Sunday, December 23, 2007

கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-இறுதிப்பகுதி)

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த..கலக்கப்போவது யாரு?. "ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " இறுதிப் பகுதி தொடர்கிறது...

[புதிதாக வந்தவர்கள்,முந்தைய பாகங்களையும் ..ரசித்துவிட்டு வரவும்..:D ]
1) கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-சீசன்- I )
2) கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-சீசன்- II )

அபி அப்பா: போன இடைவேளைக்கு முன்னாடியே " வீக் எண்டு ஜொள்ளூ " என்றதுமே நிறைய பேருக்கு புரிந்து விட்டது.. அவர் யார்? என்று.. இப்போது தான் புரிகிறது எத்தனை பேர் அங்கு சைலண்ட் விசிட்டரா இருக்கிங்கன்னு...

இவர் நமது ஸ்ரேயா சங்கத்து மங்களூர் கிளை வளர்ச்சிக்காக ஓயாது ஜொள்ளிக்கொண்டிருக்கிறார்.. ஸாரி உழைத்துக்கொண்டிருக்கிறார்...அவரை வர வேற்கிறோம்.

"பெருசா யோசிங்க" ன்னு நமக்கு சொல்லிப்புட்டு ,நம்மள யோசிக்கவே விடாம, வாரகடைசில அவருக்கு வர்ர ஃபார்வேடு மெயிலையெல்லாம் பதிவுல ஜொள்ளுப்படமா போட்டுத்தாக்குவார்..
அவர்தான் "மங்களூர் மாமு" என அன்போடு அழைக்கப் படும் மங்களூர் சிவா அவர்கள்..

வரும்போதே புரோஜெக்டர்,திரைசகிதமா வருகிறார் சிவா..

அபி அப்பா:சிவா எதையாவது வித்தியாசமா செய்யனுங்கற உங்க ஆர்வத்த பாராட்டறேன். ஏதாவது பாடம் நடத்தப்போறிங்களா?.

மங்களூர் சிவா:ஹிஹி.. இல்ல படம் காட்டப்போறேன்..

அபி அப்பா: வெரிகுட் என்ன படம்.

மங்களூர் சிவா: கலக்கலா ஒரு படம் இருக்கு.. "பொண்ணுங்கன்னா சும்மாவா"

இதுவரை பாப்கார்ன் சாப்பிடறதுலயே கவனமாயிருந்த ஜெசிலா அக்கா ,இன்ரஸ்டாகி..

"சூப்பரு தம்பி... சுடிதார் விளம்பரத்துல கூட பெண்களை மாடல்களா ஆக்கி கொடுமை(?) படுத்துற உலகத்துல..
இப்பிடி ஒரு ஆளா? நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவரு....அதென்ன பெண்ணியம் பத்தின ஏதாவது விளக்கப் படம்தானே?,."


அபி அப்பா (திடீருன்னு ஞாபகம் வந்தவராய்): ஆஹா.. இது அந்த வீக் எண்டு படமில்ல... அவ்வ்வ்வ்வ்........ என்னிய மொத்தமா ஒரு வழிப்பண்ணிருவிங்க போலிருக்கே..


உங்க புரோஃபைலுல போட்டிருக்குற குழந்தை படத்த பாத்து நெறய பேரு ஏமாந்து போயிடறாய்ங்க.. ஏம்பா சிவா..இதெல்லாம் வார கடைசில மட்டும் தான் போடனும்.. இங்க குட்டீஸ்லாம் இருக்கிறாங்கல்ல..

மங்களூர் சிவா: ஓகே அப்படின்னா.. அந்த கல்ஃப் வீக் எண்டு ஸ்பெஷல் கொண்டு வந்திருக்கேன்..அத போடட்டுமா? ஆர்வமாக கேற்க..

அபி அப்பா: இன்னிக்கி ஒரு முடிவோடதான் வந்திருக்கிங்க போல.. வேணாம்ப்பா.. எல்லாரும் சோடா வேற குடிச்சிக்கிட்டிருக்காங்க.. ஏற்கனவே நீங்க வீக் எண்டுல போடற படத்தையெல்லாம் பாத்துப்புட்டு லீவு முடிஞ்சி ஞாயிற்று கெழமை வேலைக்கு போற வரை, விட்டு, விட்டு ஜொரம் அடிக்குது..

மங்களூர் சிவா: ஹிம்.. மக்கள்ஸ புரிஞ்சிக்கவே முடியலையே.. வார கடைசில ஹிட் கவுண்டர் மட்டும் சும்மா "சூடு வைச்ச ஆட்டோ மீட்டர்" கணக்கா வேகமா ஓடுது. ஆனா யாரும் தைரியமா பின்னூட்டம் போட மாட்டிங்கராய்ங்களே..

