Thursday, December 20, 2007

கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் -சீசன் -I )


ஆரம்பிச்சாச்சு ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " கலக்கப்போவது யாரு?.. "


ஏற்கனவே இது "ரொம்ப சின்ன" ஹாலிடேவா இருக்கிறதால நேரா நிகழ்ச்சிக்கே போயிடலாம்..

நிகழ்ச்சிக்கு போட்டிக்கு அழைக்கப் பட்டிருந்த இரண்டு நடுவர்களில் ,சீனியர் ,எங்க பாசத்துக்கும், பெருமதிப்புக்கும் உரிய, தமிழ் டீச்சர் கீதா அக்கா..
கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரில் போடப்பட்டுருந்த சீட்டுக்கு வரப்போகும் இன்னொரு நடுவர் யார் என்று அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருக்கிறார் கீதா அக்கா..

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ் பதிவுலகத்தின் " நம்ம வீட்டுப் பிள்ளை "அபி அப்பா இரண்டாவது நடுவரை , யாருக்கும் புரியாத மாதிரி,அருமை ,பெருமைகளையெல்லாம் சொல்லி அழைக்கிறார்..

கீதா அக்கா(மனதில்) :ஞாயமா பாத்தா என்னை கூப்பிடப்பறம் அங்க ரெண்டாவது சீட்டு போட்டிருக்கவேபடாது.. எல்லாத்தையும் இந்த ரசிகன் தப்பு தப்பா செஞ்சி வைச்சிருக்கான்.. இதுல வேற அவனை என்னோட ஆஸ்தான சீடனா பதவி உயர்வு குடுத்திருக்கேன்.. என்ன பண்ணரது இந்த பதவிக்கு வந்தவங்கள்லாம் ஒடனே எதிர் கட்சிக்கு தாவிடறாங்களே..:-?

திரை மறைவில் இருந்து வந்த அம்பி அண்ணன்:... (எதிர் நாற்காலியில் இன்னொரு நடுவராய் அமர்ந்திருந்த கீதா அக்காவைப் பார்த்து),:P
சாரி.. சாரி ஏதோ முதியோர் நிகழ்ச்சி போலயிருக்கு.. நா அட்ரஸ் மாறி வந்திருக்கேன் போல ""என்று திரும்பி போக முயல..

அபி அப்பா: இல்ல..இல்ல.. சரியாத்தான் வந்திருக்கிங்க.. இது முதியோர் நிகழ்ச்சி இல்லேன்னு காட்டத்தானே உங்களை எல்லாம் நடுவரா கூப்பிட்டிருக்கோம்.அப்புறம் காலையில நீங்க வாங்கி குடுத்த "பொங்கள்" டேஸ்டா இருந்துச்சு" அம்பியை சீட்டுக்கு அழைத்துப்போகிறார்.
அம்பி அண்ணா நமுட்டு சிரிப்போட கீதா அக்காவை பார்க்க.. கீதா அக்காவின் முகத்தில எள்ளும்,கொள்ளும் வெடித்தது.

அபி அப்பா: இப்போ சீனியர் நடுவர் கீதா அவரோட எண்ணங்களை சொல்லுவார்.

கீதா அக்கா(எழுந்து மைக் முன்னாடி வந்து) மொதல்ல உங்க எல்லாருக்கும் ,யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் சொல்லிடறேன். நானே உங்க தனிப்பெரும் தலைவி.ஆமாம் ஆமாம் அது நானேதான்..என்னோட கோடிக்கணக்கான கேடி சிஷ்யர்கள சதி பண்ணி எனக்கெதிரா செயல் பட தூண்ட இங்க ரகசியமா ஒரு மாஸ்டர் பிரைன் வேலை செய்யுது. எங்க்கிட்ட மாட்டட்டும்.. சரியா கவனிக்கிக்கிறேன் அத.. ஓரக்கண்ணால் அம்பியை பார்த்து க்ர்ர்ர்ர்ர்ர்.........

அம்பி: சைடுல அபி அப்பாவை பாத்து.. அப்படி வாங்க வழிக்கு , இப்பவாவது மாஸ்டர் பிரைன்னு ஒத்துக்கிட்டாங்களே .


(மிரண்டு போன ) அபி அப்பா.. : நோ..நோ... கூல் டவுன் மேடம்..இங்க நோ.. பாலிடிக்ஸ்..அப்பிடிதான் நா பள்ளிக்கூடம் படிக்கும் போது...பக்கத்து கிளாசுல பாடம் நடத்துன கவிதா டீச்சர்...

கீதா அக்கா (இடை மறித்து):ஓகே..ஓகே...நேத்து பொதிகையில ஒரு நல்ல நிகழ்ச்சி பார்த்தேன்.. அதுல..
மிரண்டு போன எல்லாரும் :-O, ஒடனே கைத்தட்ட, காதை கிழிக்கிறது..=D>=D>

கீதா அக்கா:.ஹிம்...இப்பெல்லாம் மொக்கை பதிவுக்குத்தானே பின்னூட்டம் வருது..நல்லதா 4 விசயம் சொல்லலாமுன்னா யாரும் கேக்கறதில்லையே..ஏதோ.. மதுரையம்பதி, சாலை ஜெயராமன் மாதிரி விசயந்தெரிஞ்சவங்கதான் கேக்கராங்க்க..:-/

அபி அப்பா:கவலையே படாதிங்க.. கூட்டம் முடிஞ்சி எல்லாரும் போயிட்டப்பறம் நீங்க நெனச்சதெல்லாம் பேச ஒரு சந்தர்ப்பம் தர்ரோம். தலைவிக்கு இது கூட செய்யலேனாக்கா எப்படி?.ஆனா ஒரு விசயம்..நீங்க பேசி முடிச்சிட்டு வரும்போது லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு,ஜன்னல் கதவையெல்லாம் சாத்திப்புட்டு ஓனர் கிட்ட சாவிய குடுத்துடனும்.

