Wednesday, January 2, 2008

"தனி"ப்பெரும் தலைவி "கீதா சாம்பசிவம் " டீச்சரின் நுண்ணரசியல் (பின்னூட்ட ஆதாரங்களுடன் ஒரு அலசல்..)


வருடத்தின் முதல் பதிவை எங்கள் தங்கத் "தனி" பெரும் தலைவி... கீதா அக்காவுக்கு ,அவரது கோடான கோடி சீடர்களின் சார்பில் சமர்ப்பிக்கிறேன்:P

"தனி"ப்பெரும் தலைவி "கீதா சாம்பசிவம் " டீச்சரின் நுண்ணரசியல் ( பின்னூட்ட ஆதாரங்களுடன் ஒரு அலசல்..)


கீதா அக்காவின் அனைத்துலக சிஷ்ய கேடிகளுக்கு ,நமது "தனி" பெரும் தலைவியின் கடல் போன்ற நுண்ணரசியலை கலையில் , தலைமை சிஷ்யன் (என்ன கொடுமைங்க..)என்ற முறையில் சிலவற்றை மற்ற சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுக்கவும்,தலைவியின் தனித்திறமையை பாராட்டுவதற்கும் தான் இந்த அவசரப் பதிவு...

நிற்க.. (பரவாயில்லை..பரவாயில்லை உக்காந்துக்கிட்டே படியுங்க....)


பாடம் நடத்தி பேர் வாங்க்கும் டீச்சர்களும் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டு பிடித்தே அவர்களை விட பேர் வாங்க்கும் டீச்சர்களும் இருக்கிறார்கள். நமது தன்னிகரற்ற தலைவி இரண்டாவது கொள்கையை ,தனது முழு முதற் கொள்கையாக எப்போதோ ஏற்று பொதுத்துண்டு சாரி.. போதுத்தொண்டு ஆற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே..

எப்படி எழுதினாலும்,அவருக்கென்று ஏதாவது ஒரு எழுத்துப்பிழை எப்படியோ வந்து விடுகிறது... எப்போதும் அவரிடன் திட்டு வாங்கி, வாங்கி பழகிப்போயி,இப்போ பதிவு ஸ்பெல்லிங் சரியா எழுதிட்டா ஏதோ மனசுல ஓரு நிறைவு இல்லாத மாதிரி ஃபீலிங்கு.. அதனால வேணுமின்னே ஒரு தப்பு நம்ம தனிப்பெரும் தலைவின் கர்ர்ர்ர்ர் & உர்ர்ர்ர்ர் களுக்காக விட்டு வைக்கிறது வழக்கமாகிடுச்சு. கண்டு புடிச்சுட்டா.. எதையாவது சொல்லி சமாளிக்கவும் கத்துக்கிட்டோம்ல்ல...

சரி தப்பா எழுதுனா திட்டறாய்ங்க.. சரியா எழுதுனா பாராட்டுவாங்களான்னாக்கா... அதுல தான் இருக்கு தலைவியின் நுண்ணரசியல்.. எங்க சிஷ்யர்கள பாராட்டுனா ,அட நாமலும் சரியாத்தான் எழுதறோம் போலன்னு ஒரு தன்னம்பிக்கை வந்து, அவிங்க பதிவுல வந்து ஸ்பெல்லிங் கண்டுபுடிக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு முன்னெச்சரிக்கையா... ஒரு திட்டு போட்டுட்டு.. நா பதிவையே இன்னும் படிக்கலை... வலை இணைப்பு சரியா வேலை செய்யலை.. அப்புறம் வந்து பாக்கறேன்னு .. எப்போ வருவாங்களோ?.. எந்த தப்ப கண்டுபிடிப்பாங்களோன்னு நம்ம மெரள வைச்சுட்டு ,அவிங்க ஹாயா சாம்பு மாமாவ குத்தம் சொல்ல போயிருவாங்க....

நம்ம தலைவிக்கு பதிவு புரியலேன்னாலும் .. பழிய தூக்கி நெட்வர்க்கு மேல போட்டுவாய்ங்க... அட இது நல்லாயிருக்கே .. இதை மத்த சீடர்களும் பின் பற்றலாமேன்னு இதை சொல்லறேன்.


சாம்பிளுக்கு ...சில பின்னூட்ட மிரட்டல்களை பார்த்து கற்றுக்கொள்ளவும்..


தலைமை சிஷ்யன்னு கூட பாக்காம (ஹிஹி.. நாந்தான் மாட்டிக்கிட்டேன்..) தலைவியின் அர்சனைகள்..

.......................................................................