புலம்பியவாரு ஜட்டம்ஸ் எல்லாம் மூட்டை கட்டுகிறார்..சேரில போய் உக்கார்ந்த சிவாவை சுற்றி ஒரு சிறிய கும்பல் சேர்ந்து விட.., சீனா சார் முந்திக்கொண்டு.. கவலைபடாதிங்க .. உங்களுக்கு வர்ர ஃபார்வேர்ட் ஜொள்ளு படத்தையெல்லாம் எனக்கு அனுப்பி வையுங்க..பாத்துப்புட்டு தனி மெயில்ல தவறாம பின்னூட்டம் அனுப்பிபுடறேன்..அவரை தொடர்ந்து நிறைய பேர் முக்காடு போட்டுக்கொண்டு சிவாவிடம் மெயில் ஜ.டி கொடுக்க..

அபி அப்பா:அங்க என்ன நடக்குது.. தனியா ஒரு கும்பல்?..

மங்களூர் சிவா:ஹிஹி.. ஒன்னுமில்ல ஃபேன்ஸு..

அபி அப்பா: இல்ல... ஏதோ ஜொள்ளு, ஃபார்வேடு, மெயிலு, ஜடி ன்னு ஏதோ கேட்ட மாதிரி இருந்துதே.. என்னோட ஜ.டியயும் குடுக்கலாமின்னுதேன்..ஹிஹி..

மங்களூர் சிவா:ஆஹா... எல்லாரும் வெவரமாத்தேன் இருக்காய்ங்கய்யா.....

அடுத்து வருபவர்..

மனம்-உண்மை முகம் என்று தத்துவம் சொல்லுபவர்...கவிதை,நகைச்சுவை,சமுக விழிப்புணர்வு,நட்பு,கதை என பல முகங்கள் கொண்டவர்..
இவரின் கவிதையை முதலில் படிப்பவர்கள்.."இவரா இப்படி அற்புதமா நகைச்சுவை பதிவு கொடுக்கிறார்?" என்றும்,இவரது பதிவுகளை முதலில் படிப்பவர்கள் " இவரா இவ்வளவு அருமையாய் கவிதைகள் படைக்கிறார் ?" எனவும் ஆச்சர்யப்படுமளவு இரண்டிலும் தனித்தன்மையோடு விளையாடும் திறமை கொண்டவர்..எடைக்கு எடை தங்கம் கேட்ட, நம்ம தலைவிக்கு ரெண்டு கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கி கொடுத்து விமர்சன பதிவு வாங்கியவர்..

இவரின் ஒவ்வொரு கவிதைகளும் நவரசம்..ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்துவமாய் ,அவரது அவ்வப்போதைய மனநிலைக்கேற்ப்ப இருக்கும்.. இவரது வலை வீட்டில் ஆங்காங்கே தூவி விட்டிருக்கும் தத்துவ முத்துக்களை பார்த்து பயந்து ஓடாத, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களின் திறமைக்கு அடிக்கடி புரியா கவிதை எழுதி சோதனை வைப்பார்..அதை படித்து விட்டு "ஒன்னுமே புரியலை, உலகத்துலே.. என்னமோ நடக்குது ..மர்மமா இருக்குது."என்று சந்திரபாபு ஸ்டெயிலுல ஒருவாரத்துக்கு திரிபவர் உண்டு..
அவரது கவிதைகள் முதலில் யாருக்கு புரிகிறது என்பதில் ரசிகர்களுக்குள் பட்டிமன்றமே நடக்கும்..

யெஸ் தட்டீஸ்.. " கவியரசி "என அன்போடு அழைக்கப்படும் வேதா அவர்கள்...

வாங்க வேதா.. நீங்க.. நிறைய போட்டிகளுல கலந்துக்கிட்டி பரிசுகளை வென்றிருக்கிங்க.. அதனால என்ன செய்யப்போறிங்கன்னு நீங்களே சொல்லுங்க..

வணக்கம்,வணக்கம் அபி அப்பா.. நா ஒரு கவிதை சொல்லப்போறேன்..


பல வண்ண பட்டாம்பூச்சுக்களாய்
இதழ் மலர்ந்த பூவாய் நான்
தேன் தடவிய அதன் மணமாய்
உன் நினைவுகள்

டிரிம்ஸ்..:கவித.. வேதா.. கவித...

ரசிகர்கள்: கொன்னுபுட்டிங்க(???) ,கலக்கலா இருக்கு.. சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......=D>=D>=D>.

அபி அப்பா: சூப்பர்....அருமையா இருக்குங்க...

வேதா: ஆங்.. இல்லியே.. கவிதையில ஏதோ ஒன்னு கொறைய மாதிரியே எனக்கு தோனுதே..
ஓகே.. கடைசியில இந்த வரியை சேத்துக்கோங்க..
இதழ்களில் ஏனோ வழியுது ரத்தம்..

வேதா: அப்பாடா.. இப்பத்தான் திருப்தியா இருக்கு... மனசுல ஏதோ பாரம் குறைஞ்ச மாதிரி..

கேட்டுக்கொண்டிருந்த எல்லார் காதிலும் ரத்தம் வழிகிறது..

வேதா: ஓ.. என்னோட கவிதை உங்கள ரொம்பவே பாதிச்சுடுச்சோ?..
ஸாரி..ஸாரி
...
ரசிகர்கள்: எப்படிங்க இதெல்லாம்.?..அவ்வ்வ்வ்வ்வ்......

