இப்பத்தேன் தெரிஞ்சிது, நாமெல்லாம் பதிவ படிச்சி தான ..பின்னூட்டம் போடுவோம். சில பேரு திரைவிமர்சனம் பாத்துட்டு, படம் பாக்கர கணக்கா,பின்னூட்டத்த ,முன்னூட்டமா படிச்சிட்டுதான் பதிவுக்கு வாராங்கலாமில்ல...
ஏதோ technical பிராபலத்தால என்னோட பதிவோட பின்னூட்டங்கள் தமிழ்க்மணத்துல சேர மாட்டேங்குது.அதனால " மறுமொழியப் பட்ட " பகுதிலயும் பதிவு வரல. நானும் சரி. போனாப் போவுது..பொழச்சி போவட்டும் ,நம்ம மக்கள்ஸ் -ன்னு விட்டுட்டேன்.
இதோ அந்த முன்னூட்ட பிரியர்களுக்காகவும் , நான் ரசித்த சந்த்ர்ப்பங்களை நிரந்தரமா பதிவுல இருந்து நினைவு படுத்திக்கவும் மறுபடியும் ஒரு பின்னூட்ட பதிவு.
மத்தவங்க வீட்டுல ,சமிபத்துல ரசித்தது..
"Manaosai" சந்திரவதனா...அக்காவின் " காதலினால் அல்ல"
இது கதையோ,கவிதையோ அல்ல, அவரோட உண்மை உணர்வுகள் ங்கரதுதான் ஹைலைட்.
என்னிய ரொம்ப ஃபீல் பண்ண வச்சிட்டிங்கல்ல...
கொஞ்சம் தவறினாலும் தப்பர்த்தம் தரக்கூடிய ,ஒரு விஷயத்தை மிக ஜாக்கிரதையா..ஆனா..வீரியம் குறையாம தந்துருக்கிங்க... அருமை.
//
என்னை நீ நினைத்ததையும், என்னை நீ காதலித்ததையும் உணராமலேயே நான் வேறொருவனைக்: காதலித்து, கல்யாணம் செய்து… என்பாட்டில் வாழ்ந்திருக்கிறேனே! சின்ன உணர்த்தல்கள் கூட என்னிடம் இல்லாமற் போனது எப்படி?//
பல சமயங்களுல நானும்,மத்தவங்கள புரிஞ்சிக்காம போயிட்டோமின்னு ,காலங்கடந்து உணர்ந்ததுண்டு.
//
என் மேல் பிரியமான யாருக்காவது //
தான் காதலிக்காத ,ஒருவன் தன்னை காதலித்ததை அறியும் போது "சே.. அவன நல்லவனு தான நெனச்சேன்." ன்னு, தன்னை(போய்) காதலித்ததன் மூலம் ,மன்னிக்க முடியாத கடுங் குற்றம் செஞ்ச போல கமன்ட் அடிச்சி , அந்த காதலுக்கு உண்மையிலேயே தான் அறுகதையில்லைன்னு நிருபிக்கும் பெண்கள் மத்தியில,காதல ஏத்துக்க முடியாத சூழ் நிலையில்யும் ,ஆனா அந்த அன்பை ஏத்துக்க மனசிருப்பது great.
அதானே?.. உன்மையான அன்பு செலுத்த ஆளில்லாத இந்த உலகத்துல,நம்மை நேசிக்கும் ஒருத்தரோட வாழ முடியாட்டாலும் ," அன்பை மாத்திரம் " பகிர்ந்துகிரது தப்பில்லைன்னு தோனுது.நம்ம நேசிக்கும் குழந்தைக் கிட்ட நாம அன்பு செலுத்துறதில்லயா?,.
காதலிக்கத் தெரிந்த அவர்,அவரோட துனைவியையும் காதலிச்சி நிறை வாழ்வு வாழ்ந்திருப்பார்ங்கரது நிச்சயம்.""கனவாகிப்போன காதல்"வெயில்ல இருந்தவனுக்கு,அருகாமை நிழலின் அருமை பற்றி நிச்சயம் புரியும்".
//
தனிமைப் பொழுதுகளில் என் நினைவுகளைச் சீண்டுவதை நான் உணர்கிறேன். அதற்காக எனக்கு உன்மேல் காதல் இருக்கிறது என்று மட்டும் நினைத்து விடாதே. இப்போதும் சொல்கிறேன், சத்தியமாக உன் மேல் எனக்குக் காதல் இல்லை.//
//
அதுக்காக காதல், கத்தரிக்காய் என்று விபரீதமாய் ஏதும் கற்பிதம் பண்ணி விடாதே. நான் இன்னொருத்தன் மனைவி. நீ இன்னொருத்தியின் கணவன். சத்தியமாய் உன் மேல் எனக்குக் காதலில்லை. ஆனாலும் என்னைச் சலனப் படுத்துகிறாய். சற்று சஞ்சலப் படுத்துகிறாய்//
ரொம்ப தெளிவா இருக்கிங்க..உங்க மகன்/மகள் படித்தாலும் குறை சொல்ல முடியாத வெளிப்படை.
உங்க பக்குவம் என்னிய வியக்க வைக்குது .நானாயிருந்தாக்கா... "என்னையும் அறியாமல் எனக்குள் ஏதோ ஒன்று"ன்னு குழம்பிப் போயிருப்பேன்.வாழ்த்துக்கள் [வாழ்த்துரதுக்கு வயசெதுக்கு?.]
//
ஒப்பாரி வைத்து அழுகின்ற அளவுக்கு நான் இல்லை. ஆனாலும் அவ்வப்போதான தேற்றுவார் இன்றிய தனிமைகளில் ஆற்றாமையில் கொட்டி விடுகிறது கண்ணீர்.//
உணர்ச்சிகள் , நமது நியுரான்களில் ஹார்மோன்களின் நடனம் ங்கரத புரிஞ்சிகிட்டு யதர்த்தத்துல ஆறுதலடையருத தவர வேற வழியில்ல...
அன்புடன் ரசிகன்...
..........................................................................................................................................................................
மொத்தத்துல..51 வயசு ஆனாலும்,மதிவதனா அக்கா இப்பவும் மனதளவில் இன்னொரு " அழகி " தான்.
[ அழகி படத்த பாத்த போதும் ,இப்படித்தான் உணர்ந்தேன்."பிரசவிக்காத காதலை"இன்னும் மனதில் சுமந்துக் கொண்டு திரியும் ஆண்கள் நிஜத்தில் பலர் உண்டு.
அவிங்களுக்கு ஒரு அட்வைஸ் , எல்லாரும் குழந்தை நல்லா பிறக்கும்ங்கர நம்பிக்கையில தான் சுமக்குறாங்க..."பிரசவ வலி "க்கு பயப்பட்டீங்கனாக்கா.. ஒரு வேளை ,அந்த "காதல் " ங்குற "குழந்தை"யை நீங்க எப்பவுமே அடையமுடியாம போகலாம்.மொதல்ல..உங்க மேல நம்பிக்கை வையுங்க..உங்க காதல் மேல நம்பிக்கை வையுங்க...சக்ஸஸ் ஆன பின்னாடி மறக்காம எனக்கு பார்ட்டி வையுங்க..என்ன o.k யா?..].
முன்னூட்டம் படிச்சாச்சா..இப்ப கொஞ்சம் அங்க போயி முழு பதிவையும் பாத்துட்டு,இந்த பின்னூட்டத்த மறுபடியும் படிச்சி பாருங்க...ரெண்டு தடவைக்கும் உங்க மனசுல ஏற்படர வித்தியாசம் நல்லாவே புரியும்.
.