கீதா சாம்பசிவம் said...
// "வல்வருகைகள்.. விடுமுறை எப்படி இருக்கு?.."
அது என்ன வல்வருகைகள்? இன்னுமா தமிழ் எழுத வரலை? நறநறநற ஒரு லட்சம் முறை எழுதுங்க இம்பொசிஷன் கொடுத்திருக்கேன், உங்களுக்கு! //

பதிவு: "அல்ப சந்தோஷங்கள்..."-ரசிகன்
.........................................................................

கீதா சாம்பசிவம் said...
//வேதா said...
இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு பெரிய ஆப்பு எங்க தலைவியின் தலைமையில் தங்களுக்கு கொடுக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவிச்சுக்கிறேன் ;D //

வழிமொழிகிறேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்லி இருக்கேன். நினைப்பு இருக்கட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர
பதிவு: கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-இறுதிப்பகுதி)-ரசிகன்.

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
அதென்னமோ உங்க பதிவிலே மட்டும் ஒரே முறையிலே கமெண்ட் பப்ளிஷே பண்ண முடியலை, எர்ரர் வந்துடுது, முதலில் இதுக்கு ஏதாவது செய்யுங்க, அப்புறம் என்னையும் சேர்த்து, என் பதிவுகளிலே இருந்தும் மாட்டரை எடுத்து, ஜி3 பண்ண இப்படியும் ஒரு வழியா? சொந்தமா எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? சாட்டிலே மாட்ட மாட்டேங்கறீங்களே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு ஸ்பெஷலா ஆப்பு காத்திருக்கு, இருங்க, சீக்கிரமாவே வரேன்.!
பதிவு:நச்சு நச்சுன்னு ஒரு கதை.. -ரசிகன்.


"இன்னிக்கு வெள்ளி கிழமையா போயிருச்சு ..இல்லாட்டினா நடக்கரதே வேறங்கர" ...வடிவேலு வசனம் உங்க ஞாபகத்துக்கு வந்துச்சுனா,அதுக்கு நான் பொறுப்பில்லைங்கோ.......

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
அப்பாடா, 3 முறை முயற்சித்து இப்போத் தான் கமெண்ட் பப்ளிஷ் ஆச்சு!
Friday, 21 December, 2007

பதிவு:கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்- சீசன்-II )-ரசிகன்.

.........................................................................


கீதா சாம்பசிவம் said...
இந்த மாதிரித் தப்புத் தப்பா எழுதிட்டு அங்கே வந்தும் என் மானத்தை வாங்காதீங்க. எல்லாம் ப்ளாகே போதும்!
Sunday, 09 December, 2007
பதிவு:தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....-ரசிகன்.

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
என்னங்க இது? பின்னூட்ட நகல்கள் பக்கம்தான் மூடிட்டீங்கனு பார்த்தா, இங்கே திறக்கவே வரலை?? அப்ப்ப்ப்ப்பாஆஆ உடம்பு முடியாதப்போக் கூட இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து பார்க்க வேண்டி இருக்கு!!!! நறநறநறநற
பதிவு:சானியா மிர்சாவும், படங்களும்.. -ரசிகன்.

..................................................................................................................................................


தலைவியின் கொலைவெறி பின்னூட்டத்தில் சிக்கித்தவித்த மற்ற நண்பர்கள் அனுப்பிய ஆதாரங்கள்...


..................................................................................................................................................

கீதா சாம்பசிவம் said...
வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து, திருவாதிரைக்குக் களியும், குழம்பும் சாப்பிட்டு, இப்போ கிறிஸ்துமஸுக்குக் கேக்கும் சாப்பிட்டாச்சு, நல்லாவே இருக்கு எல்லாம். நேரமும் இல்லை, கணினி இணைப்பும் சரி இல்லை, அதனால் ரொம்பவே தாமதமான பின்னூட்டம் வருதோ என்னமோ தெரியலை, பார்க்கணும். :(
6:41 AM, December 29, 2007
பதிவு:கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்! -மாதவிப் பந்தல்

பசிக்குது.. இப்போ பதிவெல்லாம் யாரு படிப்பா?..ங்க்கரதை எம்புட்டு அழகா சொல்லியிருக்காங்கல்ல...

