அப்போ இனி நீங்க மொக்கைப்பதிவர் இல்லையா? :P
//

அவரு எப்ப மொக்கை பதிவராக இருந்தார்? அவரு படா சீரியஸ் பதிவருங்கோ!!!


நிறைய புள்ளி விவரங்களை கொடுத்து இருக்கீங்க அருமையாக இருக்கு.//

வாங்க குசும்பன் மாம்ஸ்..அட .. சீரியஸாவே நான் மொக்கைப் பதிவர்தானுங்க மாம்ஸ்:).. ஹிஹி.. பாராட்டுகளுக்கு நன்றி:)

said...

// SanJai said...

//பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் "//

இந்த எச்சரிக்கையையும் மீறி படிச்சேன். கொஞ்சம் தலை சுத்துது மாம்ஸ்.
இன்னொரு வாட்டி படிச்சி பாக்கறேன். அப்போவும் சரியா புரியலைனா
//நந்து f/o நிலா said...

ஸ்ரீ கலக்கல். இதைப்பத்தி அடிக்கடி பேசுவோம். பதிவையும் பெருசாக விடாமல் செம இண்ட்ரெஸ்டிங்க சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்//
நாளைக்கு நைட் ஆரம்பிச்சி கோவா போறதுக்குள்ள இவர ஒரு வழி பண்ணி தெரிஞ்சிக்கிறேன். :P//

ஹா..ஹா.. நந்து அங்கிளுக்கு ஆப்பு வைக்கத்தான் இம்புட்டு பெரிய பீடிகையா?.. நடத்துங்க. நடத்துங்க.. :))))

said...

//மங்களூர் சிவா said...

//பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் "//

தலைல முடிதான் இருக்கு மூளை இல்லை அதனால புரியலை!!//

மாம்ஸ்..அவ்வ்வ்வ்.... வீக் எண்டு போட படம் தேடிக் கிடைக்கலைன்னு இப்டியெல்லாம் டென்ஷனா பேசப்டாது,... :))
நன்றி மாம்ஸ்...

said...

கெடச்சவுடனே கூல் ஆகிடுவிங்கல்ல..ஹிஹி..நாங்களும் தான்..:P

said...

//SanJai said...

2வது வாட்டி கொஞ்சம் பொறுமையா படிச்சேன். அட!.. எவ்வளவு சுவாரஸ்யமான உண்மை. இதை பத்தின அடிப்படை சிந்தனை கூட இல்லாம தேமேனு வாழ்ந்த்துட்டு இருக்கோம். நாம டைம் மெஷின்ல பயணம் பண்றோமோ இல்லையோ.. ஆனா ஒரு மாய உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம். ஸோ..வான் வெளியில நாம பாத்துட்டு இருக்கிறது பழய நட்ச்சத்திரங்களோட கலர் ஜெராக்ஸ். வான் வெளி ஒரு மியூசியம்னு சொல்லலாம். அப்டி தானே.//

நச்சின்னு பாயிண்ட்டை புடிச்சிங்க சஞ்ஜய்... ”வான்வெளி ஒரு மியுஸியம்” அருமையான வார்த்தை பிரயோகம்.. சூப்பர்.. “விண்வெளி ஒரு லைவ் மியுஸியம்”ன்னா இன்னும் பொருத்தமா இருக்குமோ?..
வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி..

said...

// சுல்தான் said...

எனக்கு பியத்துக் கொள்ள அவ்வளவாய் முடியில்லை.
இருந்தாலும் நீங்கள் சொல்லியுள்ள விதம் சிந்திக்க தூண்டுகிறது. நல்ல பதிவு.//

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி ஜயா:)...

said...

// அரை பிளேடு said...

:)

//தூரம் 300,000 kilometersஜ எட்டினால் 1 வினாடி தாமதம் இருக்கும்.
//


பூமியோட சராசரி சுற்றளவு நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர்தான் அப்படின்றதால எங்க இருந்து பேசுனாலும் இந்த தாமதம் இருக்காது.