அபி அப்பா: பாதிப்பா..அவ்வ்வ்வ்......... ஏனுங்க வேதா.. அதெப்படிங்க.?. நல்லாயிருக்குற கவிதையா கொலைவெறி கவிதை ஆக்கலேன்னாக்கா உங்களுக்கு தூக்கமே வராதே.. எப்பிடிங்க... இதெல்லாம்.. உங்களால மட்டும் முடியுது?..

கீதா அக்கா: ரிப்பீட்டேய்ய்ய்ய்....

வேதா: தோனுதே.. தானா தோனுதே,..

ஓகே

இத கேளுங்க

ஆயிரம் ஆயிரமாய் நான் எழுப்பிய வினாக்களே
விடைகளாய் என்னை துரத்தும் போது
நான் என்ன செய்ய முடியும்
நான் அறிந்த விடைகளையே
வினாக்களாய் தூவுவதை தவிர..


ரசிகர்கள்: ஆஹா... வினாக்களே விடைகளா,..விடைகளே வினாக்களாய்.. ஆழமான அர்த்தங்கள்..

டிரிம்ஸ்: சூப்பர் தத்துவம்..


வேதா:ஹிஹி ..நன்றி நன்றி...(மனதிற்குள்) ஹிம்.. எனக்கே புரியா கவிதை சொன்னாத்தேன், எதையாவது புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் பாராட்டறாய்ங்க..


அம்பி : புரிஞ்சிடுத்து..,எனக்கு புரிஞ்சிடுத்து.... விடைகளையே,வினாக்களாய் நினைக்கலாமில்லையா?..

வேதா: ஓ.. அப்போ உங்களுக்கும் புரிஞ்சிடுத்தா? அந்த வரிகளை யாரும் கவனிக்கலேன்னு நெனச்சேன்...,(எனக்கே ஒன்னும் புரியலையே .. உனக்கு என்னத்த புரிஞ்சிருக்க போவுது?..)

ஜி3 :நல்லாவே புரியுது..சூப்பரு..(என்ன புரிஞ்சிடுச்சுன்னு கேக்கவா போறாங்க..),. கவிதைய படிச்சுட்டு வர்ரேன்..

அம்பி: சுத்தம் டீச்சரோட கோடிக்கணக்கான சிஷ்யர்களுல ஒருத்தர்கூட உருப்படியா இல்லியோ..என்கிற மாதிரி கீதா அக்காவை பார்க்கிறார்..


கீதா அக்கா:அம்பி என்னை சொல்லும் போது ஏதோ சின்னப்பையன் போனாப் போவுதுன்னு விட்டேன்.. ஆனா என் அன்பு சீடர்களை கிண்டல் பண்ணரதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அபி அப்பா என்ன இது?..

அம்பி:அபி அப்பா.. அவங்க இப்பிடிதான் சும்மா மிரட்டுவாங்க.. கண்டுக்காதிங்க.. நாளைக்கு வெண்பொங்க"ள்" ஒரு பார்சல் சொல்லிடவா?..

அபி அப்பா:(மனசுக்குள்) ஆஹா.. என்னிய நடுவுல வைச்சி மாட்டி விட திட்டம் போடறாய்ங்கய்யா...வர்ரேன்னு சொன்ன ரசிகனையும் காணோம், விடு எஸ்கெப்...

அபி அப்பா: ஹிஹி.. எனக்கு முக்கியமா ஒரு கால் வந்திருக்கு .. பேசிட்டு வர்ரேன்..(ரிங் வர்ராத போனில் ஹலோ..ஹலோ.. என கத்துகிறார்)

சீனா:அபி அப்பா ,இருங்க ..கலக்கியது யாருன்னாவது சொல்லிட்டு போங்களேன்..

அபி அப்பா: கலக்கனது யாரா வேனுமின்னாலும் இருக்கட்டும்.. ஆனா மொத்தத்துல கலங்கிப்போனது நானா ஆவாம இருந்தா சரித்தேன்..நா வரலைப்பா.. இந்த விளையாட்டுக்கு.. ஆள விடுங்க.. எஸ்கேப்..

வெளியே ஓடி வந்த அபி அப்பா சைலண்ட்டா கரையில கட்டி வைச்சிருந்த "தண்ணி" பைக்க எடுத்துக்கிட்டு துபாய்க்கே எஸ் ஆகிரார்..


அம்பி ( கீதா அக்காவை பார்த்து கிண்டலாக..) என்ன கீதா paatti , உங்க மிரட்டலெல்லாம் எத்தன மொற பாத்திருக்கேன்.. எனக்கேவா?.

கோபத்தில் முகம் சிவந்த கீதா அக்காவின் மொபைல் போன் அடிக்கிறது.. அதை எடுத்து ஹலோ என்றார் கோபம் தணியாமல்..

அதில் யாரோ ஏதோ சொல்ல.. முகம் மலர்கிறார் .அம்பியண்ணாவை பார்த்து ஒரு ஏளன சிரிப்புடன்..

அம்பியண்ணா.. (மனதிற்க்குள் ):ஏதோ பேக்ரவிண்டுல வேலை நடக்கர மாதிரியே தோனுதே.. இவிங்க என்ன செஞ்சி வைச்சிருக்காங்கன்னு புரியலையே..ஏதாவது சொல்லி அவிங்க வாயை கிளறி விட்டாத்தேன் ,என்ன மேட்டருன்னு தெரியும் போல..