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
எர்ரர் னு வருது, வம்பு, ஏற்கெனவே, உங்க "பொங்க"ள்" படிச்சதிலே இருந்து பயமா இருக்கு, நல்ல பதிவு, அப்புறமா வந்து படிக்கிறேன், பின்னூட்டம் போடறதுன்னா முதலில் கண்ணாடியை பத்திரமா வைக்கணும்!:P அப்புறம் இந்த இணைய இணைப்பு வேறே! வரேன் மெதுவா!
December 29, 2007 6:14 PM
பதிவு:"அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2"-அபி அப்பா

தப்பு எதுவும் கண்டுபிடிக்க முடியலேன்னாக்கா.. இணைப்பு மேல கொறை சொல்லி பதுங்கும் புலி....



.........................................................................

கீதா சாம்பசிவம் said...
நல்ல பதிவுகள்னு நினைக்கிறேன், மெதுவா வந்து படிக்கிறேன். :)))))))
December 29, 2007 6:37 PM
பதிவு:தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)-Kaipullai Calling...

நோ கமெண்ட்ஸ்....:))
.........................................................................

கீதா சாம்பசிவம் said...
நறநறநறநறநற, இந்தப் பீட்டருக்குத் தானா இத்தனை அலட்டல்? க்ர்ர்ர்ர்ர்ர்., நான் படிக்கலை, நல்லா வாழ்த்துச் சொல்றீங்க! :)))))))
பதிவு:புத்தாண்டு வாழ்த்துகள்: template-தெரியல!

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
எது எப்படிப் போனா என்ன? இணையத்தின் தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஒரே தனிப்பெரும் தலைவி ஒருத்தி இருக்காங்கறதை மறக்காமல் இருந்தால் போதுமே! :)))))
December 21, 2007 11:50 AM

(பதிவு புரியலைன்னாலும் எப்படி சமாளிக்காய்ங்க.. நம்ம தலைவி..பாத்திங்கல்ல....)

ஆட்டோ கேப்புல அட்வர்டைஸ்மென்ட்...
.........................................................................

தப்பு கண்டு பிடிச்சப்பறம் ... வரிசையா தாக்கறதுல , எதிருல இருக்கிறவிங்க எழுந்திருக்க கூட வாய்ப்பு தரப்டாதுங்கர ரீதில பாயும் புலி..

"அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு நெனச்சுகிட்டே பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்.
"-அபி அப்பா.

கீதா சாம்பசிவம் said...
இந்த "ண" "ன" வும் சரியா வரலையே, இதிலே அழகா இருக்கிறதா வேறே நினைப்பா? தாங்கலை, எண்ண முடியலை, என்னாலே, I give up!!!!!!!!!!!!!!
December 13, 2007 4:14 PM

கீதா சாம்பசிவம் said...
"என்ன பொங்களா?"ன்னு
தப்பு ஒண்ணு,

December 13, 2007 4:02 PM

கீதா சாம்பசிவம் said...
மூக்காலே "உறுஞ்சு"
தப்பு இரண்டு

December 13, 2007 4:05 PM

கீதா சாம்பசிவம் said...
"கட்டிக்கனும். "
தப்பு மூணு

December 13, 2007 4:06 PM

கீதா சாம்பசிவம் said...
"எதேர்ச்சையா"
தப்பு நாலு

December 13, 2007 4:07 PM

தொடர் தாக்குதலுக்கு உள்ளான
பதிவு:பொங்கல் சாப்பிடுவது எப்படி???-அபி அப்பா.

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
என்னத்தைச் சொல்றது? :((((((( எங்கே போனாலும் ஒரே சோகம் தானா????
பதிவு:Monday, December 03, 2007 5:25:00 PM- வைகை

எல்லா இடத்துலயும் பதிவுவலம் போறாய்ங்களாம்.. மறைமுகமா சொல்லறாய்ங்கலாமாம்.....

.........................................................................

(இது நுண்ணரசியலின் அடுத்த பாடம்: தலைவியையே வேதா சந்தடி சாக்குல டேமேஜ் செஞ்சிருந்தாலும்.. அதை கண்டுக்கவே கண்டுக்காம ,எதிரணியினரின் டேமேஜிக்கு ரிப்பீட்டேய்ய் போட்டு துரும்ப தூணாக்குறதுல நம்ம தனிப்பெரும் தலைவிக்கு நிகர் அவரே தான் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
)


கீதா சாம்பசிவம் said…
/
/ வேதா said…
இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்/
எங்க தானை தலைவி,
தனிப்பெரும் தலைவலி சீசீ தலைவி, எப்பவும் உங்க பேரு எல்லா பதிவுகளிலும் வர்ர மாதிரி உங்களை இந்த பதிவுலுகத்துக்கே அடையாளம் காட்டினவரின் கருணையுள்ளத்தை புரிந்துக்கொள்ளாமல் இப்டி ஒரு பட்டத்தை கொடுத்ததை எதிர்த்து அவர் சிஷ்யகேடிகள் அனைவரும் கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம் :D //


ரிப்பீஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ

பதிவு:2007 பிளாகர் அவார்டுகள்-ammanchi

.........................................................................