இதான் சந்தர்ப்பம்ன்னு டீடீ பக்கத்துல தூங்கி கொண்டிருந்த சுமதி கையில் ஒரு கிள்ளு கிள்ள...;)
தூக்கத்துல இருந்த சுமதி திடீருன்னு விழிப்பு வந்து " தனி" தலைவி வாழ்க ," தனி" தலைவி வாழ்க.."

கீதா அக்கா: சுமதி, என்ன சந்துல சிந்து பாடறியா? கவனிச்சுக்கிறேன்..கவனிச்சுக்கிறேன்..கர்ர்ர்ர்ர் .......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

(மிரண்டு போன ) சுமதி: அது வந்து.வந்து.இல்ல.. கீதா அக்கா.. டீடீ அக்கா கொலுவுக்கு புளியோதரை தரவேயில்ல....நெசமாவே..

அம்பி: சைலண்ஸ்.. இதுக்குத்தான் உப்பு சத்யாகிரகத்து காலத்துல பிறந்தவிங்கள்லாம் மொதல்ல பேச விடக்கூடாதுங்கரது..

டென்சனாகி போன கீதா அக்கா: அம்பி,பேசு..பேசு.. உன்னைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு..என்னோட கடைசி ஆயுதத்த உபயோகிக்க வைக்க வேண்டாமுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..
இருக்கையில் அமர்கிறார்..

அபி அப்பா: மதிப்புக்குறிய "ஆப்பு வைத்த அண்ணல் "அம்பி அவர்கள் பேசுவார்..

அம்பிக்கு மட்டும் இவ்ளோ பட்டமா?.. நோட் பண்ணிக்கிறேன் அபி அப்பா.. கீதா அக்கா முறைப்பதை பார்த்து மெர்சலான அபி அப்பா..
ஹிஹி.. இன்னிக்கி காலை" பொங்கள் "பில் அம்பித்தான் ஃபே செஞ்சாரு.அதான்..ஹிஹி...


எழுந்த அம்பி:ஆபீஸுல வேலை அதிகமா இருக்கிறதால என்ன பேசறதுன்னே தெரியலை..(ஓரக்கண்ணால் கீதா அக்காவை பார்க்கிறார்).

கீதா அக்கா: ஹா..ஹா... அவர் பேச மாட்டார்.. பேச முடியாது.எப்படி முடியும்.?.நான் தான் சொன்னேன்ல்ல அம்பிக்கு பதிவு எல்லாம் எழுதி குடுக்கறது அவரோட தம்பி தான்னு. அதான் நேத்திக்கே, தம்பியை என்னோட செலவுல டிக்கெட் எடுத்து குடுத்து மூனு நாளைக்கி மூணாறு அனுப்பிட்டேனே..ஹிஹி...அம்பி இப்ப சிறகு இல்லாத தும்பி..(வெற்றி களிப்பால் சிரிக்கிறார் கீதா அக்கா..)

அம்பி: நாங்க யாரு?.இப்பிடி ஏதாவது செய்விங்கன்னுதான் அதுக்கு முன்னாடி நைட்டே தம்பி கிட்ட பிட் எல்லாம் எழுதி வாங்கிக்கிட்டேன்..கீதா அக்காவுக்கு பெப்பே காட்டுகிறார்.:-P.கேமரா, கோபத்தால் சிவந்த கீதா அக்காவின் முகத்தை குளோசப்பில் காட்டுகிறது..

அம்பி : நீங்க என்ன சொல்லறிங்கன்னு பாக்கத்தான் சும்மா வெளையாட்டு காட்டினேன்..( பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படிக்க முயல)
வாழ்க.. எல்லாருக்கும்.. வா.ண.க..ம் அட..சே.. எத்தனை தடவ சொன்னாலும்.. மண்ட மண்டயா பெரிய பெரிய எழுத்துல எழுதறது.. ஆபீஸுல சின்ன விண்டோவுல சீக்கிரட்டா பதிவ படிச்சி படிச்சி பழக்கமாயிடுச்சி.. பெருசா பாத்தா தலை சுத்துது..

அபி அப்பா: அப்படி போடு.. அருவாளை.. எங்கிட்ட குடுங்க.. அந்த பிட்டு பேப்பரை உங்க சார்புல படிச்சி சொல்லறேன்..
எல்லாருக்கும் வணக்... (திடீருன்னு கீதா அக்காவின் மூக்கு கண்ணாடி கழண்டு கீழே விழுகிறது..)