ஒரு வேளை நிலாவில் இருந்து யாராச்சும் பேசுனாங்கன்னா 1 நிமிடம் தாமதம் ஆகும். 384,403 km.//

வாங்க அரைபிளேடு சார்..

இல்லைங்க சார்...

//ஜ.எஸ்.டி கால்களில்,ரேடியோ வேவ்ஸ் வெவ்வேறு மூலைகளில் உள்ள தொலைத் தொடர்பு செயற்க்கைக் கோள்களுக்கிடையேயான தூரங்களை கடக்க வேண்டியிருப்பதால்../

செயற்க்கைக் கோள்கள் புவியின் சுற்றளவில் நிலைக் கொண்டிருக்கவில்லை.. அவற்றை விட மிக உயரத்தில்,புவியின் வெவ்வேறு மூலைகளில் ஜியோ சுற்றுப்பாதையில் உள்ள தொலைத்தொடர்பு செயற்க்கைக் கோள்களின் இடைப்பட்ட தூரம் மற்றும் புவியின் தொலைத் தொடர்பு நிலையங்களுக்கு இடையேயான ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தூரம் 300,000 kilometers தாண்டுவது சகஜம் தான்.. சில நாடுகளிலிருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு பேசும்போது அதிகபட்சம் 2 வினாடி வரை தாமத்தை உணர்ந்திருக்கிறார்கள்..

//ஒரு வேளை நிலாவில் இருந்து யாராச்சும் பேசுனாங்கன்னா 1 நிமிடம் தாமதம் ஆகும். 384,403 km.////

மன்னிக்கவும்.கிட்டத்தட்ட ஒன்னரை வினாடி டிலே மட்டுமே ஆகும். ஏன்னா.. ரேடியோ வேவ்ஸ் வேகம் = ஓளிவேகம்=300,000 kilometers/வினாடி..

ஆனாலும் மொத்த கருத்தை உணர்ந்து ரசித்ததிற்க்கு நன்றிகள் சார்:)

said...

//aruna said...

எங்க ஸ்கூல் பிஸிக்ஸ் மாஸ்டர் பரவாயில்லை!!!! இப்பிடியா ரத்த இழப்புக்கு வழி பார்க்கிறது?????
அன்புடன் அருணா//

ஹா..ஹா..

ஏனுங்க அருணா... அதுக்காக இப்படியா தலையைப் பிச்சிக்கறது?..:P
வருகைக்கு நன்றி:)

said...

//கீதா சாம்பசிவம் said...

//தலைல முடிதான் இருக்கு மூளை இல்லை அதனால புரியலை!!//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ//

அவ்வ்வ்வ்...... கீதா அக்கா.. நீங்க சொல்லற ரிப்பீட்டேய்யின் நீளத்தைப் பார்த்தா.. என்னிய சொல்லற மாதிரியே இருக்கே.ஹிஹி...

உள்குத்து வைக்க தலைவிக்கு சொல்லியா குடுக்கனும்.. அருமை:)
வருகைக்கு நன்றி அக்கா..

(ஹிஹி.. ”நன்றிகள்”னு சொல்லப்டாது.நன்றின்னு தான் சொல்லனும்ன்னு நீங்க சொன்னதை நான் எம்புட்டு சிரத்தையா ஃபாலோப் பண்ணறேன்னு பாத்திங்களா அக்கா.. :)))) ( என்னிக்காவது மறந்து அக்காகிட்ட திட்டு வாங்கனும்ன்னு இருக்கோ என்னவோ?..ஹிஹி..:)) ).

said...

அவ்வ்வ்வ்... கீதா அக்கா மன்னிச்சிருங்க,, இந்த இடுகையோட பின்னூட்டத்துலயே நன்றிகள்ன்னு பழக்கதோஷத்துல போட்டிருக்கேன்..ஹிஹி...
கொஞ்சம் டைம் குடுக்கறேன்.ஞாபகம் வைச்சுக்க முயற்ச்சி பண்ணறேன்:)
:)))))))))))

said...