"ஏனுங்க கீதா kollu paatti..உங்க மிரட்டல்லெல்லாம் உங்க சிஷ்யர்களோட வச்சிக்கோங்க.. யாரு நானு?.. எங்க்கிட்டயேவா?,.."

கீதா அக்கா: அம்பி தட் ஈஸ் த லிமிட் ஆஃப் மை பொறுமை.. போனாப்போவுதுன்னு ,போட்டிக்கு ஒரு ஆள் இல்லாட்டி போரடிக்குமேன்னு ,உன்னை எதிர் கட்சியா விட்டு வைச்சா ,என் உள்கட்சிலயே குழப்பம் பண்ணினதால உனக்கு வைச்சிருக்கேன் ஒரு மெகா ஆப்பு..

அம்பி: (ஆஹா.. பில்டப்பெல்லாம் பெருசா இருக்கே ..இது நல்லதுக்கில்லேன்னு தோனுதே..),..ஹிஹி.. எத்தனை பாத்திருப்போம் நாங்க..

கீதா அக்கா: ஆனா இத எதிர்க்க கனவுல நெனச்சு கூட பாக்க முடியாது.நீனு...அம்பி, உங்க வீட்டுக்கு தேக்கு மரத்துல செஞ்ச பூரி கட்டைய பரிசா அனுப்பியிருந்தேன்.. அது அங்க போய் சேர்ந்ததும் ,நீ ஆபீஸ கட்டடிச்சிட்டு ,இங்க வந்து கலர் பாத்துக்கிடிருக்கறதா உங்க தங்கமணிக்கிட்ட போட்டுக்கொடுத்தாச்சு.. தங்கமணி, ஆபீஸுக்கு ,அல்ரெடி ஆட்டோவுல ஸ்டாட்டடு வித் பூரிக்கட்டை.. இன்னும் 15 நிமிஷத்துல நீ ஆபீஸுல இல்லேன்னா என்ன நடக்குமின்னு சொல்ல தேவையில்லேன்னு நெனய்க்கிறேன்..

கீதா அக்காவின் பிரமாஸ்திர தாக்குதலில் பொறி/அவல் எல்லாம் கலங்கிப்போன அம்பி அண்ணா : ஆஹா.. கவுத்துப்புட்டாய்ங்களே...கரைட்டா வீக் பாயிண்ட்டுல மடக்கிப்புட்டாங்களே.. என அலறியவாறு பெஞ்சு மேலெல்லாம் ஏறி ஆபிஸுக்கு ஓட..
[அம்பியண்ணா மன்னிச்சுக்கோங்க.. நீங்க அண்ணிக்கிட்ட பயப்படலேன்னு சொன்னா அது உண்மைக்கு புறம்பா, யதார்த்தமாயிருக்காதில்ல... அதான்..ஹிஹி..:))) ]

கலவரத்துல எல்லாரும் மிரண்டு ஓடுகிறார்கள்...

கீதா அக்கா..: என் கிட்டயேவா?.. எங்க இந்த ரசிகன் ?.. இத்தனைக்கும் காரணம் அவன்தான்..அவனை ரெண்டு நாளைக்கு பெஞ்சி மேல ஏத்தி நிக்க வைச்சு என்னோட பதிவெல்லாம் படிக்கச்சொன்னாதான் சரிப்படும்.. எங்கே அவன்?.எங்கே அவன்?.தேடுகிறார் கீதா அக்கா...


அப்போது ஓரத்தில் மூடியிருந்த திரையை விலக்கி கொண்டு ஒரு உருவம் தாவிக் குதித்து தப்பித்து ஓடுகிறது.. கையில், இத்தனை நேரம் நடந்தையெல்லாம் உங்களுக்கு சொல்வதற்க்காக எழுதிய காகித உருளையை இறுக்கிப் பிடித்தவாறு...

அது யெஸ் ... அது உங்கள் அன்பு ரசிகன் தானுங்க்கோ....

மேடையில் வெற்றிக் களிப்பில் தனியாக நம்ம "தனி "பெரும் தலைவி சிரிக்கும் இடி முழக்கம் சுற்றி இருக்கிற பத்துப்பட்டியிலேயும் எதிரொலிக்கிறது...

அப்புறம் என்ன நடந்துச்சுன்னு கேக்கறிங்களா?.. அதான் நானும் ஓடி வந்துட்டேனே.. ஹிஹி....

-----------------------

நாளையோடு ஹாலிடே முடிவதால்.. உங்கள் அபிமான ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல் கலக்கப்போவது யாரு?.. இன்றோடு முடிகிறது .. இதில் வந்து கலந்துக்கிட்ட நட்சத்திரங்களுக்கும், பார்வையாளர்களா வந்து பின்னூட்டத்துல கலக்கிய ரசிகப்பெருமக்களுக்கும் நன்றியையும் ,எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வது...

