Thursday, August 7, 2008

டாட்டா...பைபை...


ஹாய் மக்கள்ஸ், எப்படி இருக்கிங்க?.. ரொம்ப நாளாச்சுல்ல..நான் லீவுக்காக இந்தியா வந்ததுலருந்து ரொம்ப பிஜியாகிருச்சு.நாமளும் பயணக்கட்டுரைல்லாம் எழுதி உங்களையெல்லாம் கொடுமைப்படுத்தலாம்ன்னுதான் பிளான்.எப்படியோ தப்பிச்சுட்டிங்க:P




பர்சனல் வேலைகளை முடிக்கவே நேரம் பத்தலை.இந்தியா வந்துட்டு,பாக்க வராததால,நம்ம நண்பர்கள் கிட்டயிருந்து ஒரே அர்ச்சனைதான் போங்க. எல்லாருக்கும் போன்லயே சிலபல சமாதானங்களை சொல்லி ஸாரி சொல்லறதுக்குள்ள... அவ்வ்வ்வ்வ்.


அதிகம் அர்சனை செஞ்சது நம்ம ஜீவ்ஸ் மாம்ஸ் & மின்னல் சுமதி.அடிக்கடி போன் எடுக்கறதில்லைன்னு ரொம்பவே பாராட்டுனது(?) நம்ம பாசமிகு பாரதி மாம்ஸ்.இதுல திட்டாம விட்டது நம்ம தோழி ஜி3 மட்டும்தான்.காண அன்புடன் அழைத்த நந்து மாம்ஸ்,சஞ்ஜய்,சிவா யாரையும் காண இயலாதது வருத்தம்.

பிளாக் பக்கமே வர முடியல.ஆனா நம்ம ரிட்கவுண்டர்
ரிப்போர்ட் பாத்ததுல,ஒன்னும் எழுதலைன்னாலும் ஆச்சர்யப்படுமளவுக்கு நிறைய எண்ணிக்கையில,பேரு நம்ம வலைப்பக்கம் வந்துட்டு போயிருக்காங்கன்னு நாடுகள் வாரியா காட்டுது.அதுல 43% நேரடி வருகை.உங்க அன்பிற்க்கு நன்றிகள்.


நான் கத்தாருல ஆற்றிய சேவை(?) போதும். துபாய் வேகமா முன்னேறுதாம்ல்ல.. அதை எப்படி அனுமதிக்கலாம்ன்னு, போனஸ்ல்லாம் குடுத்து,என்னை துபாய்க்கு நாடுகடத்திட்டாங்க.

தோஹாவுல தனிக்காட்டு ராஜாவா துள்ளிக்கிட்டு இருந்த என்னிய, துபாய் மெயின் ஆபிஸ்ல போட்டு நொங்கெடுக்கப் போறாங்க:P

அதுவும் நம்ம குசும்பரும் துபாய்ல செலவுகள் பத்தி பதிவெல்லாம் போட்டு பயம்புறுத்திட்டாரு.நான் மூனு வருஷம் கழிச்சு மறுபடியும் துபாய்க்கு போறேன்.என்னென்ன மாற்றங்கள்ன்னு தெரியலை.நான் இல்லாத(காரணத்தால்?) காலத்துல நிறைய டெவலப் ஆகிருச்சாம்ல்ல..

என்ன?அப்போ நமக்குதெரியாத நிறைய பதிவுலக நட்புள்ளங்களை இப்போ அடைந்திருக்கோம் .அதிலும் என்னிய பதிவுலத்துக்கு இழுத்து விட்ட அபிஅப்பா, போன்லயே நட்பை உணர வைக்கும் நம்ம குசும்பர்மாம்ஸ் ரெண்டு பேரையும் பாக்கனும்ன்னு இருந்த ஆவல் தீரப் போகுதுன்னு ஒரு சந்தோஷம்