நம்ம நண்பர்களுக்கு கஞ்ஜீஸ் மாதிரி ஒத்த நன்றியையா சொல்லரது?.. அதான் மொத்தமா,தாராளமா நன்றிகள்ன்னு கொத்தா சொல்லிட்டேன்..::P

said...

//மன்னிக்கவும்.கிட்டத்தட்ட ஒன்னரை வினாடி டிலே மட்டுமே ஆகும். ஏன்னா.. ரேடியோ வேவ்ஸ் வேகம் = ஓளிவேகம்=300,000 kilometers/வினாடி..
//

வினாடின்னு எழுத நினைச்சு நிமிடம் என்று எழுதிட்டேன். பொருள் குற்றம்.
:)

Anonymous said...

என்னைப்பற்றி ரொம்ப பிரமாதமா எழுதியிருக்கீங்க. இப்போ 1.3 மில்லியன் ஒளி வருடங்கள் தள்ளியிருக்கும் ஒரு கிரகத்திலிருந்து எழுதும் இந்த பின்னூட்டம் எவ்வளவு சீக்கிரமா கெடச்சிதுன்னு சொல்றீங்களா?
:->)))

said...

Amazing அண்ணாத்தே !!!!

பள்ளியில் படிக்கும் போது எங்க பிசிக்ஸ் சார் இதை எங்களுக்கு விளக்கிய போது எங்க எல்லோர் மண்டையிலயும் பல்பு எரிஞ்சது. இப்போ நீங்க சொல்றப்போ திரும்பவும் அதே பல்புதான் !!! :)))

Anonymous said...

Superna... konjam solli, theliva puriya vachiinga...

ama... appadinna --> uyir (soul) appadingiradhu ennanga? Is this has anything related to time???

Anonymous said...

Super. Please keep posting this kind of usefull posts.
Thanks.

said...

Interesting post

natpodu
nivisha

said...

அய்யா தங்களின் இந்த பதிவை தற்செயலாக படிக்க முடிந்தது, உண்மையில் இந்த கருத்தை இத்துனை வருடங்களில் நான் கேள்விப்படதேயில்லை!, ஆச்சர்யமான நம்பத்தகுந்த விஷயம்தான், அப்படியென்றால் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் பல யுகங்களுக்கு முன்னால் உள்ள கேளக்ஸிகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் எந்த ஒரு பலனும் கிடையாது இல்லையா? தவிர ஒளியை விட பல மைல் தூரம் அதிகம் பிரயாணப்பட்டால்தான் அந்த கேளக்ஸிகளின் 'தற்கால ' நிலை தெரியவரும் இல்லையா? இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு கோடானுகோடி நட்சத்திரக் கூட்டங்கள் சார்பாக கோடானு கோடி நன்றிகள்!

said...

வினாடி துல்லியமாக ஜாதகங்களை கணிக்கிறோம் - என்று ஊரை, உலகத்தை ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்தீர்கள். உப்யோகமான பதிவு !!

Anonymous said...

keep it up.

said...

முடியப் பிய்க்க வச்சாலும் கொஞ்சம் விஷயங்கள் புரிந்தது...திரும்பி +2 Physics class போனாப்பல..
இன்னிக்கு நான் 2 வகுப்பு போயாச்சு..கைப்புள்ள தமிழ் வகுப்பு கூட்டிட்டுப் போனார்..

ஆனாலும் Time Machine .. இன்னும் கொஞ்சம் புரிஞ்சது...

said...

நன்றாக இருந்தது
//தமிழில் விண்ணியல் எழுதும் விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கு
சென்று பாருங்கள்.//

இவருடைய வலைப்பூவின் முகவரி கிடைக்குமா?

வால்பையன்

said...

நன்றாக இருந்தது
//தமிழில் விண்ணியல் எழுதும் விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கு
சென்று பாருங்கள்.//

இவருடைய வலைப்பூவின் முகவரி கிடைக்குமா?

வால்பையன்

said...