நம்ம அணி ஆளு எதிரணில சொம்மா எட்டிப்பாத்தாக்கூட ,அவரு உளவாளியா அங்க வராருன்னு எதிரணிக்கு கடிதாசி எழுதி அணிசேராம பாத்துக்கிற தெறம வேற யாருக்கு வரும்.. நம்ம தலைவிய விட்டா... ???

கீதா சாம்பசிவம் said…

/
/அம்பி ..
"//கலக்கலோ கலக்கல்...//
@M'pathi, ஆமா! ஆமா! இப்ப தான் நீங்க எங்க கட்சி! :p"//


ஹாஹாஹாஹா, அசட்டு, அம்மாஞ்சி, அம்பியே, மதுரையம்பதிதான் இப்போதைய ஒற்றர் படைத் தலைவர், தெரிஞ்சுக்குங்க, காரியத்தோட தான் உங்க பக்கம் வந்திருக்கார், அதுவும் நான் சொல்லி! :P :P

பதிவு: 2007 பிளாகர் அவார்டுகள்-ammanchi

.........................................................................


அப்புறம் ஒரு கொசிப்....


நம்ம தலைவியின் நுண்ணரசியலால கவரப்பட்டு அவரோட பிரதான சீடை ..(அட நீங்க வேற ..சீடை முறுக்கு ஜட்டமெல்லாம் இல்லிங்க.. சிஷ்யன் - சிஷ்யை மாதிரி சீடன்- சீடை ..சரிதானே.. )
ஏற்கனவே அவரோட வழிகளை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஊருக்குள்ள ஒரு நியுஸ் இருக்கு..

அதுகும் சாம்பிள் பாருங்க...

ஆதாரம் 1:
சிஷ்யை said…
// நண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)//
பதிவு: .........................

ஆதாரம் 2:
சிஷ்யை said...
மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி. தற்போது இணையத்தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும் :)
Mon Dec 24, 12:22:00 PM
பதிவு: ........................

இதுக்கு மேலையும் யாரு அந்த சிஷ்யைன்னு சொல்லவும் வேணுமா என்ன?..:P யாருன்னு உங்களுக்கே "புரிஞ்சி"ருக்குமே..:))))

இப்படி" நுண்ணரசியல் சாசனத்தை"யே கரைத்துக்குடித்த தனிப்பெரும் தலைவியின் சீடர்களாய் இருப்பதில் நாமெல்லாம் பெருமை அடையும் இந்த வேளையில்
கீழே இருக்கும் ஓட்டு பெட்டில ,மறக்காம உங்க ஓட்டையும் குத்திட்டுப்போங்க...


வாழ்க.. தலைவி.. வாழ்க
(தலைவி எல்லாருக்கும் போடும்) நாமம்...

இங்கனம் தலைமை சிஷ்யன்...
அகில உலக,யுனிவர்ஸ்,பால்வெளி மண்டல ,தயிர்வெளி மண்டல,வெண்ணை வெளி மண்டல தனிப்பெரும் தலைவி ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரிசர்ச் கழகம்..






43 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

மொக்கை சாமினு பேசாம உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்!

said...

இருந்தாலும் தலவிய இவ்வளவு டேமெஜ் பன்னி இருக்க வேணாம்!

said...

//இதுக்கு மேலையும் யாரு அந்த சிஷ்யைன்னு சொல்லவும் வேணுமா என்ன?..:P யாருன்னு உங்களுக்கே "புரிஞ்சி"ருக்குமே..:))))
//
யார்ப்பா அது?

said...

சரி நான் இங்கன இருந்து சைலண்ட்டா எஸ்கேப்!

Anonymous said...

You said it correct.

Selvi

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நானும் திட்டு வாங்கி இருக்கேன்பா !

என்ன செய்யறது ?

said...

இதுக்கு ஒரு பின்னூட்டம் வேறே தேவையா? நறநறநறநறநற,
அதுசரி, யாரு உங்களுக்குப் பிரதான சிஷ்யன் பட்டம் கொடுத்தது?
உங்களுக்கு முன்னாலேயே வரிசையில் நிறையப் பேர் காத்துட்டு இருக்காங்க! :P


cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நானும் திட்டு வாங்கி இருக்கேன்பா !

என்ன செய்யறது ?