எந்த வேலையும் ஒழுங்கா முடியாம,முழுத் திருப்தியில்லாம, இதோ மீண்டும் கிளம்புகிறேன். கடமை என்னை அழைக்கிறது.இன்று இரவு விமானம்.நாளைய சூரியன் என்னை துபாயில் சந்திப்பார்(ஓவர் பில்டப்பா இருக்கோ?:P

அலுவல் பணிகள் வழக்கத்துக்கு வந்து,இருப்பிட ஏற்பாடுகள் எல்லாம் முடிய சில காலம் பிடிக்கும். அதுவரை என் கொடுமைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தரலாம்ன்னு பெருந்தன்மையோடு முடிவெடுத்துள்ளேன். (யாருப்பா அது? பதிவிலேயே என்னைக் கவர்ந்த வரிகள் இதுதான்னு சொல்லறது:P)


சில பல சந்திப்புக்கள்.சில நண்பர்களை அவர்களுக்கே தெரியாமல் பார்த்துவிட்டு வரத்தான் நேரம் இருந்தது

இங்க வந்து நான் கலந்துக்கிட்ட மிகச் சொற்ப சந்திப்பு நிகழ்ச்சிகளுல தமிழ்க்குழுமங்களின் சென்னை சந்திப்பும் ஒன்று.
நம்ம சிபி மாம்ஸ்,சகாரா,தணிகை இன்னும் பலரையும் கண்டு அளவளாவியது பசுமையான நினைவு


இந்த சந்திப்பினைப் பற்றி குழுமத்தில் கிறுக்கிய அவசர ரிப்போர்ட்

................

ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும்ன்னு ஆசைப்படும்போது

கற்கண்டு,வெல்லம்,தேன்,பேரிட்சை,திராட்சை ஐந்தையும் போட்டு பஞ்சாமிர்தமா செய்து கொடுத்தா எப்படியிருக்கும்?. இது ஏதாவது பழனி பக்கம்
டூர் போனது பற்றியோ என யோசிக்கறிங்களா?

தமிழ் இணைய உலகின் ஐந்து குழுமங்களும் இணைந்து சென்னையில்(20.08.08) நடத்திய பஞ்சாமிர்த சந்திப்பு சங்கமத்தைப் பற்றிதான் சொல்லுகிறேன்.

விடுப்பு முடிந்து ,துபாய் கிளம்ப விசா வந்துவிட்ட காரணத்தால்,ஆயத்த பணிகளின் நிமித்தம், சந்திப்பில் கலந்துக்கொள்ளமுடியுமா? என மனதில் சந்தேக நிழல் படிய, ஒருவழியாய் , சரி, ஆட்டோகிராப் மாதிரி பஸ் ஜன்னலோரம் உட்கார்ந்து கொசுவத்தி சுத்திக்கிட்டே போகலாம்ன்னு ,நான் கிளம்ப முடிவெடுத்து புதுவையிலிருந்து கிளம்பியதே மதியம் 1 மணிக்குத்தான். ( மதியம் மூன்று மணிக்கே குழும சந்திப்பு துவங்கும்ன்னு மஞ்சூர் அண்ணா அலைப்பேசியிருந்தார்).

சென்னையில் வந்திறங்கிய போது மணி 4. சரி நமக்கோ வழி தெரியாது.நேரமும் ஆகிருச்சு.ஏன் ரஸ்க் எடுக்கனும்?ன்னு (நமக்குத்தான் ரிஸ்க்ன்னா ரஸ்க் மாதிரியாச்சே:P ) இந்திய தேசிய வாகனத்தில்(அட,நம்ம ஆட்டோதாங்க)
போகலாம்ன்னு தெரியாத்தனமா முடிவெடுத்து,சென்னையின் சந்து

பொந்துக்களை எல்லாம் சுற்றிப்பார்த்து,புதுவையிலிருந்து சென்னைக்கு
பஸ்ஸில் வந்த தொகையை விட அதிகமா கப்பங்கட்டி,ஒருவழியா சவன் ஹில்ஸ் (ஏழுமலை)செட்டியார் திருமண நிலையம் வந்திறங்கிய போது தொப்பலாய் நனைந்திருந்தேன்.