அய்யோ இருக்கறதே கொஞ்சம் - அதெயும் பிச்சிக்க வைக்குது இப்பதிவு - பாத்தேன் - படிக்கற மூடும் இல்ல டைமும் இல்ல - அப்பாலே வாரேன் - இப்போ ஜூட்ட்ட்ட்ட்

said...

அய்யோ இருக்கறதே கொஞ்சம் - அதெயும் பிச்சிக்க வைக்குது இப்பதிவு - பாத்தேன் - படிக்கற மூடும் இல்ல டைமும் இல்ல - அப்பாலே வாரேன் - இப்போ ஜூட்ட்ட்ட்ட்

said...

அருமை.

இப்படியெல்லாம் நடக்குமுன்னுதான் இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் ஒட்ட வெட்டியாச்சு போனவருசக் கடைசி நாளில்.

கலக்கல் பதிவு.

said...

//அரை பிளேடு said...

//மன்னிக்கவும்.கிட்டத்தட்ட ஒன்னரை வினாடி டிலே மட்டுமே ஆகும். ஏன்னா.. ரேடியோ வேவ்ஸ் வேகம் = ஓளிவேகம்=300,000 kilometers/வினாடி..
//

வினாடின்னு எழுத நினைச்சு நிமிடம் என்று எழுதிட்டேன். பொருள் குற்றம்.
:)//
ஓ... பரவாயில்லைங்க.. எல்லாருக்கும் அவசரத்துல அடிக்கடி வர்ரது தானே:)...
பதிலையும் கண்காணிக்குற உங்க ஆர்வம் பாராட்டுக்குறியது,
நன்றி நண்பரே...

said...

//அணடசராசரம் said...

என்னைப்பற்றி ரொம்ப பிரமாதமா எழுதியிருக்கீங்க. இப்போ 1.3 மில்லியன் ஒளி வருடங்கள் தள்ளியிருக்கும் ஒரு கிரகத்திலிருந்து எழுதும் இந்த பின்னூட்டம் எவ்வளவு சீக்கிரமா கெடச்சிதுன்னு சொல்றீங்களா?
:->)))//

ஹா..ஹா.. வாங்க அண்டசராசரம்..வாழ்த்துக்கு நன்றி:)
உங்களிலிருந்து 1.3 மில்லியன் ஒளி வருடங்கள் தள்ளியிருக்கும் பூமியிலிருந்து நான் எழுதும் இந்த பதில் உங்களுக்கு எவ்வளவு சீக்கிரமா கெடக்குதோ.. அவ்வளவு சிக்கிரம் உங்க பின்னூட்டம் கெடச்சிதுங்கோ:P
:))))))

said...

// பொன்வண்டு said...

Amazing அண்ணாத்தே !!!!

பள்ளியில் படிக்கும் போது எங்க பிசிக்ஸ் சார் இதை எங்களுக்கு விளக்கிய போது எங்க எல்லோர் மண்டையிலயும் பல்பு எரிஞ்சது. இப்போ நீங்க சொல்றப்போ திரும்பவும் அதே பல்புதான் !!! :)))//

ஹா..ஹா.. பல்புன்னதுமே எனக்கு நீங்க சொல்ல வர்ரது புரிஞ்சுச்சுங்க பொன்வண்டு...:)))))) வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க:)

said...

//Anonymous said...

Superna... konjam solli, theliva puriya vachiinga...

ama... appadinna --> uyir (soul) appadingiradhu ennanga? Is this has anything related to time???//

ஹா..ஹா..இல்லைங்க...நியுரோ டிரான்ஸ்மிட்டர்களின் வேலையால வருவது அவை.இதைப் பற்றி தனிப்பதிவே எழுதலாம்.எந்த விடயத்தையும் ஒப்புக்கொள்ள விஞ்ஞானத்திற்க்குத் தேவை சாட்சியங்கள் அல்ல.. நிருபணம்:).

said...

// Sabes said...

Super. Please keep posting this kind of usefull posts.
Thanks.//

நன்றிங்க Sabes...
அப்படியே செஞ்சுடலாம்.

said...

//நிவிஷா..... said...

Interesting post

natpodu
nivisha//

உங்க நட்புக்கும்,வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி நிவிஷா.

said...