என்றும் அன்புடன் உங்கள்
ரசிகன்...
:D


-------------

45 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

///நாளையோடு ஹாலிடே முடிவதால்..// என்னாது இன்னும் லீவ் முடியவில்லையா? கர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

நல்லா இருங்க:(

மங்களூர் சிவா வரை படிச்சேன் அது வரை அருமை மீதியையும் படிச்சிட்டு வருகிறேன்:)))

said...

:))) Nalla irudhudhu series :)

ambiyoda wife-u thangamani :))
Rangamani refers to husbandaakkum :P

said...

அட போங்க மாமா.. சிவா மாமாவுக்கு ஸ்பெஷல் ஆப்புக்கு அப்லிகேஷன் போட்டிருந்தேனே.. கொஞ்சம் சப்புனு போய்டிச்சி மாமா.. :)

ஆனாலும் ரொம்ப ரசிக்கிர மாதிரி தான் இருக்கு.. சீக்கிரமே இன்னொரு பெரிய ஹாலிடே வரட்டும் .. :)

Anonymous said...

//
G3 said...
:))) Nalla irudhudhu series :)

ambiyoda wife-u thangamani :))
Rangamani refers to husbandaakkum :P
//
rippitey

Anonymous said...

//
குசும்பன் said...
என்னாது இன்னும் லீவ் முடியவில்லையா? கர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
//
ரிப்பீட்டேய்

Anonymous said...

பரவால்ல பேர் 'லைட்டா'தான் டேமேஜ் ஆயிருக்கு!!

Anonymous said...

//
~பொடியன்~ said...
அட போங்க மாமா.. சிவா மாமாவுக்கு ஸ்பெஷல் ஆப்புக்கு அப்லிகேஷன் போட்டிருந்தேனே.. கொஞ்சம் சப்புனு போய்டிச்சி மாமா.. :)
//
ஏன் இந்த 'ரத்த வெறி'

said...

// ///நாளையோடு ஹாலிடே முடிவதால்..// என்னாது இன்னும் லீவ் முடியவில்லையா? கர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

நல்லா இருங்க:(//

ஆஹா.. அப்போ அங்க ஏற்கனவே ஆணி புடுங்க ஆரம்பிச்சுட்டினங்களா?..
ஹிஹி:))).

//மங்களூர் சிவா வரை படிச்சேன் அது வரை அருமை மீதியையும் படிச்சிட்டு வருகிறேன்:))) //

மாம்ஸ் ,மொத்த பதிவோட கடைசி வரிய கட்பண்ணி போட்டிருக்கிங்க.. ஆனா மங்களூர் வரை தான் வந்திருக்கேங்கறிங்க..அப்போ அபி அப்பா தண்ணி பைக்குக்கு ஏதாவது கமெண்டு பிளான் பண்ணியிருக்கிங்களோ?..
அவ்வ்வ்வ்வ்வ்....

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றிகள்..குசும்பன் மாம்ஸ்..

said...

/// G3 said...

:))) Nalla irudhudhu series :)

வாங்க ஜி3 வாங்க.. சும்மாயிருந்தத என்னிய,உங்க தம்பியோட சேந்து தூண்டி விட்டு ஆப்பு ஸ்பெஷ்லுக்கு காரணமாயிருந்ததால் எல்லா புகழும் உங்களுக்கே:P நன்றிகள்.

ambiyoda wife-u thangamani :))
Rangamani refers to husbandaakkum :P//
ஹிஹி... நா இன்னும் பேச்சுலர்ல்ல..அதான் தெரியலை.. ஏதோ நீங்க சொல்லறிங்க.. மாத்திடறேன்..:P:P:P

said...

// ~பொடியன்~ said...

அட போங்க மாமா.. சிவா மாமாவுக்கு ஸ்பெஷல் ஆப்புக்கு அப்லிகேஷன் போட்டிருந்தேனே.. கொஞ்சம் சப்புனு போய்டிச்சி மாமா.. :)
//

வாப்பா பொடியன்.. என்ன பண்ணரது?..மொதல்ல நம்ம மங்களூர் மாமுவுக்கு ஒரு "கிங் சைஸ் ஸ்பெஷல் மல்டி டைரக்ஷனல் ஆப்பு" ரெடி பண்ணி வைச்சிருந்தேன். உன்னோட அப்பிலிகேஷன பாத்ததிலிருந்து ரெண்டு நாளா,தலைமறைவாயிட்டாராமில்ல...

இந்த வார வீக் எண்ட ஜொள்ளு கூட கூட போடலை.. அதான் பாவமின்னு விட்டாச்சு.. :(

ஆனாலும் ரொம்ப ரசிக்கிர மாதிரி தான் இருக்கு.. சீக்கிரமே இன்னொரு பெரிய ஹாலிடே வரட்டும் .. :)//

ஆஹா.. மக்கள்ஸ் மேல எம்புட்டு அக்கரை உங்களுக்கு..
ஆனா நம்ம குட்டீஸ் கார்னர்ல வருஷம் முழுசும் ஆப்பு ஸ்பெசல் தானே.. தொடர்க உங்கள் பணி.. இந்த ரசிகன் மாமாவோட முழு ஆதரவு எப்பவும் குட்டீஸூக்கு தான்.:D

said...