4 மணிநேர பயணக்களைப்பும்,தினமும் மதியம் உண்ட களைப்பில் லேசாய் ஓய்வெடுக்கும் பழக்கமும் சேர்ந்து சவால் விட,சரி பெரிய பெரியவங்களா வந்து நிறைய இலக்கியம்ல்லாம் பேசுவாங்க,நாம கடைசி வரிசை சிம்மாசனமா பாத்து,கனவுலகை ஒரு ரவுண்டு போய் வந்துடலாம்ன்னு நினைச்சு போனா. அங்க..நம்ம சிபி மாம்ஸ் & மஞ்சூர் அண்ணா. கண்டதும் களைப்பெல்லாம் போய், சுற்றி பார்வையை ஒரு ஸ்கேன் செஞ்சா, அட.., சரிசமமாய் இளைய தலைமுறை, யாரைப் பார்த்தாலும் சினேகப் புன்னகை.என் கல்லூரி நினைவுதான்
வந்தது.உற்சாகம் தொற்றிக்கொண்டது.

என்னால்,பெரியவங்கன்னு தவறா புரிந்துக்கொள்ளப்பட்ட ,வயதால் மட்டுமே முதிர்ந்த, 'அனுபவ இளைஞர்களும் ‘,சுறுசுறுப்பாய் உரையாடிக் களித்திருக்க, புதுமையாத்தான் இருந்தது.

அறிமுகப் படலம்,நட்பு விசாரிப்புக்கள் என ஆரம்பத்திலேயே களைக்கட்டிய
சூழ்நிலை.

புதிய அறிமுகங்கள் இயல்பாய் நிறைவேறின . இத்துணை புதிய பெயர்களை நினைவில் இருத்திக் கொள்ள சிரமப்பட்ட வேளையிலும், இதுவரை பெயர்
மட்டுமே அறிந்திருந்த ரசிகவ் ஞானியார் ,அருட்ப்பெருங்கோ, தமிழ்த்தேனி, மல்லிகை அக்கா, ஜே.கே,விஜய் ஆகியோர்களை நேரில் காண முடிந்தது மகிழ்ச்சியளித்தது.

நம்ம ஊர்க்காரர், பாண்டிச்சேரி பிரேம் குமாரும்,நீங்கதானே ரசிகன் ஸ்ரீதர்?ன்னு கேட்டு அறிமுகப் படுத்திக்கொண்டார்.

மஞ்சூர் அண்ணா, நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் நகைச்சுவை உணர்வுடனும், அத்துணை பணிகளுக்கிடையிலும் தவிர்காமல் நம்முடன் அலாவலாவி, அக்கரையுடன் அங்குமிங்கும் நடைப்பயின்று நட்புக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும்வரை எங்கும் முழுமையாக 1 நிமிடம் கூட அமரவில்லை.(அண்ணியாரும் வந்திருந்ததால் ,அவர்முன் அமரவில்லை என்ற கூற்றை நான் ஆமோதிக்க வில்லை என்பதனை நான் இங்கு தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்:P)

மஞ்சூர் அண்ணாவின் மகள் சுட்டிப் பெண் மானஸ்வியும், அப்பாவை போன்றே
சுறுசுறுப்பு.

நானும் சிபி மாம்ஸும் ஒன்றாக அமர, நம்ம சிபி மாம்ஸ், வந்த உடனேயே ஆரம்பிச்சுட்டார் கலாய்ப்பை.மாப்ளை ஸ்னாக்ஸ் இன்னும் வரலியேன்னார்.

எனக்கும் ஒரு டவுட்டு.மாம்ஸ், கோவை சந்திப்புல மட்டும் வடையெல்லாம் தந்தாங்க, நமக்கு அல்வா தந்துட்டாங்களோன்னு ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தப்போ, நம்ம தணிகை வந்து இனிப்பு காரம் காகித தட்டில் வைத்து வழங்கி, வயிற்றில் பால்,டிக்காஷன்ல்லாம் வார்த்தார்.