// rK said...

nice.//

பாராட்டுகளுக்கு நன்றிகள் ஆர்.கே சார்:).

said...

//வால்பையன் said...

நன்றாக இருந்தது
//தமிழில் விண்ணியல் எழுதும் விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கு
சென்று பாருங்கள்.//

இவருடைய வலைப்பூவின் முகவரி கிடைக்குமா?

வால்பையன//

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி வால் பையன்.
என் பதிவின் இடப்புற பட்டையின் கீழே..
“கொஞ்சம் அறிவியல் அறிவோம் வாங்க..” தலைப்பின் கீழ் விஞ்ஞானி ஜெயபாரதன் ஜயாவின் பதிவு சுட்டி நிரந்தரமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

said...

//"நெஞ்சின் அலைகள்"-விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்கள//

http://jayabarathan.wordpress.com/

said...

// வேதா said...

நல்லா ஆராய்ந்து எழுதியிருக்கீங்க ரொம்ப புரியலேன்னாலும் ஓரளவுக்கு புரிஞ்சது :)//

வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி வேதா:)

said...

// mouli said...

அய்யா தங்களின் இந்த பதிவை தற்செயலாக படிக்க முடிந்தது, உண்மையில் இந்த கருத்தை இத்துனை வருடங்களில் நான் கேள்விப்படதேயில்லை!, ஆச்சர்யமான நம்பத்தகுந்த விஷயம்தான், அப்படியென்றால் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் பல யுகங்களுக்கு முன்னால் உள்ள கேளக்ஸிகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் எந்த ஒரு பலனும் கிடையாது இல்லையா? தவிர ஒளியை விட பல மைல் தூரம் அதிகம் பிரயாணப்பட்டால்தான் அந்த கேளக்ஸிகளின் 'தற்கால ' நிலை தெரியவரும் இல்லையா? இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு கோடானுகோடி நட்சத்திரக் கூட்டங்கள் சார்பாக கோடானு கோடி நன்றிகள்//

வருகைக்கு ரொம்ப நன்றி மெளலி..
தொலைதூர நட்சத்திரங்களின் கடந்தகால வாழ்வைப் பற்றிய ஆராட்ச்சி.. புவியின் ஆரம்பக் கட்ட நிலையைப் பற்றியும்,உயிர் தொடக்கம் பற்றியும் ஆராட்சிகளுக்கு உதவுகிறது.தவிர நட்சத்திரங்களின் ஆதிகால வடிவங்களை வைத்து இன்நேரம் அங்கு உயிர் வாழ்தலுக்கான சூழலுடைய கிரகங்கள் உருவாகியிருந்தலுக்கான சாத்தியக்கூறுகளை கணிக்க முடியும்.கிரகங்களின் பரிணாம மாறுதல்களை ஆராய முடியும்.உயிர்வாழ்தலுக்கு வேண்டி அண்டம் விட்டு அண்டம் தாவும் எதிர்கால சந்ததிகளுக்கு(மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு) இந்த ஆராட்சிகளின் விபரங்கள் ஆரம்பக் கட்டமாக உதவும். கிரகங்களுக்கிடையேயான பயணத்திற்க்கு எரிப்பொருளாக பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகளால் நம்பப் படுகிற ”ஆன்டி மேட்டர்”ஆராட்சியும் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன.
(ஆண்டிமேட்டரை கையாளும் முறைகளோ,அதை பெருமளவில் உற்பத்தி செய்யும் வழிமுறைகளோ இன்னும் கைவரப் பெற்றிருக்காவிட்டிலும்.. ஆன்டிமேட்டரும்,மேட்டரும் சேரும்போது உருவாகும் சக்தியை
எரிபொருளாக ஒளிவேக விண்கலங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்).

உயிர்வாழ பூமி/சூரிய மண்டலம் தகுதியற்றுப் போகும் ஒரு சூழ்நிலையில்,மனித இனத்தின் நிலையிருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவே இத்தகைய ஆரம்ப முயற்ச்சிகள்:).

said...