//G3 போலி said...
குசும்பன் போலி said...
மங்களூர் சிவா போலி said...
மங்களூர் சிவா போலி said...//

ஆஹா.. சைக்கிள் கேப்புல வந்து ஏற்கனவே ஆப்பு வாங்கனவிங்களுக்கு மறுபடி ஆப்பு குடுக்கறிங்களே..
எல்லாம் ஒரு கூட்டமாத்தேன் அலையறிங்க போல..அவ்வ்வ்வ்வ்...

நேரத்தை வச்சி பாக்கும்போது நம்ம தளபதி பொடியன் மாதிரி தோனுதே..

தளபதியே.. கொரிலா தாக்குதலுக்கு பிராக்டீஸா?.. அவ்வ்வ்வ்வ்....
குட்டீஸ்னா சும்மாவா?..:D
நடத்துங்க.. நடத்துங்க... :)))

said...

ROFL! aapu veikirenu pathiva potaalum supera rasikum padi potta rasiganukku hats off!

said...

ithu extra!

said...

irunthaalum rasiganum nigalchila kalanthukittu irukalam!

said...

கலக்கலாக கலக்கிய கலக்கப் போவது யாரு பதிவு சூபர் - என்ன வருத்தமின்னா என்னப் பத்தி சரியா புரிஞ்சுக்கலியேன்னுதான். இருக்கட்டும் இருக்கட்டும் - ஆப்பு கொஞ்சம் ஸ்டாராங்கா பெருசா தயார் பண்றதுக்கு பசங்க கிட்டே சொல்லி வைக்கிறேன்.

said...

// Dreamzz said...

ROFL! aapu veikirenu pathiva potaalum supera rasikum padi potta rasiganukku hats off!//.

ரொம்ப தாங்க்ஸ் மாம்ஸ்.. வருகைக்கும் பாராட்டுக்கும்..:)

said...

// cheena (சீனா) said...

கலக்கலாக கலக்கிய கலக்கப் போவது யாரு பதிவு சூபர் - என்ன வருத்தமின்னா என்னப் பத்தி சரியா புரிஞ்சுக்கலியேன்னுதான். இருக்கட்டும் இருக்கட்டும் - ஆப்பு கொஞ்சம் ஸ்டாராங்கா பெருசா தயார் பண்றதுக்கு பசங்க கிட்டே சொல்லி வைக்கிறேன்.//

// என்ன வருத்தமின்னா என்னப் பத்தி சரியா புரிஞ்சுக்கலியேன்னுதான்.//
வொய் வருத்தம் உங்களைப் பற்றி நம்ம எல்லா நண்பர்களுக்கும் தெரியும். வயசுக்கேத்த அனுபவமும்,மனதில் என்றும் பதினாறாவும் எல்லா வயசுகாரங்களுக்கும் பிரண்டா இருக்கிறது ஒரு சாதனைதானே.. உண்மையிலேயே உங்க நட்பு கெடச்சதுக்கு பெருமை படறோம் சீனா சார்..:)
பாராட்டுகளுக்கு நன்றிகள் சீனா சார்.. உங்களையும் கலக்கப்போவது யாரு?ல பங்கேற்க கூப்பிடலைன்னு இம்புட்டு கோவம் கூடாது.. உங்களுக்கு இல்லாத உரிமையா?.. நீங்களே தாவி குதிச்சியிருக்கலாமில்ல...:))

Anonymous said...

HAPPY NEW YEAR RASIGAN.

said...

மறுபடியும் ஒரு கலாட்டா பதிவா? நீங்கள் திருந்தவே மாட்டீர்கள்.

'நாளையோடு ஹாலிடே முடிவதால்.. உங்கள் அபிமான ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல் கலக்கப்போவது யாரு?.. இன்றோடு முடிகிறது ..'

அப்பாடா நிம்மதி.என்றாலும் பதிவு நகைச்சுவையாக தான் இருந்தது.

ரசிகனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

//பெருசா யோசிங்க" ன்னு நமக்கு சொல்லிப்புட்டு ,நம்மள யோசிக்கவே விடாம, வாரகடைசில அவருக்கு வர்ர ஃபார்வேடு மெயிலையெல்லாம் பதிவுல ஜொள்ளுப்படமா போட்டுத்தாக்குவார்..
அவர்தான் "மங்களூர் மாமு"//

இந்த பேரு ரொம்ப நல்லாயிருக்கு சிவா சார்

said...

நாங்க எங்க மங்களுர் மாமாக்கு ஆப்பு இன்னும் பெரிசா உங்க கிட்ட இருந்து எதிர் பார்த்தோம். சரி விடுங்க பொடியன் அங்கிள் எங்க ஆசைய கண்டிப்பா நிறைவேற்றுவார்.

said...

//KALA said...

HAPPY NEW YEAR RASIGAN.//

நன்றிகள் கலா..உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

said...

//பிரியமுடன் பிரித்தி said...

மறுபடியும் ஒரு கலாட்டா பதிவா? நீங்கள் திருந்தவே மாட்டீர்கள்.

'நாளையோடு ஹாலிடே முடிவதால்.. உங்கள் அபிமான ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல் கலக்கப்போவது யாரு?.. இன்றோடு முடிகிறது ..'