Thursday, 03 January, 2008

சீனா சார், அதான் இப்போ நம்ம பதிவுகளைக் கண்டுக்கிறதில்லையா? :)))))))))

said...

ஒருவழியா பின்னூட்டம் போட வசதியா மாத்தித் தொலைச்சீங்களோ பிழைச்சீங்க! :P

said...

என்னய்யா இப்படி பிரிச்சு மேஞ்சுட்டிங்க???????
எனக்கே பாவமா இருக்குதே :-(

said...

புத்தாண்டு முதல் மொக்கைக்கு வாழ்த்துக்கள்!!

said...

pathivu super rasigan..


(naan munjaakkiraththaiyaa tanglishle ezuthuren).. appothaan geetha paatti enakku spelling errornnu solla mudiyaathu. :-))))

said...

ஹலோ ரசிகா,

//ஏன் இந்த கொடுமை!! யாரையாவது வம்புக்கு இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதா? //

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்...

said...

ஆஹா, மொக்கையை யாருமே கண்டுக்கலையா, ஜாலி!

@மை ஃபிரண்டு, என்ன ரொம்ப ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

// Dreamzz said...

மொக்கை சாமினு பேசாம உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்!//

வாங்க மாம்ஸ்.. குடுங்க குடுங்க... உங்க பெருந்தன்மை யாருக்கு வரும்..
நானும் உங்களுக்கு தேவதைக் கள்வன் ஸாரி..ஸாரி காதலன்னு பட்டம் கொடுத்துப்புடறேன்.. நமக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் நாமே குடுத்துக்கிட்டா தானே உண்டு..ஹிஹி..:P

said...

// Dreamzz said...

இருந்தாலும் தலவிய இவ்வளவு டேமெஜ் பன்னி இருக்க வேணாம்!//

ஆஹா.. நீங்களே போட்டுக் குடுத்துருவிங்க போலயிருக்கே...

இது தலைவியின் புகழ்பாடும் இடுகை மாம்ஸ் (அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லி வைச்சிருக்கேன்..:P)

said...

// Dreamzz said...

//இதுக்கு மேலையும் யாரு அந்த சிஷ்யைன்னு சொல்லவும் வேணுமா என்ன?..:P யாருன்னு உங்களுக்கே "புரிஞ்சி"ருக்குமே..:))))
//
யார்ப்பா அது?//

நம்பிட்டோம்ல்ல.. உங்களுக்கு இன்னும் தெரியலைன்னு..

// Dreamzz said...

சரி நான் இங்கன இருந்து சைலண்ட்டா எஸ்கேப்!//

தலைவி மேல இம்புட்டு பயமா?..அவ்வ்வ்வ்வ்.... ஆனாலும் அநியாயத்துக்கு சைலண்ட்டா இருக்கிங்க மாம்ஸ்..:P

வருகைக்கு நன்றிகள் மாமே..

said...

// Anonymous said...

You said it correct.

Selvi//

ஆதரவுக்கு நன்றிகள் செல்வி மேடம் :)

said...

// cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நானும் திட்டு வாங்கி இருக்கேன்பா !

என்ன செய்யறது ?//

ஆஹா.. நீங்களுமா சீனா ஜயா..

நீங்க சில சமயத்துல தப்பா ஸ்பெலிங் எழுதுபோதெல்லாம் உங்க மேல எனக்கு பொறாமையா வரும்.. கீதா டீச்சர் உங்க தப்பையெல்லாம் கண்டுக்கவே மாட்டிங்கறாய்ங்களேன்னு..

உங்க அனுபவத்தை பின்னூட்டத்துல ஜி3 செஞ்சிருக்கலாமே..


கவலை படாதிங்க சீனா சார்... சாம்பு மாமாவும் நம்ம அணி தான்.. இப்போ நீங்களும் ஆதரவு தெரிவிச்சிட்டிங்க.. கலக்கிடலாம்:)))

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...

said...

// cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஜயா..
தங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் எனது மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

said...

// கீதா சாம்பசிவம் said...

இதுக்கு ஒரு பின்னூட்டம் வேறே தேவையா? நறநறநறநறநற,
அதுசரி, யாரு உங்களுக்குப் பிரதான சிஷ்யன் பட்டம் கொடுத்தது?
உங்களுக்கு முன்னாலேயே வரிசையில் நிறையப் பேர் காத்துட்டு இருக்காங்க! :P///

தனது முழு முதற்க்கொள்கையை இடைவிடாது கடைபிடிப்பதை மறுபடியும் நிருபித்த தலைவி வாழ்க வாழ்க..

said...

// கீதா சாம்பசிவம் said...