//சந்திரசேகர் said...

வினாடி துல்லியமாக ஜாதகங்களை கணிக்கிறோம் - என்று ஊரை, உலகத்தை ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்தீர்கள். உப்யோகமான பதிவு !!//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சந்திரசேகர் அவர்களே..

said...

// Anonymous said...

keep it up.//

நன்றி நண்பரே:)...

said...

//cheena (சீனா) said...

அய்யோ இருக்கறதே கொஞ்சம் - அதெயும் பிச்சிக்க வைக்குது இப்பதிவு - பாத்தேன் - படிக்கற மூடும் இல்ல டைமும் இல்ல - அப்பாலே வாரேன் - இப்போ ஜூட்ட்ட்ட்ட//

ஹா..ஹா.. வருகைக்கு நன்றி சீனா ஜயா..:))))))))

said...

// துளசி கோபால் said...

அருமை.

இப்படியெல்லாம் நடக்குமுன்னுதான் இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் ஒட்ட வெட்டியாச்சு போனவருசக் கடைசி நாளில்.

கலக்கல் பதிவு.//

ஹிஹி..:)))))) வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி துளசி அக்கா:)...

said...

//"பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் " பதிவிலிருந்து ஒரு இடுகை.//

வரவர எனக்கு 'தலை'கனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டு வருகிறது.. இந்தப் பதிவு அதனை இன்னும் விரைவாக்கிவிடும் போல இருக்கிறதே... சூப்பர் படங்ள், சூப்பர் பதிவு.

said...

வணக்கம் தல..( யார் சொன்னா அஜித் மட்டுதான் தல ன்னு??)

மொதல்ல சீரியஸ் விஷயத்த நல்லவிதமா எழுதி படிக்க குடுத்ததுக்கு நன்றி.

அப்புறம் டைம் மிஷின் இருந்தா என்ன இல்லாட்டி என்ன.. நம்ம பொழப்ப பாக்கும்போது டைம் மிஷின் முன்னாடி ஓடுறமாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு எண்ணம்.

//நம்மில் பலபேருக்கு ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்ன்னு கேட்டாலே.. விரல்விட்டு எண்ணத் துவங்குவோம். இதுல 40 இலக்க எண்கள் என்றால்..ஹிஹி..//

நம்மூர் காரங்களுக்கு மில்லியன்னா என்ன?? எத்தன சைபர்னு கெளுங்க அப்ப தெரியும் சேதி.. :)

//எனவே நாம் வாழும் பால்வெளி மண்டலமே ஒரு இயற்க்கை டைம்மிஷின்/கால இயந்திரம்ன்னு சொல்லிக்கலாமா?..ஹிஹி..//

எப்படிங்க இப்படி??? போன வாரம் பேசும்போது கூட நல்லாத்தானே இருந்தீங்க. இப்ப என்னா ஆச்சு ..

இப்படில்லாம் எழுதுனா எப்படி நம்பி உங்க வலைப் பதிவுக்கு வர்ரது..???

சீக்கிரம் இதுக்கு மேல யாரும் மொக்கைபோட முடியாதுங்குறா மாதிரி ஒரு மொக்கைய போடுங்க பாப்போம்...

ஜெயக்குமார்

said...

சைன்ஸ் பிக்ஷன் படம் கேள்விப் பட்டுருக்கேன்.. அதென்ன ஹைபிக்ஷன்????

நாங்களும் இன்கிலீசு படமெல்லாம் பாப்போம் பாத்துக்கிடுங்க... எங்களையெல்லாம் ஏமாத்த முடியாது..ஆமா.. சொல்லிப்புட்டேன்..

:)

ஜெயக்குமார்

said...

சூப்பரு!!
நீங்க இது மாதிரி எல்லாம் பதிவு எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே!! ;)

இதே தலைப்புல நான் முன்ன எழுதியிருந்த இடுகை இதோ!!
http://cvrintamil.blogspot.com/2007/05/3_22.html

:-)

said...

//பாரதிய நவீன இளவரசன் said...