அதற்கும் சிபி மாம்ஸ்: மாப்ளே இதென்ன சைடிஸ் மொதல்ல குடுத்துட்டாங்க???.

கோக் கொண்டு வர, அதை ஏதோ மில்ட்ரி ரம் பாணியில் ஒரு சிப் சிப்பிட்டு, மிக்ஸிங்க் சரியாயில்லையேங்கறார். மாம்ஸ் , அக்காக்கிட்ட சொல்லனுமா?ன்னு கேட்டதுதான், ஒடனே சோடா அடிக்காமலேயே தெளிவாயிட்டார்.

அதுக்குள்ள நீங்கதான் சிபியான்னு ரெண்டு மூனு பேர் மாம்ஸ்ச விசாரிக்க,அட
மாம்ஸ்க்கு இம்புட்டு மவுஸ்ன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா,இவர பக்கத்துல
ஏதாவது ரூமுல வைச்சு பூட்டி, அவர பாக்க டிக்கெட்ல்லாம் போட்டிருக்கலாமேன்னு கூட ஐடியா வந்துச்சு:P

ரசிகவ் ஞானியாரின் புத்தக வெளியீடு,குழும நண்பரின் மறைவிற்க்கு நினைவு
அஞ்சலி என நிகழ்ச்சிகள் துவங்கின.

முன்னரே நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட, நமக்குத் தெரியாம
போட்டி நடத்திட்டாங்களான்னு கேட்டா,ஏதோ கவிதையாம்ல்ல, அதுல போட்டியாம், சரி சரி நமக்கு சம்பந்தமில்லாத சின்ன மேட்டரு,

அடுத்த முறை ஏதோ கலாய்ப்பு, மொக்கைன்னு நம்ம பிரிவுகள்ல வைச்சா,நாம
கலந்துக்கிடலாம்ன்னு நானும் மாம்ஸும் முடிவு செஞ்சுக்கிட்டோம்.

போட்டில வெற்றிப் பெற்றவங்களுக்கெல்லாம் பரிசு கொடுத்தாங்களே, நாங்க அந்த போட்டிகளுல கலந்துக்காம விட்டுக் கொடுத்ததால தானே எல்லாரும் ஜெயிக்க முடிஞ்சுது?. அதுக்கே நமக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுத்திருக்கனும், அப்படிஏதும் ஏற்பாடு செய்ததாக தெரியாததால்,அதைக் கண்டித்து, வெளிநடப்பு செய்யதீர்மானிச்சோம் (சந்திப்பு கூட்டம் முடிந்த அப்புறம்தான் வெளிநடப்பெல்லாம்.:P ஏன்னா, கையில மிக்சர் மிச்சம் இருந்துச்சே:P)

மேடையில் கர்னாடக சங்கீதம்(சம்ஸ்க்ரிதத்துல பாடறத எதுக்கு கர்னாடகம்ன்னு
சொல்லறாங்க?) பாடிய குழந்தைகளின் குரல்வளம் கவர்ந்திழுத்தது.

பின்னணி இசையில்லாமலேயே, நிஜப் பாடலை காதுகளில் இனிமையாய் தவழவிட்ட இளைஞரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நான் நேரில் காண விரும்பி,இயலாமல் போனது இருவரை, ஒன்று எனது தமிழ்
டீச்சர் கீதா அக்கா, இரண்டு நம்ம சீனா ஐயா.சீனாவும், திருமதி சீனாவும் முன்னமே அலைபேசியிலேயே சொல்லிட்டாங்க,வர இயலவில்லைன்னு.

கடைசி வரை வருவதாகவே சொல்லிய டீச்சரே கிளாஸ் கட் அடிச்சுட்டாங்க. வந்திருந்தா, ஒருவேளை என்னை அங்கேயே இம்போசிஷன்ல்லாம் எழுத சொல்லியிருப்பாங்க:P

சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்து,நண்பர்களிடம் விடைப் பெற்ற போது, ஏதோ
ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு உணர்வுதான் தோன்றியது.அனைவரும்
ஒரு குடும்ப அங்கத்தினராகவே தங்களுக்குள் பழகியது நெகிழ வைத்தது.