ஒருவழியா பின்னூட்டம் போட வசதியா மாத்தித் தொலைச்சீங்களோ பிழைச்சீங்க! :P//

அப்போ உங்களுக்கு பின்னூட்டம் போட எளிமையா இருக்கா?.,. வலை இணைப்பு ஓகே ஆகிடுச்சோ?.:)

ஒருவேளை சாம்பு மாமா,ஒத்துக்கிட்ட திட்டத்தை சரிவர செயல் படுத்தலையோ?..:P

said...

// அறிவன் /#11802717200764379909/ said...

என்னய்யா இப்படி பிரிச்சு மேஞ்சுட்டிங்க???????
எனக்கே பாவமா இருக்குதே :-(//

வாங்க அரிவன் சார்.. நல்லவேளை வேதாவுக்கு பின்னூட்டம் சொன்ன மாதிரி .. பாப்பா பாவமில்லன்னு கேக்காம போனிங்களே..:))))


வருகைக்கு நன்றிகள் சார்...

said...

வேதா said...

/இருந்தாலும் தலவிய இவ்வளவு டேமெஜ் பண்ணி இருக்க வேணாம்!/
ரிப்பிட்டே............ :)

அப்போ அளவோட டேமேஜ் பண்ணலாமிங்கறிங்களா? (கீதா அக்கா ,நோட் திஸ் பாயிண்ட்டு..:))

ஏன் இந்த கொடுமை!! யாரையாவது வம்புக்கு இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதா? அதுவும் என்னைய மாதிரி ஒரு அறியா பொண்ண இப்டி கலாய்க்கறீங்களே இது சரியா? ;D

சொன்னாங்க சொன்னாங்க.. வீட்டுல அம்மாவுக்கு சமையல்ல உதவிக்குக் காய்கறி கூட "அறியா " பொண்ணுன்னு.:P

அதென்ன பிரதம சிஷ்யன்? யாரு கொடுத்தா உங்களுக்கு அந்த பதவியை? :D

ஏனுங்க வேதா.. இதெல்லாம் யாரு கொடுக்கறது.. நாமலே எடுத்துக்க வேண்டியதுதான்.. (நம்ம தலைவி மாதிரியே :P:P:P )

வருகைக்கு நன்றிகள் வேதா..

டிரிம்ஸ் இன்னுமா அந்த சிஷ்யை யாருன்னு தெரியலை.. நம்ம வேதாகிட்ட கேட்டா சொல்லுவாங்களே..:P

said...

// மங்களூர் சிவா said...

புத்தாண்டு முதல் மொக்கைக்கு வாழ்த்துக்கள்!!//



வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள் மாமே...

உங்களுக்கு வாழ்த்து சொல்ல வார கடைசிக்கு காத்துக்கிட்டிருக்கோம்ல்ல.. :))

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

pathivu super rasigan..


வாங்க ஃமைபிரண்டு பாராட்டுகளுக்கு நன்றிகள்... :)

(naan munjaakkiraththaiyaa tanglishle ezuthuren).. appothaan geetha paatti enakku spelling errornnu solla mudiyaathu. :-))))//

ஆஹா.. இப்பிடி ஒரு வழி இருக்கா..
முன்னாடியே தெரிஞ்சிருந்தாக்கா...
இந்த பதிவையே தங்கலிஸுல போட்டிருப்பேனே.. :)))

ரொம்ப உஷாராத்தேன் இருக்கிங்க எல்லாரும்.. நாந்தேன் அடிக்கடி டீச்சர்கிட்ட மாட்டிகிறேன்..:))

said...

// Sumathi. said...

ஹலோ ரசிகா,

//ஏன் இந்த கொடுமை!! யாரையாவது வம்புக்கு இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதா? //

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்...//

ஏனுங்க சுமதி.., கீதா அக்காவை
பத்தி பதிவு போட்டா வெளியிலருந்து ஆதரவு தர்ரேன்னு சொல்லிப்புட்டு (:P) , வேதாவுக்கு சப்போட்டா என்னிய இப்பிடி கவுத்துப்புட்டிங்களே.. :)))

இருந்தாலும் ரிப்பீட்டுக்கு கொஞ்சம் வாலு நீளம் தான்..நோட் பண்ணிக்கிறேன்..:P

said...

// கீதா சாம்பசிவம் said...

ஆஹா, மொக்கையை யாருமே கண்டுக்கலையா, ஜாலி!