கீதா அக்கா:அபி அப்பா நிறுத்துங்க.. நிறுத்துங்க ஸ்டாப் ஸ்டாப்..உங்க தமிழ் வேலை செய்ய ஆரம்பிக்குதுன்னு நெனைக்கிறேன். உங்க தமிழோட பவர் உங்களுக்கே தெரியாது..

அபி அப்பா: எல்லாரும் என்னிய ரொம்பவே புகழறிங்களே.. ஓகே .. இப்போ நிகழ்ச்சி துவங்க்குது..


மொதல்ல வந்து கலக்கப்போவது.. அதற்க்குள் பின்னாலிருந்த திரையை லேசா விலக்கி பார்த்து,நிக்கறது யாருன்னு பார்த்து விட்ட அம்பி..
அத நான் சொல்லறேன்..நான் சொல்லறேன்..என ஆர்வத்தில் துடிக்க..

அபி அப்பா: இதுக்குத்தான் உங்கள அங்க திரைக்கு பக்கத்துல ஒக்கார விடக்கூடாதுன்னு சொல்லறது..ஏன்ப்பா அம்பியோட சேரை நகர்த்தி போடு..

அபி அப்பா: சரி ஆசைப்பட்டுடிங்க,"பொங்கள்" வேற வாங்கி குடுத்திருக்கிங்க, நீங்களே சொல்லுங்க..

அம்பி: அடுத்த போட்டியாளர்:
உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.
இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார்.யெஸ் அது நம்ம வலையுலக தபு சங்கர் டிரிம்ஸ் தான் ...

அபி அப்பா :வாங்க டிரிம்ஸ்..என்ன முகமூடியோட வந்திருகீங்க?..

டிரிம்ஸ்: முகம் தெரியாத எத்தனையோ நபர்களில் நானும் அப்படியே இருந்து விடுகிறேன்.. For the persistent. நான் கடவுள்.. நீங்களும் தான்.

அபி அப்பா:அவ்வ்வ்வ்வ்........ ஆரம்பிச்சிட்டாங்கயா.. ஆரம்பிச்சிட்டாங்க.. நீங்களே கடவுளா இருந்துக்கோங்க.. நான்னெல்லாம் சாதாரண மனிதன் தான். ,விட்டா என்னியயையும் முகமூடி போட சொல்லுவிங்க போல...(ரசிகனுக்கும் சேத்துதான். நோ பார்ஷியாலிட்டி..ஹிஹி..)

அபி அப்பா: ஆமா நெறய தேவதை கதை எழுதுறிங்களே.. தேவதைகளுக்குன்னு ஏதாவது குவாலிப்பிகேஷன் வைச்சிருக்கிங்களா?

டிரிம்ஸ்: ஆமா..ஆமா.. நெறய இருக்கு..

அபி அப்பா: அப்படியா..எங்கே ஒன்னு சொல்லுங்க பார்ப்போம்

டிரிம்ஸ்:கேட்டுக்கோங்க... மொதல்ல தேவதைக்கு கல்யாணம் ஆயி இருக்க கூடாது..

அபி அப்பா:அவ்வ்வ்வ்...... சாவடிக்கராய்ங்களே... யப்பா.. நீங்க இத்தோட நிறுத்திக்கோங்க..

டிரிம்ஸ்: ஜி3, ஜி3 பண்ணரத நிறுத்தட்டும் நா நிறுத்தறேன்.
வேதா கவிதை எழுதறத் நிறுத்தட்டும் நா நிறுத்தறேன்..
அப்புறம்..

அபி அப்பா:அய்யய்யோ.... தாங்க முடியலையே... இதுக்கு மேல பேசனா அப்புறம் என்னோட தமிழோட "பவர" காட்ட வேண்டியிருக்கும் ஆமா சொல்லிப்புட்டேன்.

மிரண்டு போன டிரிம்ஸ் வாயை போத்திக்கொள்கிறார்.. கீதா அக்கா அவசர அவசரமா மூக்கு கண்ணாடியை கழற்றி கைபைக்குள் வைத்துக் கொள்கிறார்.

விக்ரமின் டயலாக்கால டென்சனான அந்நியன் பிரகாஷ்ராஜ் மாதிரி கையை முகத்துக்கு நேரே ஈ ஓட்டிய அபி அப்பா தனக்கு தானே கூல் கூல் என்று சொல்லிக்கொள்கிறார்...ஓகே. நீங்க இன்னும் மேஜர் ஆவலை.அதனால நாங்க சொல்லற டைட்டில தான் செய்யனும். இந்த குடுவையில இருந்து ஒரு சீட்டு எடுங்க.

தேடிப்பாத்த டிரிம்ஸ்.. அபி அப்பா என்ன இது? ஒரே சீட்டு தான இருக்கு..

அத தான் எடுத்து குடுக்கனும்.வேனுமின்னா அதையே நாளு ஜெராக்ஸ் எடுத்து போட சொல்லறேன்..

எடுத்து,என்னன்னு எட்டிப்பார்த்த ஜி3 கிட்ட காட்டாம மறைச்சு அபி அப்பாக்கிட்ட போய் காட்டுகிறார். படித்த அபி அப்பா..
"அரைச்ச மாவை அரைப்போமா? ம்ம். ரீ மிக்ஸ் ரவுண்டு வந்திருக்குப்பா.. உனக்கு..