எந்த சமூகம் கருத்துப்பரிமாற்றங்களில் சிறந்து விளங்குகிறதோ? அந்த சமுகம்செழித்து வளரும் என்பது நிதர்சனம்.இத்தகைய குழுமங்கள் இணைய தமிழை வளர்பதுமட்டுமன்றி,தன்னையறியாமலேயே அறிவுப் பகிர்தலின் அடுத்த பரிமாணத்திற்க்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

இரவு புதுவை வந்து சேர்ந்த போது,இரவு 2-30 மணி.இந்த நேரத்தில் புதுவை பஸ்
நிலையமே இதுவரை கண்டிராத விதம் வித்தியாசமாய் தோன்றியது,இரவிலும்
சுறுசுறுப்பாய் கடைகள்,வெளியூர் பயணிகள்.

12 மணிநேர தொடரியக்கத்தின் காரணமாக தோன்றிய அசதியை விஞ்சி,ஒரு
மனநிறைவு.சந்திப்பிற்க்கு அழைப்பு விடுத்த மஞ்சூர் அண்ணாவுக்கு நன்றி
சொல்ல வேண்டும்.இனிய அனுபவத்தை அளித்த குழுமநட்புக்களுக்கும்தான்.

.................


அப்பாடா, நம்ம மக்கள்சை ரொம்ப நாள் கொடுமைப்படுத்தாம விட்டதுக்கும்,இன்னும் ரொம்ப நாள் சுதந்திரமா விடப்போவதற்க்கும் சேர்த்து இந்த 'முழு நீள' பதிவிலேயே மொத்தமா படுத்திட்டோம்ல்ல,

என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்

Wednesday, May 14, 2008

வாழ்த்தலாம் .. வாங்க...



என்னோட குட்டி ஃபிரண்டு ,வலையுலக அப்பாவி சிறுமி துர்கா தேவியாருக்கு இன்னிக்கு (15.05.08) ஜனன தினம்.அதாங்க பிறந்த நாள். பில்கேட்ஸ்லருந்து ,பில் கிளிண்டன் வரைக்கும் அம்மணிக்கு போன் செஞ்சு போன் எங்கேஜிடாவே இருக்கு..:P


சரி.. நம்மோட டியர் ஃபிரண்டுக்கு நாமளும் வாழ்த்து சொல்லலாமேன்னு நெனைச்ச போது, அம்மணிக்கிட்டேயிருந்து மிரட்டல்,யார்க்கிட்டயும் சொல்லப்டாது ,இது மலேஷிய ரகசியமாம்ல்ல...
கடைசி நிமிஷம் வரை சண்டைப் போட்டு சம்மதிக்க வைச்சாச்சு:P .ஆனா ஒரு கண்டீசன் .இது எத்தனையாவது பிறந்தநாள்ன்னு மறந்துடனுமாம்ல்ல...


நான் சந்தோஷிக்கும் ,சமயங்களில் பகிர்ந்து கொண்டு
நான் வேதனிக்கும் சமயங்களில் ஆறுதல் சொல்லி,
தோழமையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்
நட்பின் ஆழத்தை உணர்த்தவே அவைகளை உபயோகித்து ,
தனது மகிழ்ச்சிகளையும் ,வேதனைகளையும்,
வேறுபடுத்தாது என்னுடன் பகிர்ந்து கொண்டு,
என் கல்யாணத்துக்கு தான் பெண்பார்ப்பதாக
கலாட்டா செஞ்சுக்கொண்டு
ஒரு முழுமையான தோழமையை எனக்கு கொடுத்த
எனதருமை தோழி துர்காவிற்க்கு
நண்பனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)



Because it is your Birthday,
You get an extra hug,
You also are entitled to,
Another year of love.

Now when God first picked you out,
So many years ago,
He tucked an angel in your heart,
Before He let you go.