கீதா அக்கா... அதான் அடிக்கடி வந்து எல்லாரையும் மிரட்டிட்டு போறிங்களே..அதான் எல்லாரும் ரகசியமா ஆதரவு தெரிவிக்கறாய்ங்க..:P

@மை ஃபிரண்டு, என்ன ரொம்ப ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர//

கீதா அக்கா ஏன் சின்னப்புள்ளையைய எல்லாம் பயம்புறுத்திக்கிட்டு?.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
உங்களுக்கு தங்கலீஸ் படிச்சு காட்டிய அந்த சிஷ்யை யார்?.. அவருக்கு என்னோட கண்டனங்கள்.. :P:P:P

said...

ராசா,

உங்க பதிவுக்கு வந்தாலே! சுட்டெலியை உருட்டி என்னோட விரல் வலிக்குது. புண்ணியமா போகுது. சின்ன மொக்கையா போடமாட்டிங்களா?

said...

// குட்டிபிசாசு said...

ராசா,

உங்க பதிவுக்கு வந்தாலே! சுட்டெலியை உருட்டி என்னோட விரல் வலிக்குது. புண்ணியமா போகுது. சின்ன மொக்கையா போடமாட்டிங்களா?//

ஹிஹி.. பழக்க தோஷம்..:))) முயற்சி பண்ணறேன்.. வருகைக்கு நன்றிகள் குட்டிப்பிசாசு..:)

said...

ஹய்யா ஹய்யா ஹய்யா ஹைத்தலக்கடி ஹய்யா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:_)))))))))))))))))))))))))

said...

தலைவி இப்ப என்ன பண்ணுவீங்க:-))))))))))))))))))))))))))))))))))))

said...

@அபி அப்பா, ஹையா, ஹையாவா? உங்களுக்கு இருக்குங்க! :P

said...

//அபி அப்பா said...

ஹய்யா ஹய்யா ஹய்யா ஹைத்தலக்கடி ஹய்யா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:_))))))))))))))))))))))//
வாங்க அபி அப்பா...இம்புட்டு சந்தோஷமா? தலைவியால எம்புட்டு பாதிக்கப்பட்டு இருக்கிங்கன்னு புரியுது...:)))

வருகைக்கும் ,ஆதரவுக்கும் நன்றிகள்..

said...

// கீதா சாம்பசிவம் said...

@அபி அப்பா, ஹையா, ஹையாவா? உங்களுக்கு இருக்குங்க! :P//

கீதா அக்கா... என்ன இருந்தாலும் வர்ர பிரண்ட்ஸ்சையெல்லாம் இப்பிடி மிரட்டப்டாது...:P

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகன்.

இன்றுதான் இந்த பதிவினை பார்த்தேன். சூப்பரப்பு

said...

யப்பா ரசிகா! கீதாம்மா பாவம்பா. :( தயவு பண்ணி விட்டுடேன்.
அப்பறம் உங்கள பெஞ்சு மேல ஏறி நிக்க வச்சுட போறாங்க. (ஏற்கனவே பெஞ்சு மேல நின்ன அனுபவம் இருக்குன்னு முணுமுணுக்கறது கேக்குது ஹி..ஹி..) :)

- சகாரா.

said...

தனிப்பெரும் தலைவி கீதா சாம்பசிவம் அவர்களின் நுண்ணரசியல் பின்னூட்டங்களை கண்டேன். அனைத்துமே உண்மையென புரிந்துக்கொண்ட்டேன்.

விட்டு போனது:

யாருடைய பிறந்த நாளாக இருந்தாலும் அவரது அடுத்த பிறந்த நாளுக்கு முதல் நாள் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு நான் தான் தாமதமாக வந்துவிட்டேனோ என்று அறியாப்பிள்ளையாய் கேள்விக்கேட்பது

நற, நற, கிர்ர்ர், கர்ர் என எல்லாவித வித்தியாசமான ஒலிகளையும் யாரும் தப்பித்தவறிகூட பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் அமெரிக்கா காப்புரிமை கழகத்தில் பதிவு செய்து வைத்திருப்பது.

மற்றவைகளை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

கீதாம்மா ஏதோ என்னால் ஆன நல்ல காரியம். (வர்ட்டா0

பின்குறிப்பு: பிரதம சிஸ்யன் என்னும் பட்டத்தை நீங்களே எடுத்துக்கொண்டது மாபெரும் தவறு. அவருக்கு ஏற்கனவே பல சிஸ்யர்கள் பிரதமர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

said...

அதற்காக நானும் பிரதம சிஸ்யன் என நினைத்துக்கொல்ல (?) வேண்டாம்.

said...

// மதுரையம்பதி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகன்.