நம்ம நடுவர் சொல்லற வார்த்தைய உங்க கவிதையில ரீ மிக்ஸ் பண்ணி சொல்லனும்.. ஓகே..

ஓகே..RTFL....

நானு நானு என்பது போல கீதா அக்கா கையை உயர்த்த.. இல்லிங்க மேடம் ,தலைதீபாவளி பரிசா நம்ம அம்பிக்கு மொத வாய்ப்பு குடுக்கிறோம்..
சொல்லுங்க அம்பி என்ன வார்த்தை குடுக்க போறிங்க?...

"எல்லாம் காலையில வாங்கி குடுத்த பொங்கல் பண்ணரவேலை "கீதா அக்கா முனுமுனுக்க..ஆபிஸ் கட்டடிச்சிட்டோமேன்னு திங்க் பண்ணிக்கிட்டிருந்த அம்பியண்ணா திடீருன்னு "ஆபிஸ்..இல்ல இல்ல இன்டர்வியு..அதே தான் இன்டர்வியு.."

ஓகே நன்றி அம்பி அருமையான சப்ஜெட்.. கலக்குங்க வலையுலக த(ப்)பு சங்கர் டிரிம்ஸ்..

("அழகா கவிதை சொல்றடா,
என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்? ")

இன்டர்வியு..நல்லா ஆன்சர் பண்ணறிங்க..
என்ன வேலை வேணும் என்றார்கள்
கம்பெனியில் வேலை கேற்கலாம்
கம்பெனியையே கேட்டால்???


சொல்லிக்கொண்டே சினிமா டாட் காம் விளம்பரத்துல இருந்து கிழிச்சிக்கிட்டு வந்த பாதி பாவனா போஸ்டரை சைடுல விரித்துப்பிடிக்கிறார் டிரிம்ஸ்.

ஓ அவரா நீங்க? இடத்த குடுத்தா மடத்த கேக்கற ஆளா?, அப்பவே தொறத்தியிருப்பாய்ங்களே.. அது சரிப்பா அது எதுக்குப்பா சைடுல போஸ்டர்..

ஹிஹி.. செல பேரு , மொதல்ல படத்த பாத்துப்புட்டு சூப்பர்ன்னு பின்னூட்டம் போடறாய்ங்களே.. அந்த பழக்கம்த்தான்..ஹிஹி..

வேதா : (பக்கத்திலிருந்தவரோட) எத்தனையோ மொற சொல்லியாச்சி , திருந்த மாட்டேங்கறாரு...

ஆஹா..கலக்கிட்டிங்க டிரிம்ஸ்.. இப்பத்தான் புரியுது அமெரிக்காகாரன் இந்தியன கண்டு ஏன் இப்பிடி பயப்படறான்னு.. நன்றி போய் ஒக்காருங்க..


ஒக்கார சேர் தேடிய டிரிம்ஸ்சை "தம்பி சூப்பரு.. அக்கா எடம்புடிச்சி வச்சிருக்கேன்"ன்னு கூப்பிட்டு பக்கத்து சீட்டுல ஒக்கார வைச்சுக்கிட்டார் ஜி3 பின்ன சப்போட்டுக்கு ஆள் வேணாமா?..

அபி அப்பா: அடுத்த கன்டெஸ்டன் ஈஸ்.. எல்லாருக்கும் செல்லம் ......... சொல்ல ஆரம்பித்த அபி அப்பா வாட்சை பார்த்து விட்டு ..

ஹிஹி.. இது விளம்பர நேரம் .............கலக்கப்போவது யாரு? ஆஃப்டர்தி பிரேக்.

அவர் சொன்ன அந்த செல்லம் யாருன்னு நாளைக்கு பார்க்கலாமா?.. கலக்கபோவது யாரு நாளையும் தொடரும்..

விளம்பரம்.. டொன்ட டொய்ங்........



படிக்க தவறாதீர்கள்..அடுத்து வருவது யார்?
கீதா அக்கா சொன்ன அந்த கடைசி ஆயுதம் எது?
அதிலிருந்து அம்பி அண்ணா தப்பிப்பாரா? மேலும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது
" ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " காத்திருங்க ..




51 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

ennaga rasigan.. ippadi ellaraiyum potu thaaki irukeenga.. adu seri... niraya spellg mistake iduleryum iruke

said...

// படிக்க தவறாதீர்கள்..அடுத்து வருவது யார்?
கீதா அக்கா சொன்ன அந்த கடைசி ஆயுதம் எது?
அதிலிருந்து அம்பி அண்ணா தப்பிப்பாரா? மேலும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது " ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " காத்திருங்க .//

interesting

said...

// .பக்கத்து கிளாசுல பாடம் நடத்துன கவிதா டீச்சர்...//

haaaahaaaa this is very comedy.kavitha kaatukitiya?

said...

ஹஹா! செம காமடியா இருக்கு. ஒரு சின்ன திருத்தம் கீதா அக்கா இல்ல, பாட்டி. :p

சீரியஸா ஆபிஸ்ல வேலை பாத்துட்டு இருக்கும் போது (அட நிஜமா சொல்றேன்) டிடி அக்கா போன் போட்டு படிக்க சொன்னாங்க உன் பதிவை. அடுத்த பதிவுக்கு ஆவலோடு வெய்டிங்க். :))

said...