So, I see an angel looking back,
When I look into your eyes,
Your Birthday is a gift to me,
Your Birthday is my prize

Of course, I cannot match such gift,
By what I say or do,
But when I wish you Happy Birthday,

I AM THANKING GOD FOR YOU!




WISH YOU MANY MANY RETURNS OF THE DAY.
Happy birthday Durgha



அன்புடன் நண்பன்
ஸ்ரீ...



Thursday, May 8, 2008

பொங்கும் காதலும், பொழியும் கவுஜையும்.:P..



ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.



குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.




உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P





என்னை பூதம்
என திட்டுகிறாயே
எனக்கு
சந்தோஷம்தானடி,
என் செல்ல
காதல் பிசாசே:P







புவியீர்ப்பு சக்தி
பூமிக்கு உண்டு
என தெரியும்.



புவி எதிர்ப்பு சக்தி
உன் கண்களில்
உள்ளதோ?
என் அம்முக்குட்டி


உன் கண்களைக்
கானும்போதெல்லாம்
மனம் மிதக்கத்
துவங்குகிறதே











உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?

ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?









என்னைக்
காதலிக்கச் சொன்னால்
கற்றுக்கொடு
என்கிறாய்.
குருவிற்க்கு
மிஞ்சிய
சிஷ்யன்
ஆகிவிட்டேனோ?.

நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.






மனம்
ஒரு குரங்கு
என்பது உண்மைதான்
உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே






நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.



அன்பே எத்தனை நாள்
என்னை இப்படி
இயந்திரமாய்
வைத்திருக்கப் போகிறாய்?
ஒன்று நீ திருடிய
என் இதயத்தைக் கொடு .
இல்லையென்றால்
நஷ்ட ஈடாய் உன்
இதயத்தைக் கொடு




அடிப்பாவி..
ஏன் இந்த
கொலைவெறி?


காதலிச்சா

கவிஞனாகிடலாமாம்?
என்றேன்
அர்த்தத்தோடு

காதலில்
தோற்றால் கூட
மகா கவிஞனாகலாம்
என்கிறாய்
கிண்டலோடு.









இதென்ன?
எனக்கு பசிக்கவே
இல்லையே?

ஓ.
நீ அங்கு
உணவருந்திவிட்டாயா?
என் குட்டிம்மா..





நேற்று
உன் கனவில்
நான் வந்தேனா?

மறக்காமல் கேற்கிறாயே,
அறியாமல் பேசுகிறாயடி
என் செல்லம் ,
உன் நினைவுகள்
என்னைத் தூங்க
விட்டால்தானே
கனவு
காண்பதற்க்கு!!!










என் மனதை
திட்டம் போட்டு
திருடியவள் நீ.
நான் பொறுப்பில்லாம,
தொலைத்து விட்டதாய
அல்லவா குற்றம்
சாட்டுகிறாய்:P







எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை.
அதிகம் பேசுவது
உன் கண்களா?
இல்லை
உதடுகளா? என்று.









அன்று தடுக்கி
விழுந்தேன்
இன்றும்
எழவே இயலவில்லை.
என்னடா செல்லம்
விழிக்கிறாய்?. .
உன் கண்ணடி பட்டு,
உன்னுள் விழுந்த நான்.









முள்ளை
முள்ளால்தான்
எடுக்க வேண்டுமாம்.

உன் ஒவ்வொரு
கடைசி முத்தத்தால்
என்னுள் எழும்
பாதிப்புக்களை
சரி செய்ய,

தயவு செய்து
இன்னொரு முத்தம்
கொடுத்துவிடு கண்ணே.







தூக்கம் வருதுன்னு
கொஞ்சலாய்
சோம்பல் முறிக்கிறாயே
என் மான்க்குட்டியே
இதைக் கண்டு
மொத்தமாய் என்
தூக்கம் போய் விட்டதை
நீ அறிவாயா?






இது நடக்குமாடா?
கேற்க்கிறாய்.
நான்
உன்னைக் காதலிப்பது
மட்டும் நடக்கும்
என்றா நினைத்திருந்தேன்?









அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.




அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே:P







சகியே ,என்ன செய்கிறாய்?
ஓ.. தான்
தான் அழகு
என இறுமாந்திருந்த
அந்த கிளிக்கு பாடம்
புகட்டிக்கொண்டிருக்கிறாயா?









என் மனம் பறிக்கும் காதல்
,உயிர் வாங்கும் கண்கள்
கனவு கொடுக்கும் உதடுகள்,
எத்துணை ஆயுதங்களுடன்
என்னுடன் போரிடுகிறாய்?.
சந்தோஷமாய் சரணடைகிறேன்
என் தேவதையே.






என் கோபத்தை
உன் ஒற்றை
கொஞ்சலில் எளிதாய்
வீழ்த்துகிறாய்.

உன் ஒற்றைக்
கண்ணீர் துளியின்
வலிமையைத் தாங்கும்
வகையறியாமல்
தவிக்கிறேன் நான்.






புல்லட் புருப் ஆடைகள்
புவியெங்கும் கிடைக்கின்றன.
என் நெஞ்சைத்துளைக்கும்
உன் ஓரப் பார்வையை
தாங்கத் தான்
ஒருகவசம் எங்கு
தேடியும் கிடைக்கலையே








கவிதை எழுதி
கல்லடிபட்ட(:p) காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்:P







பசியில்லாமல் புசிக்கிறேன்.
உணர்வில்லாமல் நடக்கிறேன்.
உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்
அன்பே இன்னுமா புரியவில்லை?
உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..





அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P

Friday, May 2, 2008

ஜொள்ளுக்காதலும் , லொள்ளுக்கவிதையும்





தன்னிச்சையாய்
தொந்தரவு செய்யும்

என் விரல்களுக்காய்,
உன் வெட்கத்தை
காவல் வைத்தாயே.

பாவம்
உன் வெட்கத்திற்க்கு
கொஞ்சம் நேரமாவது
ஓய்வு கொடேன் என்றால்,


கோபத்தை துணைக்கு
அழைக்கிறாய்.

ச்சே,
ஒரு பிரைவசியே
இல்லாம போச்சு.




என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .

மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்.




கலிங்கத்து (காதல்) பரணி
பாடலாமடி உனக்கு.

ஒற்றைக் கண்ணீர் துளியில்
என்னை முழுமையாய்
வீழ்த்தியதற்க்கு.




என்னுடன்
பேசாதே
என்கிறாய்.

எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்

தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?


நானும் நீயும்
வேறல்லன்னு

நீதானே சொன்னாய்?


















மூன்று என்றேன்.
முடியாது ஒன்றுதான்
என்கிறாய்.

மூன்று மணிநேரம் இருக்கே,
ஒரே முத்தம் தானா?
என்றேன்.

இப்போ ஆரம்பித்தாலும்
அந்த ஒரு முத்தத்தை
மூன்று மணி நேரத்தில்
முடித்து விடுவாயா?
இருட்டும் முன்
எனக்கு வீட்டுக்கு
போகனும்ல்ல என்கிறாய்.
கள்ளி.





உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.


அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன.





நீ கவிதை சொன்னாய்
நான் ஏற்றேன்.

நான் காதல் சொன்னால்
ஏனடி முறைக்கிறாய்?




நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?:P




காற்றில் பறக்கும்

உன் ஒற்றை முடி,
என்னை தூங்க
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே





பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது

விரல்காட்டி எச்சரிக்கை.


சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,

செய்
என்கிறாயா?

வேண்டாம்
என்கிறாயா?






விட்டில் பூச்சி,
விளக்கை சுற்றி
அதிலேயே இறந்து போகுமாம்
தெரியுமா? என்கிறாய்.
நான் உன்னை
சுற்றுவது போலவா?
என்றால் ஏனடி
முறைக்கிறாய்?