அப்பாடா நிம்மதி.என்றாலும் பதிவு நகைச்சுவையாக தான் இருந்தது.

ரசிகனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

அவ்வ்வ்வ்வ்........
ஒரே பின்னூட்ட்டத்துல ஒரு திட்டு,ஒரு பாராட்டு, ஒரு வாழ்த்து...
பேசாம அந்நியன் படத்துல உங்களுக்கே சிபாரிசு பண்ணியிருக்கலாம்..:P

நன்றிகள் பிரித்தி மேடம்...

said...

// ரூபஸ் said...

//பெருசா யோசிங்க" ன்னு நமக்கு சொல்லிப்புட்டு ,நம்மள யோசிக்கவே விடாம, வாரகடைசில அவருக்கு வர்ர ஃபார்வேடு மெயிலையெல்லாம் பதிவுல ஜொள்ளுப்படமா போட்டுத்தாக்குவார்..
அவர்தான் "மங்களூர் மாமு"//

இந்த பேரு ரொம்ப நல்லாயிருக்கு சிவா சார//

அப்படி சொல்லுங்க ரூப்ஸ்.. சிவா மாம்ஸ் கேட்டுக்கிட்டிங்களா?.:P

said...

// Baby Pavan said...

நாங்க எங்க மங்களுர் மாமாக்கு ஆப்பு இன்னும் பெரிசா உங்க கிட்ட இருந்து எதிர் பார்த்தோம். சரி விடுங்க பொடியன் அங்கிள் எங்க ஆசைய கண்டிப்பா நிறைவேற்றுவார்.//

ஆஹா.. பவன், அது ஏண்டா செல்லம் நம்ம சிவா மாமு மேல இம்புட்டு காண்டு?..:)))

Anonymous said...

nice series. will read ex-posts also.well.

said...

"ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்" கலக்கிட்டீங்க ரசிகன். மொத்த பதிவும் இப்பதான் படிச்சேன். ரொம்ப அருமையா இருந்துச்சி. சிரிச்சுகிட்டே படிச்சேன். கலக்கல்ஸ்.

- சகாரா.

Anonymous said...

ரசிகன் , இது ஆப்பு மாதிரி தெரியலியே.ஏதோ புகழுற மாதிரியில்ல இருக்கு? :P

Anonymous said...

எனக்கு முன்னாடியே யாராவது ஆட்டோ அனுப்பிட்டாங்களா என்ன? :P

Anonymous said...

பயங்கர காமெடி.நெறய சிரிச்சேன்.

Anonymous said...

GOOD LAUGH.

said...

hmmmmmmmmmmmmmmmmmmm quite interesting........different thinking................really. i enjoyed the whole piece.......not only that others are also good..i am a new entry to the blog

said...

//கடைசியில இந்த வரியை சேத்துக்கோங்க..
இதழ்களில் ஏனோ வழியுது ரத்தம்..
//

ஹஹா! இதுக்கே ஒரு ஷொட்டு உனக்கு. வஞ்ச புகழ்ச்சி அணில நீ Ph.d பண்ணி இருப்ப போலிருக்கு. :p

நான் என்னிக்கு என் தங்கமணிக்கு பயப்பட மாட்டேன்!னு சொன்னேன்? நல்லா கோத்து விடுற பா! ;)))

said...

இந்தப் பதிவை வாசிக்கும் போது, நீண்ட நாட்களுக்குப்பிறகு வாய்விட்டு (lol) சிரிக்கத் தோன்றிய கணங்கள் அற்புதமானவை.. நல்ல நகைச்சுவை. ரசிகனிக்கு நன்றி.

said...

// வேதா said...

இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு பெரிய ஆப்பு எங்க தலைவியின் தலைமையில் தங்களுக்கு கொடுக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவிச்சுக்கிறேன் ;D//

ஏனுங்க..வேதா சும்மாயிருக்குற தலைவிக்கு நீங்களே சொல்லிக்குடுத்துடுவிங்க போல..
ஆப்பு வைக்கறேன்னு மெரட்டறதிலேயும் எம்புட்டு பணிவு,எம்புட்டு அன்பு..அவ்வ்வ்வ்வ்வ்:))))

வருகைக்கும்,மிரட்டலுக்கும் தாங்க்ஸங்க...

said...

// rK said...

nice series. will read ex-posts also.well.//

நன்றிகள் ஆர்.கே சார்...

said...

// kavithaa said...

ரசிகன் , இது ஆப்பு மாதிரி தெரியலியே.ஏதோ புகழுற மாதிரியில்ல இருக்கு? :P//

நீங்க வேற இதுக்கே... பாம் மெரட்டல்லாம் எங்க தமிழ் டீச்சர்க்கிட்டருந்து வந்துருச்சு.
வேதா வேற ரொம்ப பணிவன்போடல்லாம் (?) மெரட்டராய்ங்க... :))

வருகைக்கு நன்றிகள்...

said...

// SURESH.KPS said...

GOOD LAUGH.//

நன்றிகள் சுரேஷ்...

said...