ROFL! comedy post! aappu special a irundhaalum, rasikum padi irunthuchu!

said...

irunthaalum gapla pala perukku aapu vechu irukeenga! enna nadakka potho!

said...

//இன்டர்வியு..கம்பெனியில் கேட்டால்
என்ன வேலை வேண்டுமென்று
அந்த கம்பெனியையே கேட்டுவிட்டால்.????//

யோவ் மாம்ஸ்.. இது ஒரு கவிதைய?
இதையாச்சும் மாத்துங்க..

நிஜத்தில் ரெகமெண்டேஷன் ஆளை
முடிவு செய்து விட்டு..
இன்டர்வலில் நடத்தும் விளையாட்டு..
இன்டர்வியு

said...

//அபி அப்பா: அடுத்த கன்டெஸ்டன் ஈஸ்.. எல்லாருக்கும் செல்லம் ......... சொல்ல ஆரம்பித்த அபி அப்பா வாட்சை பார்த்து விட்டு ..//
haahahaa innum aapu baaki veraya!
moththathula sondha selevula supera sooniyam vechukareenga!

aana, paaka nalla vedikaiya irukkungov!

said...

9

said...

10

said...

11

said...

dedicated to SACHIN GOPS!!!!!!!!!! 13
13
13
13
13
13
13
13
13
13
13
13
13

said...

// dubukudisciple said...

ennaga rasigan.. ippadi ellaraiyum potu thaaki irukeenga.. adu seri... niraya spellg mistake iduleryum iruke //

நல்வருகைகள் டீடீ அவர்களே.

ஓ..ஸ்பெல்லிங் மிஸ்டேக்க சொல்லறிங்களா?

அது எங்க தமிழ் டீச்சருக்காக விட்டு வச்சது..கண்டுக்காதிங்களேன்..

ஆனாலும் நீங்க சும்மா இருந்த சுமதிய கிள்ளி விட்டது அநியாயந்தானுங்க..

அதே போல ஆபீஸுல தூங்கிக்கிட்டிருந்த அம்பி அண்ணாவையும்போன் போட்டு எழுப்பி விட்டிருக்கிங்க..
நீங்களும் ஒருத்தரையும் விட மாட்டேங்கறீங்களே.பேசாம எங்க கட்சில சேந்துருங்களேன் ஹிஹி.. :))).

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்..

said...

// vijay said...

// படிக்க தவறாதீர்கள்..அடுத்து வருவது யார்?
கீதா அக்கா சொன்ன அந்த கடைசி ஆயுதம் எது?
அதிலிருந்து அம்பி அண்ணா தப்பிப்பாரா? மேலும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது " ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் " காத்திருங்க .//

interesting

ஹலோ...எது இன்ரஸ்டிங்? தொடரும்ன்னு போட்டதா?..
விஜய் சார் உங்களுக்கு ஒரு சான்ஸ் குடுக்காம போயிட்டோமேன்னு வருத்தமா இருக்குங்க..:P
// haaaahaaaa this is very comedy.kavitha kaatukitiya?//

ஆஹா..இதெல்லாம் கரைட்டா பண்ணிருவிங்களே...

அவ்வ்வ்......

said...

// ambi said...

ஹஹா! செம காமடியா இருக்கு. ஒரு சின்ன திருத்தம் கீதா அக்கா இல்ல, பாட்டி. :p

சீரியஸா ஆபிஸ்ல வேலை பாத்துட்டு இருக்கும் போது (அட நிஜமா சொல்றேன்) டிடி அக்கா போன் போட்டு படிக்க சொன்னாங்க உன் பதிவை. அடுத்த பதிவுக்கு ஆவலோடு வெய்டிங்க். :))//

வாங்க அம்பியண்ணாவ்வ்.. நன்றிகள்..
கவலைப்படதிங்க..கடைசிலதான இருக்கு உங்க கிளைமாக்ஸு(?).இந்த வாரம் முழுவதும் கல்கப்போவது யாரு? வாரரரம் தானுங்கோ..

வருகைக்கும்,நச்சுன்னு சொன்ன திருத்தத்திற்க்கும் நன்றிகள்..ஆனா கீதா அக்காவந்து உங்கள நச்சுன்னு ஏதாவது சொன்னா நான் பொருப்பில்லேப்பா..ஹிஹி..

said...

// Dreamzz said...

ROFL! comedy post! aappu special a irundhaalum, rasikum padi irunthuchu!//

ஆஹா.... நீங்க இம்புட்டு நல்லவரா?..
அவ்வ்வ்வ்வ்.........
ஆப்பு வைச்சாலும் ,அதை ரசிக்கும் படியான ஆளா?.இது தெரியாம போச்சே.. இன்னும் உங்க ரசிப்புக்கு ஹெல்ப் பண்ணியிருக்கலாமே?:P:P:P

எங்க அக்கா எப்பவும் என் பக்கம்தான்னு சொன்னிங்க..எங்க உங்க அக்கா? தலை மறைவாயிட்டாய்ங்களா?..:P:P

// நிஜத்தில் ரெகமெண்டேஷன் ஆளை
முடிவு செய்து விட்டு..
இன்டர்வலில் நடத்தும் விளையாட்டு..
இன்டர்விய//

இது சூப்பரு..பாருங்க மக்கள்ஸ் வலியில என்னவெல்லாம் தத்துவம்ஸ் தோனுதுன்னு.:ஹிஹி..

said...