//"பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் " பதிவிலிருந்து ஒரு இடுகை.//

வரவர எனக்கு 'தலை'கனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டு வருகிறது.. இந்தப் பதிவு அதனை இன்னும் விரைவாக்கிவிடும் போல இருக்கிறதே... சூப்பர் படங்ள், சூப்பர் பதிவு.//

ஹா..ஹா.. உங்களுக்கு முடி கொட்டுகிறதுங்கறத இம்புட்டு ஸ்டெயிலா சொல்ல முடியுமா?.... சூப்பரு..
நன்றிகள் மாம்ஸ்.. :)))))

said...

//கானகம் said...

வணக்கம் தல..( யார் சொன்னா அஜித் மட்டுதான் தல ன்னு??)

மொதல்ல சீரியஸ் விஷயத்த நல்லவிதமா எழுதி படிக்க குடுத்ததுக்கு நன்றி.

அப்புறம் டைம் மிஷின் இருந்தா என்ன இல்லாட்டி என்ன.. நம்ம பொழப்ப பாக்கும்போது டைம் மிஷின் முன்னாடி ஓடுறமாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு எண்ணம்.

//நம்மில் பலபேருக்கு ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்ன்னு கேட்டாலே.. விரல்விட்டு எண்ணத் துவங்குவோம். இதுல 40 இலக்க எண்கள் என்றால்..ஹிஹி..//

நம்மூர் காரங்களுக்கு மில்லியன்னா என்ன?? எத்தன சைபர்னு கெளுங்க அப்ப தெரியும் சேதி.. :)

//எனவே நாம் வாழும் பால்வெளி மண்டலமே ஒரு இயற்க்கை டைம்மிஷின்/கால இயந்திரம்ன்னு சொல்லிக்கலாமா?..ஹிஹி..//

எப்படிங்க இப்படி??? போன வாரம் பேசும்போது கூட நல்லாத்தானே இருந்தீங்க. இப்ப என்னா ஆச்சு ..

இப்படில்லாம் எழுதுனா எப்படி நம்பி உங்க வலைப் பதிவுக்கு வர்ரது..???

சீக்கிரம் இதுக்கு மேல யாரும் மொக்கைபோட முடியாதுங்குறா மாதிரி ஒரு மொக்கைய போடுங்க பாப்போம்...

ஜெயக்குமார்//

அவ்வ்வ்வ்வ்.....

மாம்ஸ்..இந்த கொலைவெறி..:))))))))

said...

//கானகம் said...

சைன்ஸ் பிக்ஷன் படம் கேள்விப் பட்டுருக்கேன்.. அதென்ன ஹைபிக்ஷன்????

நாங்களும் இன்கிலீசு படமெல்லாம் பாப்போம் பாத்துக்கிடுங்க... எங்களையெல்லாம் ஏமாத்த முடியாது..ஆமா.. சொல்லிப்புட்டேன்..

:)

ஜெயக்குமார//

ஆஹா.. ஸ்பெலிங் மிஸ்டேக் ஆகிப்போச்சுங்க மாம்ஸ்..:P,
இங்கிலிஸ் படம் பாக்கறதுல உங்களை அடிச்சுக்க முடியுமா?..:P :))
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...

said...

CVR said...
//
சூப்பரு!!
நீங்க இது மாதிரி எல்லாம் பதிவு எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே!! ;)

இதே தலைப்புல நான் முன்ன எழுதியிருந்த இடுகை இதோ!!
http://cvrintamilblogspot.com/2007/05/3_22.html

:-)//

நல்வருகைகள் சீ.வீ.ஆர் மாம்ஸ்..
உங்க கட்டுரை அருமையா இருக்கு:)
நன்றிகள்.வருகைக்கும்,கருத்துக்கும்..:)

said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... முடியலை சாமி. எப்படிய்யா இவ்ளோ யோசிக்கிறீங்க? நல்லா இருந்தது. எனக்கு குடுமி போடுற அளவுக்கு முடி இருக்கறதால தப்பிச்சேன் டா சாமி. அருமை :)