// lucky said...

hmmmmmmmmmmmmmmmmmmm quite interesting........different thinking................really. i enjoyed the whole piece.......not only that others are also good..i am a new entry to the blog//

வாங்க,..லக்கி..நல்வருகைகள்..முதல் வரவுக்கு... உங்க பாராட்டுகளுக்கு நன்றிகள்.

said...

// ambi said...

//கடைசியில இந்த வரியை சேத்துக்கோங்க..
இதழ்களில் ஏனோ வழியுது ரத்தம்..
//

ஹஹா! இதுக்கே ஒரு ஷொட்டு உனக்கு. வஞ்ச புகழ்ச்சி அணில நீ Ph.d பண்ணி இருப்ப போலிருக்கு. :p

நான் என்னிக்கு என் தங்கமணிக்கு பயப்பட மாட்டேன்!னு சொன்னேன்? நல்லா கோத்து விடுற பா! ;)))//

வாங்க அம்பியண்ணா.. உண்மைய சொன்னதால நீங்க கூட திட்டுவிங்களோன்னு நெனச்சேன். ஆனா அண்ணிக்கிட்ட பயப்படறத சொல்லிக்கிறதுல இம்புட்டு பெருமையா உங்களுக்கு?.... இப்பத்தேன் தெரிஞ்சுது.(ஒருவேளை அண்ணியோட கட்டளைக்கு
கட்டுப்பட்டு இந்த பின்னூட்டமோ?..:P)
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்...

said...

// பாரதிய நவீன இளவரசன் said...

இந்தப் பதிவை வாசிக்கும் போது, நீண்ட நாட்களுக்குப்பிறகு வாய்விட்டு (lol) சிரிக்கத் தோன்றிய கணங்கள் அற்புதமானவை.. நல்ல நகைச்சுவை. ரசிகனிக்கு நன்றி.//

நன்றிகள் இளவரசரே... உங்க பதிவுகளில் உங்க சுற்றுலா அனுபவங்களை அருமையா எழுதியிருக்கிங்க.. நேரில் பார்க்கிற மாதிரி ஒரு உணர்வு.. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்..

said...

வேதா: ஆங்.. இல்லியே.. கவிதையில ஏதோ ஒன்னு கொறைய மாதிரியே எனக்கு தோனுதே..
ஓகே.. கடைசியில இந்த வரியை சேத்துக்கோங்க..
இதழ்களில் ஏனோ வழியுது ரத்தம்..

வேதா: அப்பாடா.. இப்பத்தான் திருப்தியா இருக்கு... மனசுல ஏதோ பாரம் குறைஞ்ச மாதிரி..

கேட்டுக்கொண்டிருந்த எல்லார் காதிலும் ரத்தம் வழிகிறது..

வேதா: ஓ.. என்னோட கவிதை உங்கள ரொம்பவே பாதிச்சுடுச்சோ?..
ஸாரி..ஸாரி
...
ரிப்பீஈஈஈஇட்ட்ட்டேஏஏஏஏஏ

said...

இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு பெரிய ஆப்பு எங்க தலைவியின் தலைமையில் தங்களுக்கு கொடுக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவிச்சுக்கிறேன் ;D

வழிமொழிகிறேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்லி இருக்கேன். நினைப்பு இருக்கட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

// கீதா சாம்பசிவம் said...

வேதா: ஆங்.. இல்லியே.. கவிதையில ஏதோ ஒன்னு கொறைய மாதிரியே எனக்கு தோனுதே..
ஓகே.. கடைசியில இந்த வரியை சேத்துக்கோங்க..
இதழ்களில் ஏனோ வழியுது ரத்தம்..

வேதா: அப்பாடா.. இப்பத்தான் திருப்தியா இருக்கு... மனசுல ஏதோ பாரம் குறைஞ்ச மாதிரி..

கேட்டுக்கொண்டிருந்த எல்லார் காதிலும் ரத்தம் வழிகிறது..

வேதா: ஓ.. என்னோட கவிதை உங்கள ரொம்பவே பாதிச்சுடுச்சோ?..
ஸாரி..ஸாரி
...
ரிப்பீஈஈஈஇட்ட்ட்டேஏஏஏஏஏ//

ஆஹா... என்னே ஒரு சந்தோஷம்.. நம்ம கீதா அக்காவுக்கு.. :P (வேதா நோட் திஸ் பாயிண்ட்டு..:P)

said...

// கீதா சாம்பசிவம் said...

இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு பெரிய ஆப்பு எங்க தலைவியின் தலைமையில் தங்களுக்கு கொடுக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவிச்சுக்கிறேன் ;D

வழிமொழிகிறேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்லி இருக்கேன். நினைப்பு இருக்கட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர//

அவ்வ்வ்..கீதா அக்கா.. கஷ்டப்பட்டு அம்பியண்ணாவை ஜெய்க்க வைச்சிருக்கேன். நீங்களே வேதாவுக்கு சொல்லும்போது ரிப்பீட்டேய் சொல்லிப்புட்டு..இப்போ இப்பிடி?.. ஒருவேளை வேதா அகோபிலம் ஆலு பகோடா குடுத்து கரைட் பண்ணிப்புட்டாய்ங்களோ?:P