// Dreamzz said...

//அபி அப்பா: அடுத்த கன்டெஸ்டன் ஈஸ்.. எல்லாருக்கும் செல்லம் ......... சொல்ல ஆரம்பித்த அபி அப்பா வாட்சை பார்த்து விட்டு ..//
haahahaa innum aapu baaki veraya!//


பின்ன அதான் இந்த ஹாலிடேவ ஆப்ப்பு ஸ்பெசலா கொண்டாட ஏற்கனவே தீர்மானம் கொண்டு வந்தாச்சே..:))

said...

// வேதா said...

ஹலோ மே ஐ கம் இன்? :D//


வாங்க வேதா வாங்க.. என்னதிது சின்னப்புள்ள மாதிரி பர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு.தைரியமா கோதாவுல குதிக்கலாம்:))

said...

வேதா said...

// /ஆபீஸுல சின்ன விண்டோவுல சீக்கிரட்டா பதிவ படிச்சி படிச்சி பழக்கமாயிடுச்சி.. பெருசா பாத்தா தலை சுத்துது../
அம்பி உண்மையெல்லாம் எப்டி வெளில வருது பார்த்தீங்களா? :)

/இப்பிடி ஏதாவது செய்விங்கன்னுதான் அதுக்கு முன்னாடி நைட்டே தம்பி கிட்ட பிட் எல்லாம் எழுதி வாங்கிக்கிட்டேன்./
அப்ப ஒவ்வொரு முறையும் இப்டி தான் கணேசன் கிட்ட எழுதி வாங்கறீங்களா? எங்க தனிப்பெரும் தலைவி சொல்றதெல்லாம் உண்மைன்னு இப்ப வெட்டவெளிச்சமாயிடுச்சு :D//

/இன்டர்வியு..கம்பெனியில் கேட்டால்
என்ன வேலை வேண்டுமென்று
அந்த கம்பெனியையே கேட்டுவிட்டால்.????/

இங்கேயாவது புரியற மாதிரி ஏதாவது எழுதக்கூடாதா தினேஷ் :D
//

ஹிஹி..

அவர் எழுதிய

"அழகா கவிதை சொல்றடா,
என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்? "

கவிதையின் ரீ மிக்ஸ்தேன் இது..

/எத்தனையோ மொற சொல்லியாச்சி , திருந்த மாட்டேங்கறாரு.../
சொல்லியா? சோடா பாட்டிலே அடிச்சாச்சு அடங்க மாட்டேங்குறான் :D


ஆஹா.. கெடச்ச சந்தர்ப்பத்துல எல்லாரையும் ஒரு கலக்கு கலக்கிப்புட்டிங்களே?.. அவ்வ்வ்வ்......

உங்க கிட்ட கொஞ்சம் உஷாராவேதேன் இருக்கனுங்கோ...:)))))

said...

// வேதா said...

சூப்பரா எழுதியிருக்கீங்க :D//

பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிகள்..வேதா..

said...

அடடா..என்னாச்சு தமிழ் மணத்துல மறுமொழியப்பட்ட பகுதில பதிவு சேரவேயில்ல.. ஒரு வேளை இதுவும் கீதா அக்கா வேலையோ:P

said...

// வேதா said...

/இதுல வேற அவனை என்னோட ஆஸ்தான சீடனா பதவி உயர்வு குடுத்திருக்கேன்.. /
இது எப்ப நடந்தது? தலைவியின் சிஷ்ய கேடிகளுக்கு தெரியாமல் இப்டி ஒரு சதியா? இதை நான் வன்மையா கண்டிக்கறேன் :Dவேதா said...

/இதுல வேற அவனை என்னோட ஆஸ்தான சீடனா பதவி உயர்வு குடுத்திருக்கேன்.. /
இது எப்ப நடந்தது? தலைவியின் சிஷ்ய கேடிகளுக்கு தெரியாமல் இப்டி ஒரு சதியா? இதை நான் வன்மையா கண்டிக்கறேன் :D//

ஹலோ.. நீங்க மட்டும் ,தலைவி கிட்ட திருநெல்வேலி அல்லா வாங்கிக்கொடுத்து விமர்சனம் எழுதி வாங்கலாம்.பழனி பஞ்சாமிர்தம் வாங்கி கொடுத்து நாங்க பதவி வாங்கப்டாதோ?.. என்னங்க நியாயமிது:P:P

said...

ரசிக்கும்படியான 'ஆப்பு' போஸ்ட்,
நல்லா எழுதியிருக்கிறீங்க ரசிகன்!

said...

புதுசா படிக்கிற எனக்கே உங்க எல்லார்கூடயும் பழகின மாதிரி இருக்கு..

நீங்க எழுதியிருக்கிற நடை ரொம்ப நல்லாயிருக்கு

said...

இன்னும் எத்தனை பேர் வரிசையில்?.
போகிற போக்கை பார்த்தால்,எதிர் தாக்குதலும் பலமாக இருக்கும் போல இருக்கே? தயாரா?பின்னூட்டங்களும் அருமையாக இருக்கின்றன.

said...

நல்ல நகைச்சுவையாக இருக்கிறது ரசிகன்.இனி உங்களுக்கு விடுமுறை விட்டால்,எல்லாரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல:P.