என் உறக்கமில்லா
இரவுகளின் இருளில்
கனவுகளின் மேல் பயணங்கள்.
முழு நிலவாய் உன் நினைவுகள்.





எனக்கு
ஆடத்தெரியாதே
என்கிறாய்,


இதைச் சொல்லும்போதும் ,
உன் உதடுகளின்
நடனத்தை
என்னவென்று சொல்வது?





உள்ளிருந்தே
என் மனதை

ஆட்டுவிக்கும்
உனக்கு

ஆடத்தெரியாதென்பதை

எப்படி நம்புவது?



கண்ணே!!!
கவிதைக்கு
மட்டுமல்ல

காதலுக்கும்
பொய்
அழகுதான்.


ஏய்
நீ ரொம்ப
அழகாயிருக்கே:P






எனக்கான
இன்றைய முத்தங்களை
பாக்கி வைக்காமல்
கொடுத்துவிடு .

கடன் வட்டி
விகிதம் கூட்டலாம்ன்னு

சிதம்பரம் அறிக்கை
விட்டிருக்கார்.





கடல் அழகு,
நுரை அழகு,
அலை அழகு,
எதுடா ரொம்ப அழகு?
கேற்கிறாய் ,

என்னிய கேட்டா,
இவற்றை நீ
சொல்லும் விதமே

தனி அழகுதானடி
என் செல்லக் குட்டி,
வெல்லக்கட்டி:P:))))).





உன் கண்ணில்
படபடப்பு,
பார்வையில்
தவிப்பு,
என் கண்களை நோக்கிய
ஆழமான பார்வை.
புரிகிறது,
உனக்கு முன்னால்,
என் முதுகுக்கு பின்னால்
அழகாய்
ஒரு ஃபிகர் ஜாக்கிங்.


நிச்சயமாய் பார்க்க மாட்டேன் .
அவள் உன் முதுகை
தாண்டும்வரை...:P




எனக்கு
ஒரு உண்மை
தெரிஞ்சாகனும்.


உன்
ஒற்றை
நெற்றி
முத்தத்தில்


எத்தனை முறை
என்னைக்
கொல்லுவாய்?





கோபப்படும்போது
அழகாய் இருக்கிறாய்ன்னு
சொன்னதற்காக
அடிக்கடி கோபப்படும் நீ,

முத்தம் கொடுக்கும்போது
ரொம்ப ரொம்ப அழகாய்
இருக்கிறாய்ன்னு சொன்னா
மட்டும் முறைப்பதெதற்க்கு?





எல்லாத்தையும்
தப்புத்தப்பா செஞ்சு
வைக்கறதே உனக்கு
வேலையா போச்சு:P

உன்மீதான என்காதலின்
வெளிப்பாடுகளை
ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,

நான் செய்த

சிறு சிறு தவறுகளை
லாங் டேர்ம் மெம்மரிலும்
போட்டு வைத்திருக்கிறாயே?:P



உயிர் வாழ
ஆக்ஸிஜன் தேவை
என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்”
வாழ நிச்சயமாய்
நீ தேவை.


ஏழு மாசமாய் தான்
(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது?:P)
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது?





எனக்கு
கவிதை சொல்லத்
தெரியாது என்கிறாய்.
என்னை திட்டுவதாய்
நினைத்துக்கொண்டு
நீ சொல்பவற்றை
எந்த வகையில் சேர்ப்பது
நான்?







எல்லா கிரகங்களும்

சூரியனை சுற்றுவதன்
காரணம்
விஞ்ஞானம்
சொல்லியிருக்கு.
ஆனா
எல்லா கிரகம்புடிச்ச
பயலுங்கல்லாம்
உன்னை சுற்றி
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.


குளோபல் வார்னிங்கு : ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்னு நெனைச்சு,ஓய்வு சமயத்துல யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன்:P

கூகுள் ரீடர்/சப்ஸ்கிரிப்ஷன் மெயில்ல படிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்துல போட்டுத் தாக்க https://www.blogger.com/comment.g?blogID=46781201932577998&postID=4627355087152970733



என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்