இன்றுதான் இந்த பதிவினை பார்த்தேன். சூப்பரப்ப//

ஹிஹி.வருகைக்கும்,.வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள் ஜயா..

said...

//சகாரா said...

யப்பா ரசிகா! கீதாம்மா பாவம்பா. :( தயவு பண்ணி விட்டுடேன்.
அப்பறம் உங்கள பெஞ்சு மேல ஏறி நிக்க வச்சுட போறாங்க. (ஏற்கனவே பெஞ்சு மேல நின்ன அனுபவம் இருக்குன்னு முணுமுணுக்கறது கேக்குது ஹி..ஹி..) :)

- சகாரா.//

வாங்க சகாரா...நல்வருகைகள்.
ஏனுங்க.. பெஞ்சுமேல நின்னவிங்களை விட்டுட்டு.. பெஞ்சுமேல ஏறி நிக்க சொன்னவிங்க மேல பாவப்படறிங்களே. இது உங்களுக்கே நியாயமா தோனுதா?:P ஹிஹி..

நன்றிகள் சகாரா...

said...

// மஞ்சூர் ராசா said...

தனிப்பெரும் தலைவி கீதா சாம்பசிவம் அவர்களின் நுண்ணரசியல் பின்னூட்டங்களை கண்டேன். அனைத்துமே உண்மையென புரிந்துக்கொண்ட்டேன்.

விட்டு போனது:

யாருடைய பிறந்த நாளாக இருந்தாலும் அவரது அடுத்த பிறந்த நாளுக்கு முதல் நாள் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு நான் தான் தாமதமாக வந்துவிட்டேனோ என்று அறியாப்பிள்ளையாய் கேள்விக்கேட்பது

நற, நற, கிர்ர்ர், கர்ர் என எல்லாவித வித்தியாசமான ஒலிகளையும் யாரும் தப்பித்தவறிகூட பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் அமெரிக்கா காப்புரிமை கழகத்தில் பதிவு செய்து வைத்திருப்பது.

மற்றவைகளை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

கீதாம்மா ஏதோ என்னால் ஆன நல்ல காரியம். (வர்ட்டா0

பின்குறிப்பு: பிரதம சிஸ்யன் என்னும் பட்டத்தை நீங்களே எடுத்துக்கொண்டது மாபெரும் தவறு. அவருக்கு ஏற்கனவே பல சிஸ்யர்கள் பிரதமர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.//

அவ்வ்வ்வ்வ்வ்........ நான் தனி ஆளில்லை... நம்ம மஞ்சூர் ராஜாவுக்கும் பல பல அனுபவங்கள் இருக்கு போல...
நன்றிகள் நண்பரே.. பாயிண்டு பாயிண்ட்டா பிரிச்சு கலக்கிட்டிங்க...
(அடடா.. போற போக்கை பாத்தா,ஒரு எதிர் கட்சியே ஆரம்பிச்சிடலாம் போல இருக்கு.. நம்ம சாம்பு மாமாவை அதுக்கு தலைவராக்கிட்டா போச்சு.. :))):P )

said...

//நம்ம சாம்பு மாமாவை அதுக்கு தலைவராக்கிட்டா போச்சு.. //

ரசிகன், சாம்பு மாமா என்ன பண்ணினார் உங்களுக்கு? அவர் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கார். அவர போய் ஏன் வம்பிழுக்கறீங்க. ஏன் இந்த கொலவெறி? கீதா டீச்சர் கிட்ட வாங்கினது இன்னும் பத்தல போல. கூடிய சீக்கிரமே நல்ல தண்டனை வாங்கி சுகப்பட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஹி..ஹி.. இதுக்கும் வாழ்த்து சொல்வோமில்ல. :)

- சகாரா.

said...

//சகாரா said...

//நம்ம சாம்பு மாமாவை அதுக்கு தலைவராக்கிட்டா போச்சு.. //

ரசிகன், சாம்பு மாமா என்ன பண்ணினார் உங்களுக்கு? அவர் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கார். அவர போய் ஏன் வம்பிழுக்கறீங்க. ஏன் இந்த கொலவெறி? கீதா டீச்சர் கிட்ட வாங்கினது இன்னும் பத்தல போல. கூடிய சீக்கிரமே நல்ல தண்டனை வாங்கி சுகப்பட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஹி..ஹி.. இதுக்கும் வாழ்த்து சொல்வோமில்ல. :)

- சகாரா.//

வாங்க சகாரா..
மறைமுகமா மிரட்டற மாதிரி வாழ்த்து சொல்லிடிங்க.. ரொம்ப நன்றிங்க..
வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்..