Anonymous said...

:)))

said...

அடடா மாமா பின்றீங்களே...ம்ம்ம்ம்... குட்டீஸ் கார்னர்ல அடுத்த ஆப்பு உங்களுக்கு வெச்சிடுவோமா? :P

said...

//moththathula sondha selevula supera sooniyam vechukareenga!//

Repeatae :)))

said...

//சொல்லியா? சோடா பாட்டிலே அடிச்சாச்சு அடங்க மாட்டேங்குறான் :D//

Yakka.. unmaiya soldradhunnu mudivu pannappuram idhu enna paadhi mattum sollittu?? Acid bottlelayae adichum paathachunnu muzhusa solla vendiyadhu dhaanae :)

said...

//அடடா மாமா பின்றீங்களே...ம்ம்ம்ம்... குட்டீஸ் கார்னர்ல அடுத்த ஆப்பு உங்களுக்கு வெச்சிடுவோமா? :P//

@Nila,

En aadharavu nichayam undu :D

said...

ஓ..ஸ்பெல்லிங் மிஸ்டேக்க சொல்லறிங்களா?

அது எங்க தமிழ் டீச்சருக்காக விட்டு வச்சது..கண்டுக்காதிங்களேன்.. //
seringa rasigan .. naan kandukamaten.. unga spelling mistakea..

said...

ஆனாலும் நீங்க சும்மா இருந்த சுமதிய கிள்ளி விட்டது அநியாயந்தானுங்க..
//
naan sumathiya killi vitena.. idu ennaga neengale kuzhanthaium killi vittu thotilayum aatareenga..
:D


//அதே போல ஆபீஸுல தூங்கிக்கிட்டிருந்த அம்பி அண்ணாவையும்போன் போட்டு எழுப்பி விட்டிருக்கிங்க..
நீங்களும் ஒருத்தரையும் விட மாட்டேங்கறீங்களே.பேசாம எங்க கட்சில சேந்துருங்களேன் ஹிஹி.. :))).
///
ennanga idu.. unga padivu ellarum padikanum appadingarthukaga avara ezhupi viten.. thappaa... inda kalathula nallathe seiya koodathu..:(
sandadi saakula edo katchinu ellam solreengale.. adu enna katchi, enaku enna padavinu sonnengana naan yosikaren...

said...

கல்லுக்குறீங்க

said...

சூபராப் போகுது

said...

// Divya said...

ரசிக்கும்படியான 'ஆப்பு' போஸ்ட்,
நல்லா எழுதியிருக்கிறீங்க ரசிகன்!//

நல்வருகைகள் திவ்யா.. பாராட்டுகளுக்கு நன்றிகள்...

said...

// ரூபஸ் said...

புதுசா படிக்கிற எனக்கே உங்க எல்லார்கூடயும் பழகின மாதிரி இருக்கு..

நீங்க எழுதியிருக்கிற நடை ரொம்ப நல்லாயிருக்கு//

வலையுலகமே ஒரு குடும்பம் தானே.. .
வெளி வாழ்க்கையின் ஒரு புதிய பரிமாணம் தான் இந்த வலை வாழ்க்கை இல்லையா...
முதல் வருகைக்கும் ,பாராட்டுகளுக்கும் நன்றிகள் ரூப்ஸ்.

said...

// பிரியமுடன் பிரித்தி said...

இன்னும் எத்தனை பேர் வரிசையில்?.
போகிற போக்கை பார்த்தால்,எதிர் தாக்குதலும் பலமாக இருக்கும் போல இருக்கே? தயாரா?பின்னூட்டங்களும் அருமையாக இருக்கின்றன.//

வாங்க பிரித்தி.. ஹலோ.. நாங்களும் நியுட்டன் விதிய படிச்சிருக்கோம்ல்ல..
கடமையை செய் ,பலனை எதிர் பார்க்காதேன்னு என்னோட பிரண்டு சொல்லியிருக்காரு..:P

said...

// பிரியமுடன் பிரித்தி said...

நல்ல நகைச்சுவையாக இருக்கிறது ரசிகன்.இனி உங்களுக்கு விடுமுறை விட்டால்,எல்லாரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல:P.//
என்னதிது ஒரே பின்னூட்டத்துல பாராட்டவும் செய்யறிங்க..வாரியும் விடறிங்க.. ஒருவேளை இது உங்க ஆப்பு ஸ்பெசல்லா?..அவ்வ்வ்வ்........
:)))

said...

// Anonymous said...

:)))//

நன்றிகள் நண்பரே..

said...

// நிலா said...
அடடா மாமா பின்றீங்களே...ம்ம்ம்ம்... குட்டீஸ் கார்னர்ல அடுத்த ஆப்பு உங்களுக்கு வெச்சிடுவோமா? :P//

ஆஹா.. என்னவொரு கடமை உணர்ச்சி என் நிலா செல்லத்துக்கு..?..
மாமாவுக்காக ஏதோ பாத்து செய்யுடா செல்லம்..:))))
என்னோட சார்ப்பா நம்ம சங்கத்து தல குசும்பர் வாங்கிப்பாரு..:P

said...

// G3 said...

//moththathula sondha selevula supera sooniyam vechukareenga!//

Repeatae :)))//

என்ன ரிப்பீட்டு.. சும்மா கிடந்த என்னை உசுப்பி விட்டதே..அக்காவும் தம்பியும்தான்...
உங்க தம்பி வைச்சுக்கிட்ட சொ.கா.சூ பத்திதான் வேதனைப்பட்டு ,வெதும்பி சொல்லறார்..
அதுக்கும் ரிப்பீட்டா?..:P:P:P

said...

// G3 said...

//சொல்லியா? சோடா பாட்டிலே அடிச்சாச்சு அடங்க மாட்டேங்குறான் :D//

Yakka.. unmaiya soldradhunnu mudivu pannappuram idhu enna paadhi mattum sollittu?? Acid bottlelayae adichum paathachunnu muzhusa solla vendiyadhu dhaanae :)//
ஆஹா.. இம்புட்டு நடந்திருக்கா?.. இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியாம போச்சே.. அவ்வ்வ்வ்வ்.........

said...

// G3 said...

//அடடா மாமா பின்றீங்களே...ம்ம்ம்ம்... குட்டீஸ் கார்னர்ல அடுத்த ஆப்பு உங்களுக்கு வெச்சிடுவோமா? :P//

@Nila,

En aadharavu nichayam undu :D///

ஆஹா...கேப்பு கெடிச்சா,ஒடனே செட்டு சேந்துப்புடறாய்ங்கப்பா...அவ்வ்வ்வ்......

said...

// dubukudisciple said...


sandadi saakula edo katchinu ellam solreengale.. adu enna katchi, enaku enna padavinu sonnengana naan yosikaren...//

ஆஹா.. நம்ம கட்சியப்பத்தி தெரியாத ஆளா.. அவ்வ்.....
இங்க போய் பாருங்க.. சேர்க்கை பக்கம்..
http://rasigan111.blogspot.com/2007/12/blog-post_19.html

ஹிஹி..

said...

// நாகை சிவா said...

:)//

வருகைக்கு நன்றிகள் சிவா மாம்ஸ்..:)

said...

// cheena (சீனா) said...
கல்லுக்குறீங்க
சூபராப் போகுது///

வாங்க சீனா.. சார்..
இது என்ன அநியாயங்க சார்..
எங்க கீதா அக்கா முன்னாடிமட்டும் எல்லாரும் தப்பில்லாம் பேசி நல்ல பேரு வாங்கிடறிங்க..
கீதா அக்கா..இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா.. இதயே நா சொன்னா மட்டும்
ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு குத்தம் சொல்லறது..
என்ன கொடுமைங்க இது?..:P

வருகைக்கும் ,பாராட்டுகளுக்கும் நன்றிகள் சீனா சார்..

Anonymous said...

//அப்பிடிதான் நா பள்ளிக்கூடம் படிக்கும் போது...பக்கத்து கிளாசுல பாடம் நடத்துன கவிதா டீச்சர்...//

நான் இன்னும் ஸ்கூலே முடிக்கலே
அதுக்குள்ள நான் டீச்சரா?. நான் ஊருல இல்லாத சமயமா பாத்து வம்புக்கு இழுத்திருக்கிங்க.பாத்துக்கிறேன் உங்களை.

said...

என் பெயரை மறந்திட்டீங்க ரசிகன். சாலை நடராஜன் இல்லை சாலைஜெயராமன்.

ஆகா கலக்கிப்புட்டீங்க ரசிகன். உங்களுக்கு இன்னா வயசு? ஏன்னா என் வயசை மறந்து ரசிச்சேன். நல்ல நகைச்சுவை. எப்படி Vijay TV ல விட்டாங்க.

ரவுண்டு கட்டி கலக்கிறீங்க. பாவம் கீதா அக்கா. தொடருங்க

said...

// kavithaa said...

//அப்பிடிதான் நா பள்ளிக்கூடம் படிக்கும் போது...பக்கத்து கிளாசுல பாடம் நடத்துன கவிதா டீச்சர்...//

நான் இன்னும் ஸ்கூலே முடிக்கலே
அதுக்குள்ள நான் டீச்சரா?. நான் ஊருல இல்லாத சமயமா பாத்து வம்புக்கு இழுத்திருக்கிங்க.பாத்துக்கிறேன் உங்களை.//

ஹிஹி.. கவிதா இவ்வளவு சீக்கிறம் நீங்க திரும்பி வருவிங்கன்னு தெரியாதே அதான்..:P

said...

// SALAI JAYARAMAN said...

என் பெயரை மறந்திட்டீங்க ரசிகன். சாலை நடராஜன் இல்லை சாலைஜெயராமன்.

ஆகா கலக்கிப்புட்டீங்க ரசிகன். உங்களுக்கு இன்னா வயசு? ஏன்னா என் வயசை மறந்து ரசிச்சேன். நல்ல நகைச்சுவை. எப்படி Vijay TV ல விட்டாங்க.

ரவுண்டு கட்டி கலக்கிறீங்க. பாவம் கீதா அக்கா. தொடருங்க//

ஜய்யய்யோ.. நல்ல வேளை எங்க தமிழ் டீச்சர் இன்னும் பாக்கலை..மாத்திட்டேனுங்க சார். மன்னிச்சுடுங்க..

பாராட்டுகளுக்கு நன்றிகள்..